, பொள்ளாச்சி வட்டம், வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராம பட்டினம்
பஞ்சாயத்து, ஜலந்தூர்
பிரிவில் வசிக்கும் விவசாயி செல்வராஜ். இவர் தனது தோட்டத்தில் மேற்கூறிய அளவில்
குளம் வெட்டியுள்ளார்.
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? - மாற்கு 8:36
Tuesday
நிலத்தடி நீர் காப்போம்
Saturday
மிரளவைத்த கருடன் சம்பா
பாரம்பரிய நெல் வகைகளில் எல்லாத் தரப்பினரும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகை கருடன் சம்பா. கருடன் கழுகுக்குக் கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் இருக்கும். வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடியது.
சாப்பாட்டுக்கும், பலகாரங்களுக்கும் ஏற்ற ரகமாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் மணப்பாறை முறுக்கு இந்த அரிசியைக் கொண்டு செய்யப்பட்டுப் பிரபலமடைந்ததாகத் தகவல் உள்ளது. சீக்கிரமே வேகக்கூடிய ரகமாக இருப்பதால் பாரம்பரிய அரிசி வகைகளில் இல்லத்தரசிகளிடம் முதன்மை பெற்றது கருடன் சம்பா.
சொட்டு நீர்ப் பாசனத்தில் செழிக்கும் வாழை - விருது வென்ற புதுவை விவசாயி
புதுச்சேரி பண்டசோழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து வெங்கடபதி (47). பி.எஸ்சி. கணிதப் பட்டதாரி. கடந்த பத்து ஆண்டுகளாக வாழை விவசாயம் செய்து வருகிறார்.
இயற்கை விவசாயம்: எழுச்சி தந்த புதிய அலை
இந்த வேளாண்மை, இயற்கையின் போக்கில் மரபு வழியாக நடந்தது. இந்த மரபு வேளாண்மை அல்லது பாரம்பரிய வேளாண்மை வேதி உரங்கள் அல்லது ரசாயன உரங்களின் வருகைக்கு முன்பு நடந்தவை.
இன்றைய ‘இயற்கை வழி வேளாண்மை' என்ற சொல்லாடல் கலப்பின விதைகள், வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘பசுமைப் புரட்சி' தொழில்நுட்ப முறைக்கு மாற்றான, அதே போன்றதொரு நுட்பமான வேளாண் தொழில்நுட்ப முறைகளைச் சுட்டும் சொல்லாக உள்ளது.
கொத்தமல்லி சாகுபடி அமோகம் : ஐ.டி.யைத் துறந்த விவசாயி சாதனை
தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், கே.கே. பட்டி, நாராயணதேவன்பட்டி ஆகிய பகுதிகளில் திராட்சை, தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் நோய் தாக்குதல், விலை குறைவு போன்ற பல பிரச்சினைகளால் விவசாயிகள் மாற்று விவசாயத்தில் இறங்கிவிட்டனர்.
இதற்கிடையில், கம்பத்தைச் சேர்ந்த பட்டதாரியான கே.பி.ராஜேஸ்வரன் கம்பம் அருகே கே.கே.பட்டியில் கொத்தமல்லி சாகுபடியில் சாதனை படைத்து மற்ற விவசாயிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
இனிக்கும் சிவப்புக் கவுணி
அற்புத ரகம்
அது மட்டுமில்லாமல் சுவையான பலகாரங்கள் செய்ய உதவும் இந்த நெல் வகை, சிவகங்கை மாவட்டத்தைத் தாயகமாகக் கொண்டது. தமிழகம் முழுவதும் மானாவாரி பகுதிகளில் பயிரிடப்படுகிறது. செம்மண் பகுதியிலும் அதிக மகசூல் தரக்கூடியது. நேரடி விதைப்புக்கு ஏற்ற இந்த ரகம், 140 நாள் வயதுடையது. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளர்வதுடன் களைகளைக் கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது.
தினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி
புரதச் சத்து மிகுந்த ஸ்பைருலினாவில் 15 வகைகள் உள்ளன. தமிழகச் சூழலுக்கு ஏற்றவை ஸ்பைருலினா மேக்ஸிமா, ஸ்பைருலினா பிளான்டெனிஸ். இயந்திரங்களைக் கொண்டு பெரு நிறுவனங்கள் மூலம் வளர்ப்பதற்கு மேக்ஸிமா வகை ஏற்றது. சிறு தொழில் மூலம் வளர்ப்பதற்கு பிளான்டெனிஸ் வகை உகந்தது.
ஊட்டம் அதிகம்
ஸ்பைருலினாவை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பிரதான உணவாக எடுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது. பாசியை உற்பத்தி செய்து பல வழிகளில் விற்பனை செய்யலாம். கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும். இதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாகவும் மாற்றலாம், தாய்ப்பாசியாகவும் விற்கலாம்.
Subscribe to:
Posts (Atom)