மனதைக் குளிர வைக்கும் மாடித்தோட்டம்!
தோட்டம் வாங்கி, பண்ணை வீடு அமைக்க வேண்டும்’ என்பது பலருடைய ஆசையாக இருக்கும். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பல்வேறு சூழ்நிலைகளால், வீட்டுக்குள்ளேயே தோட்டம் அமைப்பதுதான் சாத்தியமாகி விடுகிறது. அத்தகையோரில் ஒருவர்தான், சென்னையை அடுத்த வானகரம் ராஜீவ் நகர் ஸ்ரீதர். ஆனால், தன்னுடைய இந்த வீட்டுத்தோட்டத்தையே… பண்ணை வீட்டுத் தோட்டத்துக்கு இணையாகப் பராமரிப்பதோடு… அதிலேயே ஏக சந்தோஷத்தையும் அனுபவித்து வருகிறார் ஸ்ரீதர்.