Wednesday

மணக்க... மணக்க... மண்புழு உரம்

இயற்கையை நோக்கி செல்ல செல்ல... இயற்கை நம்மை நோக்கி சிரித்து வரும். இதமாய் விளைச்சல் தரும். இன்னல் இல்லாத விளைபொருளைத் தரும். ரசாயன உரம் உடனடி பலனைத் தந்தாலும், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இப்போதாவது விழித்துக் கொண்டோமே... என நினைக்கும் விவசாயிகள், இயற்கை விவசாயத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். மதுரை டி.வாடிப்பட்டி, சாணம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கே.சிவசாமி, தனக்கு மட்டுமின்றி, மற்ற விவசாயிகளுக்குத் தேவையான மண்புழு உரத்தை தயாரித்து வருகிறார்.
அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அதையே தனது லாபம் தரும் தொழிலாக மாற்றியதை கூறுகிறார்.
பத்து ஏக்கர் நிலத்தில் ஆரம்பத்தில் எல்லா வகையான விவசாயமும் செய்து வந்தேன். அப்போதெல்லாம் ரசாயன உரம் தான் எனக்குத் தெரிந்தது. 2002ல் கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலம் மண்புழு உரப்பண்ணை அமைக்க, ரூ.5 லட்சம் கடன் வாங்கினேன். ரூ.ஒன்றரை லட்சம் மானியம் கிடைத்தது. தரையில் 80 சிமென்ட் தொட்டி அமைத்து மண்புழு உரத்தயாரிப்பை துவங்கினேன்.

Saturday

சவால் விட்ட ரசாயனம்... சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்... இயற்கையிலும் இனிக்கும் பன்னீர் திராட்சை!


சவால் விட்ட ரசாயனம்... சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்...
இயற்கையிலும் இனிக்கும் பன்னீர் திராட்சை!
தெருவுக்குத்தெரு பலசரக்குக் கடை இருக்கிறதோ, இல்லையோ... மருத்துவமனைகள் இருக்கின்றன. அவற்றின் வாயிலிலேயே பழக்கடை... இளநீர் கடை ஆகியவையும் முளைத்திருக்கின்றன. எந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி... நோயாளியைப் பார்க்க வருபவர்கள், ஆப்பிள், திராட்சை, சாத்துக்குடி என வாங்கிக் கொண்டுதான் செல்கிறார்கள். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பழங்களில் ஒன்றாக இருக்கும் திராட்சையில்தான், 'அதிகளவு பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுகிறது’ என்பது பலரும் அறியாத உண்மை.
பெரும்பாலான பழங்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டாலும், விவசாயிகளுக்கு சவால் விடும் பழங்களில் ஒன்று திராட்சை. இதை, 'இயற்கையில் விளைய வைத்தோம்’ என்று யாராவது சொன்னால்... இயற்கை விவசாயிகள்கூட ஆச்சரியத்தோடுதான் பார்க்கிறார்கள். ஆண்டுக்கு முப்போகம் திராட்சை விளையும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்கூட,

இயற்கை முறையில் இமாம்பசந்த்! மகசூல் கூட்டும் மகத்தான தொழில்நுட்பங்கள்

இயற்கை முறையில் இமாம்பசந்த்!
மகசூல் கூட்டும் மகத்தான தொழில்நுட்பங்கள்
ரசாயன விவசாயமாக இருந்தாலும் சரி... இயற்கை முறை விவசாயமாக இருந்தாலும் சரி... வழக்கமாகக் கடைப்பிடிக்கும் சாகுபடி முறைகளோடு சில தொழில்நுட்பங்களைச் சேர்க்கும்போது விளைச்சலில் அபரிமிதமான மாற்றங்கள் உண்டாகின்றன. பல விவசாயிகள் இதை அனுபவப்பூர்வமாக நிரூபித்து வருகின்றனர். திண்டுக்கல், துரைபாண்டியன் அத்தகையோரில் ஒருவர். இவர், கிட்டத்தட்ட 98% இயற்கை முறை விவசாயத்தில் மா சாகுபடி செய்துவருகிறார்!
திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் 19-வது கிலோமீட்டரில் உள்ள கம்பிளியம்பட்டி எனும் கிராமத்தில் இருக்கிறது, துரைபாண்டியனின் மாந்தோப்பு. தோப்பைச் சுற்றியுள்ள நிலங்களில் கடுமையான வறட்சி காரணமாக புற்கள்கூட கருகியிருக்கும் நிலையிலும், இவருடைய மாந்தோப்பு மட்டும் பசுமை கட்டி நிற்கிறது.

Wednesday

பருவநிலை மாற்றத்திற்கேற்ற பேணுகை வேளாண்மை உத்திகள்

பருவநிலை மாற்றத்திற்கேற்ற பேணுகை வேளாண்மை உத்திகள்

பேணுகை வேளாண்மையில் மூன்று முக்கிய கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்
.
1. குறைந்த உழவு / பேணுகை உழவு
2. பயிர்த்தாள்கள் மற்றும் கழிவுகளை கொண்டு நிரந்தரமாக மண் மேற்பரப்பில் மூடாக்கு அமைத்தல்
3. பயறு வகைப்பயிர்களை பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்தல்


1. குறைந்த உழவு / பேணுகை உழவு: பேணுகை உழவின் மூலம் மேல் மண் மற்றும் அடிமண் இறுக்கம் தடுக்கப் படுவதோடு மட்டுமின்றி மண்ணின் கட்டமைப்பும் மேம்படுகிறது.
* மண்ணின் அங்கக பொருட்களில் எரியூட்டும் தன்மை பெருமளவு குறைக்கப்படுகிறது.

Friday

25 சென்ட்... 5 மாதம்...1 லட்சம் !...மல்பெரி


25 சென்ட்... 5 மாதம்...1 லட்சம் !
மாற்றுப் பயிராக வந்த மல்பெரி நாற்று உற்பத்தி...
'மாற்றம் ஒன்றே மாறாதது’ இந்தத் தத்துவத்துக்கு ஏற்ப... வழக்கமாகச் செய்யும் ஒரே பயிரைத் தொடர்ந்து செய்யாமல், மாற்றுப் பயிர்களைத் துணிந்து சாகுபடி செய்தால்தான் லாபம் எடுக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள், தமிழக விவசாயிகள். அந்த வகையில், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வட்டம், கெட்டிச்செவியூர் அடுத்துள்ள காளியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி-மகேஸ்வரி தம்பதி, மாற்றுப் பயிராக மல்பெரி நாற்றுக்களை உற்பத்தி செய்து சிறப்பான வருமானம் பார்க்கிறார்கள்.  
'தளதள’வென பச்சை இலைகள் தலையாட்டும் மல்பெரி தோட்டத்தில், தெளிப்புநீர்க் கருவிகள் மழை போல் தண்ணீரைத் தெளித்துக் கொண்டிருக்க, உழைத்த களைப்பு நீங்க, மரத்தடியில் அமர்ந்திருந்த நேரத்தில் தம்பதியைச் சந்தித்தோம்!