70 சென்ட்... 3 மாதம்... 46 ஆயிரம்...
முத்தான வருமானம் தரும், சத்தான சர்க்கரைவள்ளிக் கிழங்கு..!
தண்ணீர் தட்டுப்பாடு, வேலையாட்கள் தட்டுப்பாடு... எனப் பல பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு ஏற்ற பயிர், சர்க்கரைவள்ளிக் கிழங்குதான். அந்த சூட்சமத்தை அறிந்த பலர், வெயில் கொளுத்தும் கோடையிலும் வளமான வருமானத்தை ஈட்டித்தரும் சர்க்கரைவள்ளியை விடாமல் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருவண்ணாமலை மாவட்டம், சம்மந்தனூர், குப்புசாமி!
நிலத்தில், கிழங்கு அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த குப்புசாமியைச் சந்தித்தபோது, ''எங்க அப்பாவுக்கு நாலு பொண்ணுக, நான் ஒருத்தன்தான் பையன். குடும்ப சூழ்நிலை காரணமா எட்டாவதுக்கு மேல படிக்க வெக்கல. அப்ப இருந்தே அப்பாவுக்கு ஒத்தாசையா விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அப்பறம் தனியா விவசாயம் பாத்தப்போ...