Wednesday

நல்ல வருமானம் தரும் கீரை சாகுபடி

கீரை சாகுபடியில் நிலத்தை தயார் செய்வதற்கு நல்ல கவனம் தர வேண்டும். நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து அவைகளில் பாத்திகளை தயார் செய்து கொள்ளலாம். பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி செய்து கொள்ளலாம். கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய தொழு உரமாகும். இந்த எருவினை நன்கு மக்க வைப்பது இரண்டு காரணங்களுக்காக அவசியம் ஆகிறது.
1. எரு நன்கு மக்காமல் இருந்தால் அதில் களைச்செடிகளின் விதைகள் மடியாமல் இருந்து இதனை பாத்தியில் போடும்போது அதிக அளவில் களைச்செடிகள் முளைத்து விடும்.
2. எரு நன்கு மக்காமல் இருப்பின் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு உடனே கிடைக்காது. மேலும் எரு நன்கு மக்கியிருக்கும்போது இதை இடும் இடத்தில் மண் இளக்கமாக இருக்கும். அதோடு எரு இட்ட இடத்தில் வடிகால் வசதி நன்றாக இருக்கும். இயற்கை எருவினை சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக் கொண்டு அதன் மேல் சூரியஒளி படாமல் பாதுகாக்க வேண்டும். எருவினை சமயம் கிடைக்கும்போது கட்டி இல்லாமல் பொடி செய்து குவித்து வைத்து ஓலைகளைக் கொண்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இதோடு வளமான செம்மண் மற்றும் மணல் இவைகளையும் சேகரித்து வைத்துக் கொண்டு பாத்தியில் சாகுபடி செய்யும் சமயம் இவைகளை எருவுடன் கலந்து இடலாம். வசதி கிடைக்கும்போது குளத்து வண்டல் மண்ணினை சேகரித்து இதனுடன் எருவினை நன்கு கலந்து சாகுபடி செய்யும் பாத்திகளுக்கு இடலாம். எருவினை பாத்தியில் போட்டால் மட்டும் போதாது. அவைகளை சாகுபடி செய்யும் நிலங்களுக்கு இட்ட உடனே பாத்தியை நன்கு கொத்தி விட வேண்டும்.
அப்போது தான் எரு நன்கு மண்ணோடு கலந்து கீரை செடிகளை தளதளவென்று வளர வைக்கும். கீரை சாகுபடியில் முடிந்தவரையில் இயற்கை உர உதவியுடன் செய்வது நல்லது. இருப்பினும் தொடர்ந்து ஒரே இடத்தில் கீரை சாகுபடி செய்து வருவதால் இயற்கை உரங்களோடு தேவையான அளவு ரசாயன உரங்களை இடலாம். கீரை சாகுபடி செய்பவர்கள் நிலத்திற்கு தேவையான இயற்கை எருக்களை தாங்களே தயார் செய்கிறார்கள். குடும்ப நபர்களே தங்கள் நிலத்தில் வேலை செய்வதால் வேலைக்கு கூலி ஆட்களை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
கீரை சாகுபடி : சாகுபடி செய்யும் கீரை முளைக்கீரையாக இருக்கலாம். சிறு கீரையாக இருக்கலாம். இவைகளின் வயது 24 நாட்களாக இருக்குமா என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். விதை விதைத்த 21,22,23,24 நாட்களில் கீரைச்செடிகளை வேரோடு பிடுங்கலாம். ஒரு நாளைக்கு 300 கட்டுகள் கீரை கிடைக்கும். எட்டு சென்ட் நிலத்தில் ஒரு கிலோ விதையை விதைக்கலாம். ஒரு கிலோ விதையின் விலை ரூ.1,000. எட்டு சென்ட் பரப்பில் நான்கு அறுவடைகளில் ஒரு நாளைக்கு 300 கட்டுகள் வீதம் 1,200 முளைக்கீரை, அரைக்கீரை கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டின் விலை ரூ.10. கீரை சாகுபடியில் செய்பவர்களின் குடும்பமே நிலத்தில் பணி செய்கின்றது. கீரை சாகுபடி செய்பவர்கள் பாத்திகளை அழகாகப் போட்டு மண்ணை மேடு பள்ளம் இல்லாமல் சமமாக செய்கிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்து கீரை சாகுபடி செய்கின்றனர். அவர்களே கீரைகளின் வேர்களில் மண் ஒட்டாமல் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கட்டுகளை நேர்த்தி செய்கிறார்கள். குடும்ப நபர்களே ஈடுபடுவதால் சாகுபடி செலவு அதிகம் இல்லை. அறுவடையான கீரையை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விற்பனை பிரச்னை எதுவும் இல்லை. சாகுபடி நிலத்திலும், விவசாயி வீட்டிற்கும் நுகர்வோர்கள் வந்து கீரையை விலைக்கு வாங்கி செல்கிறார்கள். ஒரு விவசாயி மூன்று மாதங்கள் முளைக்கீரை, சிறு கீரை சாகுபடி செய்தால் கீரை விதை விலை ரூ.1,000 போக ரூ.20,000 நிச்சயமாக லாபம் எடுக்கலாம். கீரை சாகுபடி செய்பவர்கள் பாடுபட்டு உழைத்து ஊட்டச்சத்துக்கள் மிகுந்த கீரையை நமக்கு அளிக்கிறார்கள்.
முள்ளங்கி சாகுபடி: கீரை சாகுபடி செய்பவர்கள் முள்ளங்கியையும் சாகுபடி செய்கிறார்கள். 5 சென்ட் நிலத்தில் 300 கிலோ மகசூல் கிடைக்கும். முள்ளங்கியின் மதிப்பு ரூ.3,000. சாகுபடி செலவு ரூ.500 போக நிகர லாபமாக ரூ.2,500 கிடைக்கும். இதில் கிடைக்கும் லாபத்தை விவசாயிகள் மறுபடியும் கீரை சாகுபடிக்கு உபயோகிக்கின்றனர்.

- எஸ்.எஸ்.நாகராஜன்

Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20052&ncat=7


தென்னைக்கு நீர் மேலாண்மை

இன்று தமிழ்நாட்டில் தென்னை மகசூல் குறைந்து வருகிறது. விவசாயிகள் தென்னை மரங்களை சரிவர பராமரிப்பதில்லை. பலர் சரிவர உரம் போடாமல், மரங்களை பழுது பார்க்காமல், நீர் மேலாண்மை பற்றி அறியாமல் உள்ளனர். இதுவே மகசூல் குறைவுக்குக் காரணம்.

Tuesday

தமிழகத்தில் வழங்கப்படும் விவசாய படிப்புகள்

 தமிழகத்தில் வழங்கப்படும் விவசாய படிப்புகள்

கோவையில் உள்ள தமிழக விவசாய பல்கலைக்கழகம் இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்று. இந்த பல்லைக்கழகத்தின்கீழ் 10 கல்லூரிகள், 34 விவசாய ஆய்வு நிறுவனங்கள், 15 விவசாய அறிவியல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
விவசாய படிப்பில் சேர அடிப்படை தகுதி:
பிளஸ் 2 தேர்வில் - இயற்பியல்- வேதியியல்- கணிதம் அல்லது தாவரவியல் அல்லது விலங்கியல்- விருப்பப்பாடம் ஆகிய நான்கு பாடங்களில் .சி., மற்றும் பி.சி., மாணவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களும் எம்.பி.சி., மாணவர்கள் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களும் எடுத்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

கோவை விவசாய பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்
- பி.எஸ்சி., அக்ரிகல்சர்
- பி.எஸ்., அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட்
- பி.டெக்., பயோடெக்னாலஜி
- பி.டெக்., ஹார்டிகல்சர்
- பி.டெக்., புட் புராசஸ் டெக்னாலஜி
- பி.டெக்., எனர்ஜி அண்டு என்விரான்மென்டல் இன்ஜினியரிங்
- பி.டெக்., பயோஇன்பர்மேட்டிக்ஸ்
- பி.டெக்., அக்ரிகல்சுரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி

கீழ்க்கண்ட விவசாய கல்லூரிகளில் பி.எஸ்சி., அக்ரிகல்சர் படிப்பு உள்ளது.

- மதுரை விவசாய கல்லூரி
- கிள்ளிகுளம் விவசாய கல்லூரி
- திருச்சி அன்பில் தர்மலிங்கம் விவசாய கல்லூரி
- காரைக்கால் ஜவஹர்லால் நேரு விவசாய கல்லூரி
- பொள்ளாச்சி வானவராயர் விவசாய கல்லூரி
- பெரம்பலூர் தந்தை ரோவர் விவசாய கல்லூரி
- வேலூர் ஆதிபராசக்தி விவசாய கல்லூரி

தமிழகத்தில் உள்ள பிற விவசாய கல்வி நிறுவனங்களும் படிப்புகளும்
- பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி- பி.எஸ்சி., ஹார்டிகல்சர்
- மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி- பி.எஸ்சி., பாரஸ்டரி
- குமுளூர் அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் கல்லூரி - பி.எஸ்சி., அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங்
- மதுரை ஹோம்சயின்ஸ் கல்லூரி - பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ்

- வேலூர் ஆதிபராசக்தி விவசாய கல்லூரி - பி.எஸ்சி., ஹார்டிகல்சர்

Source: http://result.kalvimalar.com/tamil/news-details.asp?id=1348&cat=8

Thursday

"வான்கோழி வளர்த்தால்லாபம் அள்ளலாம்!'

"வான்கோழி வளர்த்தால்லாபம் அள்ளலாம்!'


வான் கோழி வளர்ப்புப் பற்றி கூறும் ராஜாமணி: வான் கோழி வளர்க்க அதிக முதலீடோ, இடவசதியோ தேவையில்லை. ஆர்வமும், உழைப்பும் இருந்தால் போதும். நெளிவு சுளிவுகள் தெரிந்தால், வான் கோழி வளர்ப்பது சுலபம். புதிதாக வான்கோழி வளர்க்க நினைப்பவர்கள், 200 முதல் 250 சதுர அடி இடத்தில், 100 குஞ்சுகளுடன் வளர்க்கத் துவங்கலாம். ஒரு மாதத்திற்குள்ளான குஞ்சுகளில், அதிக அளவில் இறப்பு இருக்கும் என்பதால், கொஞ்சம் வளர்ந்த குஞ்சுகளை வாங்கி வளர்ப்பது நல்லது.

மனதைக் குளிர வைக்கும் மாடித்தோட்டம்!




மனதைக் குளிர வைக்கும் மாடித்தோட்டம்!


மனதைக் குளிர வைக்கும் மாடித்தோட்டம்! - பசுமை விகடன் - 2013-06-10

தோட்டம் வாங்கி, பண்ணை வீடு அமைக்க வேண்டும்’ என்பது பலருடைய ஆசையாக இருக்கும். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பல்வேறு சூழ்நிலைகளால், வீட்டுக்குள்ளேயே தோட்டம் அமைப்பதுதான் சாத்தியமாகி விடுகிறது. அத்தகையோரில் ஒருவர்தான், சென்னையை அடுத்த வானகரம் ராஜீவ் நகர் ஸ்ரீதர். ஆனால், தன்னுடைய இந்த வீட்டுத்தோட்டத்தையே… பண்ணை வீட்டுத் தோட்டத்துக்கு இணையாகப் பராமரிப்பதோடு… அதிலேயே ஏக சந்தோஷத்தையும் அனுபவித்து வருகிறார் ஸ்ரீதர்.

Tuesday

தென்னை... பப்பாளி... வாழை... தென்னையோடு அமைந்திருக்கும் லாப கூட்டணி..

 தென்னை... பப்பாளி... வாழை... தென்னையோடு அமைந்திருக்கும் லாப கூட்டணி..

தென்னங்கன்றுகளை நட்டுவிட்டு, பலன் எடுக்க ஆண்டுக் கணக்கில் காத்திருப்பதெல்லாம் அந்தக்காலம். அரை காணி நிலமாக இருந்தாலும், குறுகிய காலத்தில் விளைச்சல் தரும் ரகங்களை நடுவது... கூடவே ஊடுபயிர், அடுக்குப்பயிர்... என்று சில தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து தொடர் வருமானம் பார்ப்பது... இந்தக் கால விவசாய பாணியாக இருக்கிறது! அந்த வகையில், தென்னைக்கு இடையில், பப்பாளி மற்றும் வாழையை சாகுபடி செய்து அசத்திக் கொண்டிருக்கிறார்,

இயற்கை அதிசயங்கள்: மலைக்க வைக்கும் மெகா மண்புழுக்கள்

மண்புழுக்களுக்கு ‘விவசாயி களின் நண்பன்’ எனும் பட்டப்பெயர் இருப்பது உங்களுக்குத் தெரியும். சரி, மண்புழுக்களின் சராசரி நீளம் எவ்வளவு என்று தெரியுமா? இந்தக் கேள்விக்கான உங்கள் பதில் சென்டிமீட்டர் கணக்கில் இருந்தால், அதை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பது சராசரி மண் புழுக்கள்.
ஆனால், ஒரு மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட மெகா சைஸ் மண்புழுக்கள் இருக்கின்றன, தெரியுமா? முதல் பார்வைக்கு நீள மான பாம்போ என்று நினைக்க வைக்கக்கூடிய அளவுக்கு நீளமாக வும் பருமனாகவும் காட்சி அளிக்கும் மண்புழுக்கள் இருக்கின்றன.