Wednesday

தீவிரமுறை கால்நடை வளர்ப்பில் வேலிமசால் - ஓர் பார்வை

தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இப்பயிர் நெட்டுக்குத்தாகவும், அடர்த்தியாகவும் வளரும் ஒரு பல்லாண்டு பயிராகும். இப்பயிர் வெட்ட வெட்ட மறுபடியும் தளிர்த்துச் சுவையான பசுந்தீவனத்தைக் கொடுக்கும். இப்பயிர் குதிரைமசாலைப் போல் குளிர்பிரதேச பயிராக இல்லாமல் எல்லாப் பிரதேசங்களிலும் பயிரிட ஏற்றது.

Tuesday

1,500 சதுர அடியில் ஆண்டு முழுக்க காய்கறி… மிரட்டும் மாடித்தோட்ட வெள்ளாமை!

1,500 சதுர அடியில் ஆண்டு முழுக்க காய்கறி… மிரட்டும் மாடித்தோட்ட வெள்ளாமை!

‘எங்களுக்கும் வயல்வெளிகளில் உழைக்கத்தான் ஆசை. ஆனால், எங்கே உழைப்பது என்றுதான் தெரியவில்லை’ நிலமற்றவர்களின் இந்தக் குரல், சிற்றிதழ் ஒன்றில் பதிவாகி இருந்தது. இதேபோல… ‘எங்களுக்கும் விவசாயம் செய்ய ஆசைதான்… ஆனால், எங்கே போய் விதைப்பது?’ என்கிற ஆதங்கம், விவசாய ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளிடம் நிறையவே இருக்கிறது. இவர் களுக்கெல்லாம் வழிகாட்டுவது போல… வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சமையலறைத் தோட்டம் என்று பலரும் காய்கறி உற்பத்தியில் கலக்கிக் கொண்டுள்ளனர்!

மாடி தோட்டம்

“எனக்குத் தோட்டம் வைப்பது ரொம்ப பிடிக்கும். எனக்குப் பிடித்த விஷயத்தையே சமூகத்துக்கும் பயனுள்ள விஷயமாக அமைத்துக்கொள்ள நினைத்தேன். அதன் வெளிப்பாடுதான் இந்த மாடித் தோட்டம். ரசாயனப் பூச்சிக்கொல்லியோ, உரமோ இல்லாத அக்மார்க் இயற்கை தோட்டம் இது" என்கிறார் பாக்கியலக்ஷ்மி கோதண்டராமன்.
மதுரையை அடுத்த பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், ஸ்ரீநாகலக்ஷ்மி அம்மாள் அறிவியல் கல்லூரியின் பொருளாளர்.
கிராமத்தில் இடத்துக்கா பஞ்சம்? பின் எதற்கு மாடித் தோட்டம் என்ற கேள்வி எழலாம். அதற்கு விடையாகத்

Wednesday

ஒருங்கிணைந்த பண்ணைய முறையே வளங்குன்றா வேளாண்மைக்கு உதவும்

தோட்டக்கலைப்பயிர் சாகுபடியுடன் ஒருங்கிணைந்த பண்ணைய உத்தி தான் லாபம் தரும். இதற்கு தோட்டக்கலைப்பயிர் சாகுபடியுடன் உப தொழில்களாக மண்புழு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, ஆடு, மாடு, முயல், பன்றி, பட்டுப்புழு, வாத்து, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண் காடுகள், சாண எரிவாயு கலன், சூரிய ஒளி ஆதாரங்கள்

சப்போட்டா சாகுபடி செய்யுங்கள்

இன்றைய பசுமையான மரம் நாளைய பசுமையான எதிர்காலம்

வீட்டுத் தோட்டத்தில் நடும் மரம் அலங்காரமாகவும், இலைகள் கொட்டாமலும் வருடம் முழுவதும் பசுமையாக இருக்கும் மரமாகவும், அடிக்கடி எரு, ரசாயன உரம் மற்றும் விஷப்பூச்சி மருந்துகள் உபயோகிக்கும் தேவையில்லாத மரமாகவும், கடும் கோடையில் நிழல் கொடுத்து வெயிலின் கொடுமையை குறைத்து குளிர்ச்சியின் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் மரமாகவும்

Monday

கெண்டை மீன் வளர்ப்பு

கெண்டை மீன் வளர்ப்பு

1. கெண்டை வளர்ப்பு
2. கெண்டை பொரிப்பக முறை
3. கெண்டைக்கு தீவன ஊட்டம்
4. நோய் மேலாண்மை
5. அறுவடை

ஆடுகளை கொட்டில் முறையில் அடைத்து வளர்த்தால் அதிக லாபத்தை பெறலாம்


ஆடுகளை கொட்டில் முறையில் அடைத்து வளர்த்தால், அதிக லாபத்தை பெறலாம் என்று கூறுகிறார், நவலடி ஆட்டுப்பண்ணை நடத்தி வரும் செல்வராஜ். சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு விவசாயத்தை விரும்பி செய்து வரும் அவர் மேலும் கூறியதாவது:

அதிக லாபம் தருவதால் வெள்ளாடு வளர்ப்பை, படித்த இளைஞர்கள் அதிக அளவில் செய்து வருகின்றனர். பராமரிப்பு மிகவும் குறைவு என்பதால், ஏராளமா னோர் ஆடுகளை வளர்க்க விரும்புகிறார்கள்.

Tuesday

ஆறே மாதத்தில்... 69 ஆயிரம்... அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு

அணுவைக் கொண்டு ஆக்கல், அழித்தல் என்ற இரண்டு வேலைகளையும் செய்வது போலத்தான் தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியும். ஆக்கமா... அழிவா... என்பது நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைக்கு சமூகச் சீர்கேடுகளில் ஒன்றாக 'ஃபேஸ்புக்' எனும் 'முகநூல்' விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த முகநூல் மூலமாகவே நண்பர்களாகி, விவசாயத்திலும் ஆடு வளர்ப்பிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள் நான்கு இளைஞர்கள் என்றால், ஆச்சர்ய சங்கதிதானே!

Sunday

மண்புழு உங்களுக்கு தரும் உரமான வருமானம்


உலகத்தின் குப்பைக்கிடங்கு எது தெரியுமா? இந்தியா என்று தாரளமாக சொல்லலாம். காரணம், இங்கிலாந்து நாட்டு மருத்துவமனைகள் பயன்படுத்திய ஊசிகளும், மருந்துகளும் தூக்கி எறியப்பட்டு அது கப்பல்களில் தூத்தூக்குடி துறைமுகத்திற்கு வந்து இறங்கினாலும் கேட்பாரில்லை. பயன்படுத்தியதை எல்லாம் நமது வீட்டில் இருந்து ரோட்டில் தூக்கி எறிந்து விட்டு வீட்டில் மட்டும் சுத்தம் பார்க்கும் நம்மவர்களை எண்ணியும் நொந்து கொள்ள தான் வேண்டும்.

குப்பை கழிவிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கும்...புதிய திட்டம்!நகராட்சி வருவாய் ஈட்டும் முயற்சி வெற்றி பெறுமா?

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளுக்குள் சேகரமாகும் குப்பை கழிவுகளை பயன்படுத்தி, மண்புழு வளர்த்து அதிலிருந்து உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு உர விற்பனை செய்து, பல லட்சங்களை வருவாயாக ஈட்டுவதற்கு நகராட்சி அதிகாரிகள் புதிய திட்டத்தை வகுத்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகள், பாலக்காடு ரோட்டிலுள்ள குப்பை மையத்தில் கொட்டப்படுகின்றன. அங்கு கொட்டப்படும் குப்பையை பல்வேறு நிலைகளில் பிரித்தெடுக்கப்படும். அதிலிருந்து வெளியேறும் கழிவை கொண்டு மண்புழு வளர்க்க திட்டமிட்டுள்ளனர். மண்புழுவிலிருந்து வெளியேறும் கழிவையே உரம் என்று சொல்லப்படுகிறது.
மண்புழு விவசாயிகளின் நண்பன். ஏனென்றால் விவசாய விளை நிலங்களில் வாழும் மண்புழுக்கள், தாவரத்துக்கும், மண்ணுக்கும் இடையே; இடைவெளி ஏற்படுத்தி தாவரத்துக்கு நல்ல சுவாசத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது. இதனால் விவசாயிக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும். அதனால் விவசாயிகள் எப்போதும் மண்புழுவை விரும்புவர்.பொள்ளாச்சி சுற்றுப்புறப்பகுதிகள் அனைத்தும் விவசாய விளை நிலங்களாக உள்ளது. பெரும்பாலானோர் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். தற்போதைய விவசாயத்துக்கு உரம் மிக அவசியம். ஒவ்வொரு விவசாயியும் விளைநிலங்களுக்கு தேவையான உரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
அதிக விலை கொடுத்தாலும் இயற்கை உரம் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக ரசாயன உரங்களே கிடைக்கிறது. இயற்கை உரம் உற்பத்தி செய்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக இல்லை. அதனால் நகராட்சி நிர்வாகம், பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்பகுதிகளுக்கு குறைந்த விலையில் இயற்கை உரத்தை உற்பத்தி செய்து கொடுக்க மண்புழு உரம் உற்பத்தி செய்யும் மையத்தை துவக்க உள்ளனர்.மண்புழு உரம் உற்பத்தி செய்வதற்கான இடஅமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தற்போது உள்ள ஆடுஅறுவை மைய வளாகத்தில் உள்ளது. அந்த இடத்தில் எளிமையாக குறைந்த பணியாளர்களை கொண்டு உரம் தயாரிக்கலாம் என்கின்றனர் நகராட்சி அதிகாரிகள். இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டனர். அதன் பின்பு விரிவான திட்ட அறிக்கை தயார்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள னர். திட்ட அனுமதி கிடைத்தவுடன் அனைத்துப்பணிகளும் வேகமாக துவங்கப்படும்.காய்ந்த சாணம், மக்கிய இலை, குப்பை உள்ளிட்ட மக்கும் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, தண்ணீரை கொண்டு ஈரப்பதம் ஏற்படுத்தி அதில் மண்புழுக்களை வளர்க்கலாம். மண்புழுக்கள் ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி பல்கிப்பெருகும். மண்புழு குப்பை, சாணம் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு வெளியேற்றப்படும் கழிவு தான் உரமாக மாறுகிறது. இதை விற்பனை செய்ய நகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள லாம்பிடோ மாருதி என்றழைக்கப்படும் மண்புழு அதிக நீளம் கொண்டது. இவை வயல் வெளிகளில் காணப்படும், இருட்டான இடத்தை தேடிச்செல்லும், இரவு நேரத்தில் மட்டுமே உணவு அருந்தும். யூரில்லாஸ்யூஜெனியே, ஐசான்யா பெட்டிடா என்றுஅழைக்கப்படும் இந்த இரண்டு வகை மண்புழுக்கள் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவை. உரம் தயாரிப்புக்கு ஏற்றது.இவை அதிக தடிமனையும், குறைந்த நீளத்தையும் கொண்டது. இவை வேகமாக உணவை உட்கொண்டு, அதிக அளவிலான கழிவை வெளியேற்றும். அதனால் இந்த ரகத்தை வளர்க்கவும், பராமரிக்கவும் பொள்ளாச்சி நகராட்சி முடிவு செய்துள்ளது.இது வரை யூரியா, பொட்டாஷ் என்ற பெயரில் ரசாயன உரங்களை பயன்படுத்தி வந்த பொள்ளாச்சி விவசாயிகளுக்கு, சிறிதளவு கூட ரசாயனம் இல்லாமல் தெளிவான இயற்கை உரத்தை பெறப்போகின்றனர். அதனால் விவசாயிகள் மத்தியிலும் நகராட்சியின் புதிய திட்டத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=541137&Print=1

மண்புழு என்ற ஆத்ம நண்பன்

"பிரபஞ்ச வரலாறை எழுத வேண்டுமெனில், அதில் பலவற்றின் முக்கிய பங்களிப்பைப் பற்றி எழுத வேண்டும். யாரை எழுத மறந்தாலும் ,மறுத்தாலும், மண்புழுக்கள் என்ற சிறிய ஜீவராசி குறித்து எழுத மறந்துவிடக் கூடாது. "இவ்வாறு கூறியவர் சார்லஸ் டார்வின். மண்புழு உரம், இயற்கை முறையிலான விவசாயம், சுயதயாரிப்பாகத் தயார் செய்யக்கூடிய

மண்புழு உரத்தால் அதிக விளைச்சல்

மண்புழுக்கள், அள்ள அள்ளக் குறையாமல் மண்ணில் பொதிந்து கிடக்கும் சத்துக்களை வெளியே கொண்டு வந்து பயிர்களுக்குக் கொடுக்கும் வேலையைச் செய்யும் ஆட்கள்  தான் இந்த மண்புழுக்கள்.
மண்புழுக்கள் இருட்டை விரும்பும். அதனால் தான் மண்ணின் அடி ஆழத்தில் சென்று வாழுகின்றன. மேல் மட்டத்தில் உணவும், வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலையும் இல்லாத போது அவை மண்ணுக்குள் புகுந்து விடுகின்றன. மண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றல் நாட்டு மாட்டின் சாணத்தில் மட்டுமே உண்டு.

Wednesday

மண்புழு உரத்தின் சிறப்பியல்புகள்

நீர்சேகரிப்புத் தன்மை அதிகம். மண்ணில் ஈரப்பதத்தை பாதுகாத்து பயிர்களுக்கு அதிக நாட்களுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்கிறது.
நிலத்தில் மண்புழு உரம் தொடர்ந்து பயன்படுத்தும் போது நிலத்தின் அங்ககச் சத்துக்கள் அதிகரிக்கிறது. நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், உயிரினங்கள், மண்புழுவின் வளர்ச்சி ஆகியவைகளால் மண் இளக்கம் அடைந்து காற்றோட்ட வசதி மற்றும் மண்களின் கெட்டித் தன்மை மாற்றம் ஏற்பட்டு வடிகால் வசதி ஊக்குகிறது.