Thursday

புத்தர் சாப்பிட்ட ‘காலா நமக்’ பாரம்பரிய அரிசி: ராமநாதபுரத்தில் சாகுபடி செய்யும் விவசாயி

‘காலா நமக்’ நெல் வயலில் விவசாயி தரணி முருகேசன். புத்தர் சாப்பிட்ட காலா நமக்பாரம்பரிய நெல்லை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சாகுபடி செய்து வருகிறார்.


பாரம்பரிய நெல் விதைகள் என்பது பழமையான நெல் விதை ரகங்களைக் குறிக்கும். அன்னமழகி, அறுபதாங்குறுவை, பூங்கார், குழியடிச்சான், குள்ளங்கார், குடவாழை, காட்டுயானம், காட்டுப்பொன்னி, வெள்ளைக்கார், கருப்பு சீரகச்சம்பா, கட்டிச்சம்பா, குருவிக்கார், கம்பஞ்சம்பா, காட்டுச்சம்பா, கருங்குறுவை, சீரகச்சம்பா, கருத்தக்கார், காலா நமக் என இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான பாரம்பரிய நெல் வகைகள்

Wednesday

மணக்கும் மல்லிகை... மயக்கும் வருமானம்


கரும்பு பயிரிட்ட இடத்தில் தற்போது மல்லிகை தான் வருமானம் தந்து காக்கிறதுஎன்கிறார் மதுரை சத்திரப்பட்டி மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மல்லிகை விவசாயி ரெங்கநாதன். பி.எஸ்சி., இயற்பியல் படித்த இவர், மணக்கும் மல்லிகையின் மயக்கும் வருமானம் குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

காசு குவிக்கும் காடை வளர்ப்பு

கிழக்கு ஆசியாவை, குறிப்பாக ஜப்பான் நாட்டை தாயகமாகக் கொண்ட காடை இனம், தற்போது இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படும், அதிகம் பறக்க இயலாத தரைப்பறவை என்றால் அது ‘ஜப்பானிய காடை’தான். இதன் அறிவியல் பெயர் கட்டூர்னிக்ஸ் ஜப்பானிக்கா (Coturnix japonica). 
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டின் அரசப் பரம்பரையினரால் பாடும் பறவைகளாகக் கருதப்பட்டு, வீடுகளில் வளர்க்கப்பட்டவை காடைகள். 1910-ம் ஆண்டுகளில் ஜப்பானிய காடையின் இறைச்சியும் முட்டையும் ஜப்பான் நாட்டின் பிரபலமான உணவாக மாறின. காடை என தமிழில் அழைக்கப்படும் இந்தப் பறவை பீசன்ட் (Pheasant) குடும்பத்தைச் சேர்ந்தது.

இந்தியாவில் இரண்டு வகைக் காடைகள் உண்டு. இந்திய வனப்பகுதிகளில் பெரிதும் காணப்படும் கறுப்பு நிற மார்பை உடைய கட்டூர்னிக்ஸ் கோரமண்டலிகா (Coturnix coromandelica), நமது ஆட்டின் பூர்வ வகை காட்டுப்பறவை ஆகும்.