மூலிகை மருத்துவம்

மூலிகை தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் 70-80 விழுக்காடு, குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் முதன்மை மருத்துவமாகப் பயன்பாட்டில் உள்ளது. இதற்குக் காரணமாகக் கருதப்படுவது இதில் பக்க விளைவுகள் கிடையாது, விலை குறைந்தது, தான் வசிக்கும் இடத்திலேயே எளிதில் கிடைக்கக்கூடியது ஆகியவையாகும். உலகில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு மற்ற வகை மருந்துகளின் பயன்பாடுகளைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக உலக சுகாதாரக் கழகம் கணக்கிட்டுள்ளது. இன்றைய ஆங்கில மருத்துவம்கூட கடந்த நூற்றாண்டுக்கு முன்னர் மூலிகையை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பமாகி உள்ளது. எ.கா.: ஆஸ்பிரின், வில்லோ பட்டையிலிருந்தும், டிஜாக்சின் பாக்ஸ் கிளவ் என்ற கையுறை போன்ற செடியிலிருந்தும், குயினைன், சின்கோனா பட்டையிலிருந்தும், மார்பியா கசகசா செடியின் காயிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.
 
 

No comments: