Thursday

இனிக்கும் இயற்கைக் கத்திரி

இனிக்கும் இயற்கைக் கத்திரி

மகசூல்
ஜி.பழனிச்சாமி
இனிக்கும் இயற்கைக் கத்திரி
35 சென்ட்... 15 மாதங்கள்... '1 லட்சம்...

'தாறுமாறாகிக் கிடக்கும் பருவநிலை மாறுபாட்டைச் சீர்படுத்துவதற்கு இயற்கை விவசாயம்தான் தீர்வு' என்பது சூழல் ஆர்வலர்கள் பலரது குரலாக ஒலிக்கிறது.
'இயற்கையைக் காப்பது ஒருபுறம் இருக்கட்டும். விவசாயிகளைப் பொருளாதார ரீதியாகக் காப்பாற்றி வருவதும் இயற்கை விவசாயம்தான்' என்கிறார்கள், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் ஸ்டீபன் மற்றும் விமல்.

Wednesday

இயற்கைப் பருத்தி தரும் இனிய வருமானம்..!

இயற்கைப் பருத்தி தரும் இனிய வருமானம்..!

மகசூல்
ஆர்.குமரேசன்
காய்ப்புழுவை விரட்ட கலப்புப் பயிர்...
இயற்கைப் பருத்தி தரும் இனிய வருமானம்..!


கூட்டமைப்பு வர்த்தகத்தில் கூடுதல் லாபம் !
காய்ப்புழு... பருத்தி விவசாயிகளைக் குலை நடுங்க வைக்கும் வில்லன். இந்தக் காய்ப்புழுக்கள், மகசூல் வரும் நேரத்தில் காயைச் சேதப்படுத்தி மகசூலுக்கு மங்கலம் பாடிவிடும். இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பி.டி. தொழில்நுட்பம் காய்ப்புழுக்களுக்கு எதிராக பருத்தியில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், சமீபத்தில் பி.டி. பருத்தியிலும் தங்களது தாக்குதலைத் தொடுத்திருக்கும் காய்ப்புழுக்களைக் கண்டு விவசாயிகள் மட்டுமல்லாமல் விஞ்ஞானிகளே கதிகலங்கிப் போயுள்ளனர்.

விறு விறு லாபம் தரும் விரால் மீன்

விறு விறு லாபம் தரும் விரால் மீன்

மகசூல்
என்.சுவாமிநாதன்
6 சென்ட் குளம்... 10 மாதம்... 30 ஆயிரம்!

விறு விறு லாபம் தரும் விரால் மீன்

ஏக்கர் கணக்கில் குளமும் செழிப்பான தண்ணீர் வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும்' என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து. இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், "ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும்... விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்'' என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர் ஹனீபா.

Monday

இனிக்கும் இயற்கை நெல் சாகுபடி!

இனிக்கும் இயற்கை நெல் சாகுபடி!

மகசூல்
என்.சுவாமிநாதன்
இனிக்கும் இயற்கை நெல் சாகுபடி!
அள்ளிக் கொடுக்கும் அம்பை-16...
வருமானம் பெருக்கும் நாட்டுச் சம்பா...
பளிச்... பளிச்...
குறைவானத் தண்ணீரே போதும்.
உரச்செலவே இல்லை.
தண்ணீர்த் தட்டுப்பாடு, ஆட்கள் பற்றாக்குறை, கட்டுப்படியான விலை கிடைக்காமை, சிறப்புப் பொருளாதார மண்டலம், நாற்கரச் சாலை எனப் பல்வேறு பிரச்னைகளால் குமரி மாவட்டத்தில் நெல் பயிரிடும் பரப்பு குறைந்து கொண்டே போனாலும், விடாப் பிடியாக நெல்லைப் பயிரிடும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக தொடர்ந்து நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், செல்வகுமார்.

வாழையை நடவு செய்தால் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அறுவடை

வாழையை நடவு செய்தால் ஒவ்வொரு மாதமும் அறுவடை

இதுவரை கரும்பு சாகுபடி பற்றி முழுமையாகப் பார்த்தோம். அடுத்து ஜீரோ பட்ஜெட் முறையில் வாழை சாகுபடி பற்றிப் பார்ப்போம். 

உலகம் முழுவதும் பயிரிடப்படும் பிரபலமான பயிர் வாழை. ஆப்பிரிக்காதான் வாழையின் பிறப்பிடம். அதை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

நம் நாட்டில் பலவிதமான வேளாண் பருவநிலை நிலவுவதால், ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தப் பருவத்துக்கேற்ற வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பூவன், செவ்வாழை, ரொபஸ்டா, மொந்தன், கதலி, ரஸ்தாளி, விருப்பாச்சி பச்சைநாடன், நேந்திரம், கற்பூரவல்லி...

Sunday

பட்டையைக் கிளப்பும் பாரம்பர்ய 'சொர்ண மசூரி'

பட்டையைக் கிளப்பும் பாரம்பர்ய 'சொர்ண மசூரி'

மகசூல்
கு.ராமகிருஷ்ணன்
தொழுவுரம், தண்ணீர் மட்டும் போதும்...
அரை ஏக்கரில் 18 ஆயிரம் ரூபாய்...
பட்டையைக் கிளப்பும் பாரம்பர்ய 'சொர்ண மசூரி'
நெல் சாகுபடியில் இடுபொருட்செலவுகள் ஒரு தொல்லை என்றால், பேய்ந்தும், காய்ந்தும் கெடுக்கும் மழை மற்றொரு தொல்லை. இந்தப் பிரச்னைகள் எல்லாம், வீரிய ரக நெல்லை பயிரிடுபவர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது.

முத்தான லாபம் தரும் முள்ளங்கி !

முத்தான லாபம் தரும் முள்ளங்கி !

மகசூல்
எஸ்.ராஜாசெல்லம்
முத்தான லாபம் தரும் முள்ளங்கி !
இயற்கையில் ரூ.22,000....ரசாயனத்தில் ரூ.17,000....
முள்ளங்கித் தொழிற்சாலையாகவே மாறிக் கிடக்கிறது தர்மபுரி மாவட்ட கிராமங்களான சின்னமிட்ட ஹள்ளி மற்றும் பெரியமிட்ட ஹள்ளி. தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் காரிமங்கலம் அருகே உள்ள இந்த கிராமங்களில் கிட்டத்தட்ட 500 ஏக்கரில் முள்ளங்கி சாகுபடி நடக்கிறது. ஆண்டு முழுவதும் இங்கு முள்ளங்கி விளைவதால், வெளியூர் காய்கறி சந்தைகளில் இந்தக் கிராமங்களின் முள்ளங்கிக்கு ஏக கிராக்கி.