Showing posts with label கோழி வளர்ப்பு. Show all posts
Showing posts with label கோழி வளர்ப்பு. Show all posts

Wednesday

கோழி, முயல் வளர்ப்பில் சாதிக்கும் காய்கறி வியாபாரி

விருதுநகரிலிருந்து மல்லாங்கிணர் செல்லும் ரோட்டில் வரலொட்டி அருகே தண்டபாணி என்பவருக்கு சொந்தமான "சுமதி பழத்தோட்டம்' உள்ளது. இங்கு கொய்யா, சப்போட்டா என்ற பலவித பழ பயிர்களை விளைவித்து வருகிறார். விருதுநகர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தும் இவர், கோழி, ஆடு வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். அதாவது தனது தோட்டத்தில் நாட்டு கோழி, கிரிஜா கோழி என 500 கோழிகளை வளர்க்கிறார். இதன் மூலம் தினம் 200 முட்டைகள் கிடைக்கிறது.
ஒரு முட்டை ரூ. 10, கிலோ கோழி ரூ. 300க்கு விற்பனை செய்கிறார். முட்டை, கோழி விற்பனை மூலம் ஆண்டுக்கு மூன்று லட்சம் பெறுகிறார். இவரே பழத்தோட்ட பண்ணை வைத்திருப்பதால் இதற்கான தீவன செலவு குறைவே.
இதே போல் ராஜஸ்தானில் உள்ள மத்திய அரசு பண்ணையில் வாங்கி வரப்பட்ட ஒயிட் ஜெயின்ட் முயல்களும் வளர்க்கிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை குட்டி போடும் பெண் முயல், ஒரு முறைக்கு 10 குட்டி போடுகிறது. இது ஐந்து மாதத்திலே ஆறு கிலோ வரை எடைக்கு வந்துவிடுகிறது. ஒவ்வொரு முயலுக்கும் தனித்தனி கூண்டு அமைத்துள்ளார். இந்த முயலை ஆய்வுக்காக பள்ளி, கல்லூரிக்கு தருகிறார்.
நாட்டு புறாக்களும் இங்கு உண்டு. அடை காக்கும் புறா 21 நாளில் குஞ்சு பொறித்து விடும். அடுத்த 21 நாளில் பறக்க தொடங்கும் குஞ்சு புறா, 75 வது நாளில் முட்டையிட தொடங்கி விடும். குஞ்சு பொறித்த தாய் புறா, அடுத்த ஒரு வாரத்திலே மீண்டும் முட்டையிடும். ஒரு ஜோடி புறா ரூ. 250, குஞ்சு ரூ. 150 க்கு விற்கிறேன் என்கிறார் தண்டபாணி.

தொடர்புக்கு 93674 11815.

Source: Dinamalar

Saturday

கோழி வளர்ப்பு

கோழி வளர்ப்பு
பொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
  • கூண்டு முறை / கொட்டகை முறை
  • ஆழ்கூள முறை
கொட்டகை முறை
கோழி ஒன்றுக்கு 0.6-0.75 சதுர அஎ அளவு வீதம் இருக்கும்படி கோழிக் கொட்டகை அமைக்கவேண்டும். இம்முறைதான் நன்கு பலன் தரக்கூடிய கோழி வளர்ப்பு முறையாகும். கூரை ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கொண்டு அமைக்கலாம். சிறு சிறு அறைகளாகத்  தடுத்து ஓர் அறைக்கு 300 குஞ்சுகளுக்கு மிகாமல் வளர்க்கலாம்.

Thursday

கோழி பண்ணையில் கொழிக்குது பணம்!

கோழி பண்ணையில் கொழிக்குது பணம்!
tamil news, tamil koli valarppu, nattu koli valarppu


சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை.  மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேப்பங்கொட்டை பாளையத்தில் கிருத்திகா கோழி பண்ணை நடத்தி வரும் வெங்கடாசலம். அவர் கூறியதாவது: