Monday

வாழையை நடவு செய்தால் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அறுவடை

வாழையை நடவு செய்தால் ஒவ்வொரு மாதமும் அறுவடை

இதுவரை கரும்பு சாகுபடி பற்றி முழுமையாகப் பார்த்தோம். அடுத்து ஜீரோ பட்ஜெட் முறையில் வாழை சாகுபடி பற்றிப் பார்ப்போம். 

உலகம் முழுவதும் பயிரிடப்படும் பிரபலமான பயிர் வாழை. ஆப்பிரிக்காதான் வாழையின் பிறப்பிடம். அதை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

நம் நாட்டில் பலவிதமான வேளாண் பருவநிலை நிலவுவதால், ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தப் பருவத்துக்கேற்ற வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பூவன், செவ்வாழை, ரொபஸ்டா, மொந்தன், கதலி, ரஸ்தாளி, விருப்பாச்சி பச்சைநாடன், நேந்திரம், கற்பூரவல்லி...

Sunday

பட்டையைக் கிளப்பும் பாரம்பர்ய 'சொர்ண மசூரி'

பட்டையைக் கிளப்பும் பாரம்பர்ய 'சொர்ண மசூரி'

மகசூல்
கு.ராமகிருஷ்ணன்
தொழுவுரம், தண்ணீர் மட்டும் போதும்...
அரை ஏக்கரில் 18 ஆயிரம் ரூபாய்...
பட்டையைக் கிளப்பும் பாரம்பர்ய 'சொர்ண மசூரி'
நெல் சாகுபடியில் இடுபொருட்செலவுகள் ஒரு தொல்லை என்றால், பேய்ந்தும், காய்ந்தும் கெடுக்கும் மழை மற்றொரு தொல்லை. இந்தப் பிரச்னைகள் எல்லாம், வீரிய ரக நெல்லை பயிரிடுபவர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது.

முத்தான லாபம் தரும் முள்ளங்கி !

முத்தான லாபம் தரும் முள்ளங்கி !

மகசூல்
எஸ்.ராஜாசெல்லம்
முத்தான லாபம் தரும் முள்ளங்கி !
இயற்கையில் ரூ.22,000....ரசாயனத்தில் ரூ.17,000....
முள்ளங்கித் தொழிற்சாலையாகவே மாறிக் கிடக்கிறது தர்மபுரி மாவட்ட கிராமங்களான சின்னமிட்ட ஹள்ளி மற்றும் பெரியமிட்ட ஹள்ளி. தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் காரிமங்கலம் அருகே உள்ள இந்த கிராமங்களில் கிட்டத்தட்ட 500 ஏக்கரில் முள்ளங்கி சாகுபடி நடக்கிறது. ஆண்டு முழுவதும் இங்கு முள்ளங்கி விளைவதால், வெளியூர் காய்கறி சந்தைகளில் இந்தக் கிராமங்களின் முள்ளங்கிக்கு ஏக கிராக்கி.

Saturday

தோட்டங்களில் தேனீ வளர்ப்பு...

தோட்டங்களில் தேனீ வளர்ப்பு...

மகசூல்
என்.சுவாமிநாதன்
தோட்டங்களில் தேனீ வளர்ப்பு ......
கூடும் விளைச்சல்.....'கொட்டும்' வருமானம் !


கன்னியாகுமரி மாவட்டம் என்றாலே... தென்னை, வாழை மற்றும் ரப்பர் ஆகியவைதான் கண்முன்னே வந்து நிற்கும். சாதகமான காலநிலை இங்கே நிலவுவதுதான் இதற்குக் காரணம்.
முக்கியப் பயிர்கள் பசுமைக் கட்டி கைகொடுப்பது ஒரு பக்கம் இருக்க... ஏதாவது ஒரு ஊடுபயிர் சாகுபடி செய்வதையும் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

சிறப்பான வருமானம் தரும் சினைமாடு வளர்ப்பு !

சிறப்பான வருமானம் தரும் சினைமாடு வளர்ப்பு !

கால்நடை
காசி.வேம்பையன்
கறக்காமலே காசு...
சிறப்பான வருமானம் தரும் சினைமாடு வளர்ப்பு !


இக்கட்டான சூழ்நிலைகளில் விவசாயம் ஏமாற்றும் போதெல்லாம், பலருக்கும் கைகொடுத்துத் தூக்கி நிறுத்துவது... 'கறவைமாடு வளர்ப்பு'தான் என்பார்கள். ஆனால், 'பாலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை... செலவைக் கட்டுப்படுத்த முடியவில்லை' என்று புலம்புபவர்கள்தான் அனேகம்.

Sunday

பணம் கொட்டும் "ஜமுனாபாரி' ஆடு வளர்ப்பு;ஆட்டின் விலை ரூ.50 ஆயிரம்

பாலமேடு: பணம் கொட்டும் "ஜமுனாபாரி' ஆடு வளர்ப்பில் மதுரை விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். 80 கிலோ எடையுள்ள ஆட்டின் அதிகபட்ச விலை 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஜமுனாபாரி ஆட்டின் காதின் நீளம் ஒரு அடி; 10 இஞ்ச் அகலம். அழகான தோற்றம் கொண்டது. ஆண், ஆடுகள் ஐந்தடி உயரமும், பெண், ஆடுகள் நான்கடி உயரமும் சராசரியாக வளரக்கூடியது.

Wednesday

காளான் உற்பத்தி

காளான் உற்பத்தி - kaalaan urpathi & valarppu
காளான் உற்பத்தி செய்வது என்பது ஒரு கடினமான வேலையில்லை. காளான் உற்பத்தி செய்ய ஓரளவுக்கு படித்திருந்தாலே போதும். வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம். ஆனால் கோடை காலத்தில் 30 -40% மகசூல் குறைவாக கிடைக்கும்.
சிப்பிக்காளான் கடல் சிப்பியின் தோற்றமுடையதாய் இருப்பதால்தான் இவற்றுக்கு இந்த பெயர் வந்தது. பொதுவாக சிப்பிக் காளானில்