Monday

செண்டுமல்லி 77 ஆயிரம் ரூபாய்…குண்டுமல்லி 34 ஆயிரம் ரூபாய்…

 மகத்தான லாபம் கொடுக்கும் மலர்கள் 

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

விவசாயத்தில் ஆண்டு வருமானம், மாத வருமானம், வார வருமானம், தினசரி வருமானம் எனக் கிடைக்குமாறு பிரித்துக் கொண்டு விவசாயம் செய்ய வேண்டும் என்று விவசாய வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இப்படி வருமானம் தரும் பயிர்களில் காய்கறிகள், கீரைகள், பூக்கள் போன்றவை தினசரி வருமானத்துக்கு ஏற்ற பயிர்களாக இருந்தாலும், அவற்றில் முதலிடம் வகிப்பவை பூக்கள்தான்!

Wednesday

சின்ன வெங்காயம் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு 20 டன் மகசூல்


சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் பெற்று லாபம் அடையலாம் என தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சின்ன வெங்காயம் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் வளர்ச்சிக்கு 15 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அவசியம். நன்கு தண்ணீர் தேங்காத வளமான இரு மண்பாங்கான நிலம் சாகுபடிக்கு உகந்ததாகும்.
மண்ணின் கார, அமிலத் தன்மை 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருத்தல் சிறந்தது. மண் ஆழம் குறைவாக இருந்தாலே போதுமானது.

அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு

அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொல்வடை சொல்வார்கள். அதாவது மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால், அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் இதைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதேபோல, மாட்டுச் சாணத்தை மட்க வைத்துதான் மண்ணில் இட வேண்டும். ஆட்டு எருவை அப்படியே மண்ணில் இடலாம்.

Thursday

புத்தர் சாப்பிட்ட ‘காலா நமக்’ பாரம்பரிய அரிசி: ராமநாதபுரத்தில் சாகுபடி செய்யும் விவசாயி

‘காலா நமக்’ நெல் வயலில் விவசாயி தரணி முருகேசன். புத்தர் சாப்பிட்ட காலா நமக்பாரம்பரிய நெல்லை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சாகுபடி செய்து வருகிறார்.


பாரம்பரிய நெல் விதைகள் என்பது பழமையான நெல் விதை ரகங்களைக் குறிக்கும். அன்னமழகி, அறுபதாங்குறுவை, பூங்கார், குழியடிச்சான், குள்ளங்கார், குடவாழை, காட்டுயானம், காட்டுப்பொன்னி, வெள்ளைக்கார், கருப்பு சீரகச்சம்பா, கட்டிச்சம்பா, குருவிக்கார், கம்பஞ்சம்பா, காட்டுச்சம்பா, கருங்குறுவை, சீரகச்சம்பா, கருத்தக்கார், காலா நமக் என இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான பாரம்பரிய நெல் வகைகள்

Wednesday

மணக்கும் மல்லிகை... மயக்கும் வருமானம்


கரும்பு பயிரிட்ட இடத்தில் தற்போது மல்லிகை தான் வருமானம் தந்து காக்கிறதுஎன்கிறார் மதுரை சத்திரப்பட்டி மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மல்லிகை விவசாயி ரெங்கநாதன். பி.எஸ்சி., இயற்பியல் படித்த இவர், மணக்கும் மல்லிகையின் மயக்கும் வருமானம் குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

காசு குவிக்கும் காடை வளர்ப்பு

கிழக்கு ஆசியாவை, குறிப்பாக ஜப்பான் நாட்டை தாயகமாகக் கொண்ட காடை இனம், தற்போது இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படும், அதிகம் பறக்க இயலாத தரைப்பறவை என்றால் அது ‘ஜப்பானிய காடை’தான். இதன் அறிவியல் பெயர் கட்டூர்னிக்ஸ் ஜப்பானிக்கா (Coturnix japonica). 
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டின் அரசப் பரம்பரையினரால் பாடும் பறவைகளாகக் கருதப்பட்டு, வீடுகளில் வளர்க்கப்பட்டவை காடைகள். 1910-ம் ஆண்டுகளில் ஜப்பானிய காடையின் இறைச்சியும் முட்டையும் ஜப்பான் நாட்டின் பிரபலமான உணவாக மாறின. காடை என தமிழில் அழைக்கப்படும் இந்தப் பறவை பீசன்ட் (Pheasant) குடும்பத்தைச் சேர்ந்தது.

இந்தியாவில் இரண்டு வகைக் காடைகள் உண்டு. இந்திய வனப்பகுதிகளில் பெரிதும் காணப்படும் கறுப்பு நிற மார்பை உடைய கட்டூர்னிக்ஸ் கோரமண்டலிகா (Coturnix coromandelica), நமது ஆட்டின் பூர்வ வகை காட்டுப்பறவை ஆகும். 

Saturday

மைசூர் மல்லி: மன்னர்களுக்கு மட்டுமல்ல- நம் நெல் அறிவோம்


கர்நாடக மாநிலத்தில் பாரம்பரிய நெல் ரகமாக பிரசித்தி பெற்ற மைசூர் மல்லி ரகம், தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்த ரகம் தரும் மகசூலைவிட, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இரண்டு மடங்கு மகசூலை தருகிறது.


மைசூர் மல்லி ரகம் மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்ட ஒன்று. சாதம் தும்பைப் பூ போல் வெண்மையாகவும் இருக்கும்.