Friday

மண் புழு உரம் தயாரிப்பு

மண் புழு உரம் தயாரிப்பு

கழிவுகள் என்பது நாம் முறையாக பயன்படுத்த தவறிய மூலப்பொருள்கள் ஆகும். பொதுவாக வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் குவித்து வைக்கும் பொழுது கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் இருந்து அதிக அளவிலான இயற்கை எருவை உருவாக்க முடியும். இந்த மதிப்புள்ள மூலப்பொருள்களை முறையாக மட்கவைப்பதின் மூலம் நமக்கு மதிப்பூட்டப்பட்ட எரு கிடைக்கிறது. இவ்வாறு அங்ககக் கழிவுகளை மக்கவைத்து வளம் குன்றிய மண்ணை பேணிக்காப்பதே மண்புழு உரத்தின் முதன்மையான பயனாகும்.

உள்ளுர் இரக மண்புழுக்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்

Monday

அரை ஏக்கரில் 21 மூட்டை... கில்லி அடிக்கும் கிச்சடி சம்பா..!


அரை ஏக்கரில் 21 மூட்டை...
கில்லி அடிக்கும் கிச்சடி சம்பா..!
'ரசாயன முறை விவசாயம் மற்றும் வீரிய ரக விதைகள் ஆகியவை மட்டுமே உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்கக்கூடியவை.
இவற்றில் மட்டுமே அதிக விளைச்சல் சாத்தியம்’ என்று திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், விவசாய விஞ்ஞானிகள் பலர்.
அதேசமயம், 'வீரிய ரக மகசூலுக்கு எந்த வகையிலும் சளைத்ததில்லை... பாரம்பரிய ரகங்களின் விளைச்சல்' என்று இன்னொருப் பக்கம் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், விவசாயிகள். இதோ... இந்த அருண்கூட அத்தகையோரில் ஒருவர்தான்!
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள ஜங்காலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி அருண். கடந்த கார்த்திகை மாதத்தில் அரை ஏக்கரில் கிச்சடி சம்பா நெல்லை நடவு செய்தார். அப்போதைக்கு, அதைப் பார்த்து சந்தேகத்தோடு பேசிய மற்ற விவசாயிகள், தற்போது அவருக்குக் கிடைத்த மகசூலைப் பார்த்து ஆச்சரியத்தில் வாயடைத்துக் கிடக்கின்றனர். அருண்... 2009-ம் ஆண்டு, அக்டோபர் 25-ம் தேதியிட்ட 'பசுமை விகடன்' இதழில் 'கேழ்வரகிலும் வந்தாச்சு... ஒற்றை நாற்று நடவு!’ என்ற செய்தி மூலமாக ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்!

வியக்க வைக்கும் வீட்டுத் தோட்டம்...!


10 சென்ட்... 100 பயிர்...
வியக்க வைக்கும் வீட்டுத் தோட்டம்...!
நகரமோ... கிராமமோ... புதிதாக வீடு கட்டுகிறார்கள் என்றால், வீட்டுத் தோட்டத்துக்காகவும் இடம் விடுவது, இப்போதெல்லாம் ஒரு வழக்கமாகவே மாறிக் கொண்டிருக்கிறது. ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி போன்றவற்றைப் பயன்படுத்தாமல், சொந்த உழைப்பில் இயற்கை முறையில் நாமே காய்கறிகளை உற்பத்தி செய்து வீட்டின் ஆரோக்கியத்தைக் காப்பதோடு, மனதின் நிம்மதியையும் கூட்டிக் கொள்ளலாம் என்பதுதான் இதற்குக் காரணம்!
இதோ... கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையிலிருந்து, அருமனை செல்லும் சாலையில் இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கும் 'வட்டவிளை’ கிராமத்தில் வசிக்கும் ரஞ்சிதஜாய் என்பவரின் வீடு... செடி, கொடிகள் சூழ, பசுமை போர்த்திய வீடாகவே மாறி கிடக்கிறது!

ஆடு வளர்ப்பு - இனங்கள் மற்றும் இனவிருத்தி முறை

 ஆடு வளர்ப்பு- இனங்கள் மற்றும் இனவிருத்தி முறை
'ஆடு வளர்ப்புக் கொண்டாட்டம்!' என்ற தலைப்பில், பசுமை விகடன்- திருப்பூர் மாவட்ட கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்- தெற்கு ரோட்டரி சங்கம், திருப்பூர் ஆகியவை இணைந்து, கடந்த மே 14-ம் தேதி, ரோட்டரி அரங்கில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதைப் பற்றிய செய்தி கடந்த இதழில் இடம்பிடித்திருந்தது. பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் இதோ...
பொட்டனேரியில் உள்ள, 'மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலைய'த்தின் உதவிப் பேராசிரியர் ந. பாரதி, வெள்ளாட்டு இனங்கள் மற்றும் இனவிருத்தி முறைகளைப் பற்றி விளக்கும்போது, ''வெள்ளாடுகளை, 'ஏழைகளோட பசு’னுதான் சொல்லணும். சிறு-குறு விவசாயிக, நிலமில்லாத விவசாயிங்களுக்குப் பொருளாதார ரீதியா கை கொடுக்குறது வெள்ளாடுகதான். குணத்தை வெச்சும், வெளித் தோற்றத்தை வெச்சும் அந்தந்தப் பகுதிகள்ல சுலபமா அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய வகைகளைத்தான் இனம்னு சொல்றோம். ஒவ்வொரு பகுதிகள்லயும் இருக்கற ஆடுகளுக்கு... ஓரொரு இனப்பெயர் இருக்கும். தமிழ்நாட்டுல இருக்கற இனங்களைப் பத்திப் பார்ப்போம்.

பணம் கொழிக்கும் பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பு

 பணம் கொழிக்கும் பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பு
நிறைஞ்ச தண்ணி... குறைஞ்ச ஆள்... நல்ல லாபம்
'தண்ணீர் வளம் இருக்கு, மண் சரியில்ல; மண் நல்லாருக்கு, தண்ணியும் இருக்கு, ஆனா... வேலைக்கு ஆளுங்க கிடைக்கல - விவசாய நிலத்தை சும்மாவே போட்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் இப்படி ஒவ்வொரு காரணம் தயாரா இருப்பது இங்கே கண்கூடு!
இவர்களுக்கு நடுவே... ''தண்ணி வளமும், குறைஞ்ச ஆள் பலமும் இருந்தாலே போதும், மீன் வளர்ப்புல அருமையான லாபம் சம்பாதிக்க முடியும். இதுக்கு தினமும் அரை மணி நேரம் செலவழிச்சாலே போதும்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார்கள், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள திருஉடையான்பட்டி கணேசன்-சண்முகசுந்தரி தம்பதியர்.

ஆண்டுக்கு ஒரு தடவை பொலிக் கிடாவை மாத்தணும்

ஆண்டுக்கு ஒரு தடவை பொலிக் கிடாவை மாத்தணும்

பொட்டனேரியில் உள்ள, 'மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலைய'த்தின் உதவிப் பேராசிரியர் . பாரதி, வெள்ளாட்டு இனங்கள் மற்றும் இனவிருத்தி முறைகளைப் பற்றி விளக்கும்போது, ''வெள்ளாடுகளை, 'ஏழைகளோட பசுனுதான் சொல்லணும். சிறு-குறு விவசாயிக, நிலமில்லாத விவசாயிங்களுக்குப் பொருளாதார ரீதியா கை கொடுக்குறது வெள்ளாடுகதான். குணத்தை வெச்சும், வெளித் தோற்றத்தை வெச்சும் அந்தந்தப் பகுதிகள்ல சுலபமா அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய வகைகளைத்தான் இனம்னு சொல்றோம். ஒவ்வொரு பகுதிகள்லயும் இருக்கற ஆடுகளுக்கு... ஓரொரு இனப்பெயர் இருக்கும். தமிழ்நாட்டுல இருக்கற இனங்களைப் பத்திப் பார்ப்போம்.

Wednesday

சிப்பிக் காளான் வளர்ப்பு

சிப்பிக் காளான் வளர்ப்பு

பருவம் மற்றும் இரகங்கள்
·          வருடம் முழுவதும் காளான் வளர்க்கலாம்
·          காளான் வளர்ப்பை வீட்டிலேயே செய்யலாம் அல்லது காளான் குடில் அமைத்து செய்யலாம்.
·          வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை