Showing posts with label ரோஜா. Show all posts
Showing posts with label ரோஜா. Show all posts

Wednesday

மாதம் 15 ஆயிரம்...குறைந்த செலவில்...நிறையும் வருமானம்...

பட்டையைக் கிளப்பும் பட்டுரோஜா..!
மாதம் 15 ஆயிரம்...குறைந்த செலவில்...நிறையும் வருமானம்...
'உணவுப் பயிர்களை மட்டும் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கலாம். உணவாக உட்கொள்ளாத மலர்களுக்கு, எதற்காக இயற்கை உரம்?’
-இப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். இத்துடன் 'மலர் சாகுபடிக்கு ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தவில்லையென்றால், மகசூல் கிடைக்காது’ என்கிற நம்பிக்கையும் விவசாயிகள் பலருடைய மனங்களில் அடர்த்தியாக முளைத்துக் கிடக்கிறது. குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் தயவில்தான் மலர் சாகுபடியே நடக்கிறது. இதற்கு நடுவே, அத்தனைப் பேரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக... பட்டுரோஜாவை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்திக் கொண்டிருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி.