Showing posts with label மல்பெரி. Show all posts
Showing posts with label மல்பெரி. Show all posts

Sunday

மல்பெரி பயிரிடுங்கள்... மாத வருமானம் பெற்றிடுங்கள்!’ பட்டு விவசாயத்துக்கு

மல்பெரி பயிரிடுங்கள்... மாத வருமானம் பெற்றிடுங்கள்!’
பட்டு விவசாயத்துக்கு
 விவசாயிகளுக்கு அதிக வருமானத்தைக் கொடுத்து வரும் விவசாய உபதொழில்களில் முக்கியமானது, 'பட்டுக்கூடு’ உற்பத்தி. இந்தியாவில், பட்டு நூலுக்கு எப்போதுமே தேவை இருந்து கொண்டே இருப்பதால்... தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை, விவசாயிகளை அதிக அளவில் இத்தொழிலுக்கு இழுத்து வருகிறது. விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு மானியங்களும் வழங்கப்படுகின்றன.  
இதுபற்றி துறை சார்ந்த வல்லுநர்கள் பகிரும் தகவல்கள், இங்கே இடம்பிடிக்கின்றன.
பஞ்சாயத்துக்கு ஒரு பட்டு விவசாயி!

Friday

25 சென்ட்... 5 மாதம்...1 லட்சம் !...மல்பெரி


25 சென்ட்... 5 மாதம்...1 லட்சம் !
மாற்றுப் பயிராக வந்த மல்பெரி நாற்று உற்பத்தி...
'மாற்றம் ஒன்றே மாறாதது’ இந்தத் தத்துவத்துக்கு ஏற்ப... வழக்கமாகச் செய்யும் ஒரே பயிரைத் தொடர்ந்து செய்யாமல், மாற்றுப் பயிர்களைத் துணிந்து சாகுபடி செய்தால்தான் லாபம் எடுக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள், தமிழக விவசாயிகள். அந்த வகையில், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வட்டம், கெட்டிச்செவியூர் அடுத்துள்ள காளியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி-மகேஸ்வரி தம்பதி, மாற்றுப் பயிராக மல்பெரி நாற்றுக்களை உற்பத்தி செய்து சிறப்பான வருமானம் பார்க்கிறார்கள்.  
'தளதள’வென பச்சை இலைகள் தலையாட்டும் மல்பெரி தோட்டத்தில், தெளிப்புநீர்க் கருவிகள் மழை போல் தண்ணீரைத் தெளித்துக் கொண்டிருக்க, உழைத்த களைப்பு நீங்க, மரத்தடியில் அமர்ந்திருந்த நேரத்தில் தம்பதியைச் சந்தித்தோம்!