Pages

Tuesday

தவறாமல் தடுப்பூசி... நோய் வந்தால் பராமரிப்பு..!

 தவறாமல் தடுப்பூசி... நோய் வந்தால் பராமரிப்பு..!

'ஆடு வளர்ப்புக் கொண்டாட்டம்!' என்ற தலைப்பில், பசுமை விகடன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் திருப்பூர் மாவட்ட பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தெற்கு ரோட்டரி சங்கம்- திருப்பூர் ஆகியவை இணைந்து, கடந்த மே 14-ம் தேதி, ரோட்டரி அரங்கில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி மற்றும் அதில் கற்றுக் கொடுக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய செய்தி... கடந்த இரு இதழ்களில் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சி இங்கே இடம் பிடிக்கிறது.
திருப்பூர் மாவட்ட கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியர் எஸ். சித்ராதேவி, ஆடுகளைத் தாக்கும் நோய்களைப் பற்றியும் அவற்றைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் விளக்கினார்.

1,500 சதுரடியில் 50 வகை பயிர்கள்

 1,500 சதுரடியில் 50 வகை பயிர்கள்
மாநகருக்குள்ளே ஓர் அதிசயம் !
மாநகர வாழ்க்கைக்கே உரிய பிரத்யேக பரபரப்பு... தடதட ஓட்டம்... என துள்ளியோடிச் செல்பவர்கள்கூட, சென்னை, புரசைவாக்கத்தில் இருக்கும் அந்த வீட்டைக் கடக்கும்போது சில வினாடிகள் நிதானிக்கிறார்கள். காரணம்... மலர்கள், காய்கள், பழங்கள், செடிகள், கொடிகள் ஆகிவற்றோடு ஒரு குட்டி காடு போல அந்த வீடு காட்சியளிப்பதுதான்! தெருவிலிருக்கும் அந்த அழகான காட்டுக்குச் சொந்தக்காரர்... அமிர்தகுமாரி!
''விவசாயம் செய்யணும்னா... ஏக்கர் கணக்குல எல்லாம் நிலம் தேவையில்லை. ஆர்வமும் முயற்சியும் இருந்தா போதும்'' என்று அழுத்தமாகச் சொல்லியபடி பேச்சைத் துவக்கிய அமிர்தகுமாரி,