Monday

அள்ளிக் கொடுக்கும் அடுக்குப் பயிர்கள்... ஒன்றரை ஏக்கரில் இரண்டரை லட்சம்!

அள்ளிக் கொடுக்கும் அடுக்குப் பயிர்கள்...
ஒன்றரை ஏக்கரில் இரண்டரை லட்சம்!
இடைவெளியில் சாகுபடி.
வேலி, வரப்பிலும் வருமானம்.
'ரசாயன முறை விவசாயமாக இருந்தாலும் சரி... பாரம்பரிய இயற்கை முறை விவசாயமாக இருந்தாலும் சரி... முதன்மைப் பயிரோடு ஊடுபயிர்கள், கூட்டுப்பயிர்கள் ஆகியவற்றையும் சேர்த்து சாகுபடி செய்தால் மட்டும்தான் விவசாயத்தில் லாபம் எடுக்க முடியும்' என்பதை நிரூபித்து, நல்ல லாபத்தை ஈட்டி வரும் விவசாயிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக, அடுக்குப்பயிர் சாகுபடியில் கலக்கிக் கொண்டிருக்கிறார் விழுப்புரம் மாவட்டம், குமளம் கிராமத்தைச் சேர்ந்த சோமு.

வாழையில் மகசூல் கூட்டும் ஊட்டமேற்றிய தொழுவுரம்

வாழையில் மகசூல் கூட்டும் ஊட்டமேற்றிய தொழுவுரம்

வாழையில மட்டைக்காய்ச்சல், வாடல், இலைப்புள்ளினு ஏகப்பட்ட நோய்கள் தாக்கி, படாதபாடு பட்டுக்கிட்டிருந்தேன். ஆனா, 'ஊட்டம் ஏத்தின தொழுவுரம்' பயன்படுத்த ஆரம்பிச்சதுக்கு அப்பறம் எந்த நோயும் வர்றது இல்லை. ஆறு வருஷமா நிம்மதியா விவசாயம் பார்த்துக்கிட்டிருக்கேன். உண்மையிலேயே இந்தத் தொழுவுரம், விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்தான்'' என்று சிலாகித்து