மின்வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி... 80% மானியத்தில் சோலார் பம்ப்செட்டுகள் !
'உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்பார்கள். அதேபோல ஆட்கள் பிரச்னையும், மின்சாரப் பிரச்னையும் விவசாயிகளை வாட்டி வதைக்கின்றன. மேற்படி பிரச்னைகளுக்குத் தீர்வு காணும்விதமாக, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. குறிப்பாக, மின் வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக... மாநிலம் முழுவதும் 80% மானியத்தில் சோலார் (சூரியசக்தி) பம்ப்செட்களை அமைத்துக் கொடுத்து வருகிறது, அரசு