Showing posts with label நாற்றுப் பண்ணை. Show all posts
Showing posts with label நாற்றுப் பண்ணை. Show all posts

Wednesday

ஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்: கால் கிலோ விதையில் நடவு நட்ட பெருமாளின் சாதனை

ஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்: கால் கிலோ விதையில் நடவு நட்ட பெருமாளின் சாதனை

வி. தேவதாசன்
ஆர். பெருமாள்

ஆர். பெருமாள்
ஒரு ஏக்கரில் நெல் நடவு செய்ய கால் கிலோ விதை நெல் மட்டும் பயன்படுத்தும் விவசாயி ஆர். பெருமாள் பற்றிய கட்டுரை கடந்த ஜூன் 25-ம் தேதி `நிலமும் வளமும்’ பகுதியில் வெளியானது. `தி இந்து’ தமிழ் நாளேட்டை தொடர்ந்து மேலும் சில பத்திரிகைகளில் கால் கிலோ விதை நெல்லை மட்டும் பயன்படுத்தும் பெருமாளின் சாகுபடி தொழில்நுட்பம் தொடர் பான செய்திகள் வெளிவந்தன.

நாற்றுப் பண்ணை : குறைந்த விலை... நிறைந்த தரம்...

நாற்றுப் பண்ணை : குறைந்த விலை... நிறைந்த தரம்...
அசத்தும் அரசுப் பண்ணை!

விதைப்பைவிட, நடவு முறையைத்தான் பெரும்பாலான பயிர்களுக்கும் விவசாயிகள் தேர்ந்தெடுக்கிறார்கள். விதைப்பு முறையில் அனைத்து விதைகளுமே முளைத்து வந்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதோடு, முளைத்து வருவதற்கும் நாட்கள் பிடிக்கும். இதுபோன்ற காரணங்கள்தான், விவசாயிகளை நடவு முறை நோக்கி ஈர்க்கிறது. குறிப்பாக, மரம் வளர்ப்பில் அனைவருமே நாற்றுகள் அல்லது கன்றுகளைத்தான் நடவு செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காக, குறைந்த விலையில் தரமான கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது, தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை.