Tuesday

வறண்ட கிணறுகள்... வாடாத தென்னைகள்... பலமூட்டும் பிளாஸ்டிக் கேன் சொட்டுநீர்!


வறண்ட கிணறுகள்... வாடாத தென்னைகள்...
பலமூட்டும் பிளாஸ்டிக் கேன் சொட்டுநீர்!
தமிழக விவசாயிகள் இப்படியரு வறட்சியைப் பார்த்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன. ஏரி, குளம் மட்டுமன்றி... கிணறு, குழாய்க்கிணறு என அனைத்து நீராதாரங்களும் வறண்டு கிடக்கின்றன.
பருவப்பயிர்களை நட்ட விவசாயிகள், வானத்தைப் பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். தென்னை விவசாயிகளுக்கும் இதே கதைதான்.
இப்படிப்பட்ட இக்கட்டானச் சூழ்நிலையில, மழை கிடைக்கும் வரையிலான காலம் வரை தென்னையைக் காக்க, புதியநுட்பம் ஒன்றைக் கையில் எடுத்திருக்கிறார், சேலம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பச்சமுத்து. அக்கம்பக்கத்துத் தென்னைகள் வாடிக்கிடக்கும் சூழலில், புதியநுட்பம் காரணமாக, இவருடைய தோட்டத்துத் தென்னைகள் பசுமைக் கட்டி நிற்கின்றன... படு தெம்பாக!
செல்லியம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் பச்சமுத்துவுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், 120 தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். இருந்த ஒரே கிணறும் வறண்டுவிட... தென்னை மரங்களை இழக்க விரும்பாத பச்சமுத்து, பிளாஸ்டிக் கேன்கள் மூலம் புதிய நுட்பத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, செழிப்பு குறையாமல், மரங்களைக் காத்து வருகிறார்.

Wednesday

காளான் வளர்ப்பு

சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, இப்போ தெல்லாம் அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாகிவிட்டது காளான். நாக்கிற்கு நல்ல சுவை, உடலுக்கு நல்ல சத்து தரும் உணவாக இருக்கும் இதில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவிலும் மற்றும் தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் இருக்கின்றன. பல்வேறு சத்துக்களும் சரியான விகிதத்தில் இதில் கலந்திருப்பதால் ஒரு பர்ஃபெக்ட்டான சரிவிகித உணவாகவும் சிபாரிசு செய்கிறார்கள் டயட்டீஸியன்கள்.
காளானில் பட்டன் காளான், பால் காளான் மற்றும் சிப்பி காளான் என பலவகை இருக்கிறது. இதில் சிப்பி காளான் வளர்ப்பது சுலபமானது.

Monday

கலக்கும் கறியாடு வளர்ப்பு..!

கலக்கும் கறியாடு வளர்ப்பு..!

 'அள்ளித் தரும் ஆடு வளர்ப்புஎன்கிற தலைப்பில்... கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் மே 4-ம் தேதி 'பசுமை விகடன்சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது.
வீராணம் பாசன விவசாயிகள் சங்கம், அம்மன் ஆட்டுப்பண்ணை ஆகியவை இணைந்து நடத்திய அக்கருத்தரங்கு பற்றிய செய்தி, கடந்த இதழில் இடம்பிடித்தது. அங்கே பகிரப்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த இதழில் இடம்பிடிக்கின்றன.
'ஆடு வளர்ப்பில் நவீனத் தொழில்நுட்பம்என்கிற தலைப்பில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியரும்,

உன்னத வருமானத்துக்கு உஜாலா கத்திரிக்காய்... இயற்கை முறையில் இணையற்ற மகசூல்..!

உன்னத வருமானத்துக்கு ‘உஜாலா’...
இயற்கை முறையில் இணையற்ற மகசூல்..!

ணவகங்களுக்கான சமையல் பட்டியலாக இருந்தாலும் சரி... திருமணம், திருவிழா உள்ளிட்ட விசேஷங்களுக்கான பட்டியலானாலும் சரி... அதில் கட்டாயம் கத்திரிக்காய் இடம் பெற்றிருக்கும். சாம்பார், காரக்குழம்பு, வற்றல், பொரியல், கூட்டு... என கத்திரிக்காயை வைத்து, விதம்விதமாக உணவுகளைத் தயாரிக்க முடியும் என்பதால்தான், அந்தக் காய்க்குக்கு மட்டும் சந்தையில் எப்போதுமே தனி மவுசு!
அதனால்தான் அதிகப்படியான பூச்சித் தாக்குதல், நோய்த் தாக்குதல்... எனப் பற்பல இடையூறுகள் இருந்தாலும், விடாமல் கத்திரிக்காய் சாகுபடியைச் செய்து வருமானம் ஈட்டுகிறார்கள் பலரும்.