Friday

கலங்க விடாத கடலை....அள்ளிக்கொடுக்கும் ஆமணக்கு.... மானாவாரியில் மகத்தான மகசூல் கூட்டணி !

கலங்க விடாத கடலை....அள்ளிக்கொடுக்கும் ஆமணக்கு....
மானாவாரியில் மகத்தான மகசூல் கூட்டணி !
 ''மானாவாரி வெள்ளாமையில எள், உளுந்து, நிலக்கடலைனு தனித்தனியா சாகுபடி செய்யாம... ஊடுபயிரா ஆமணக்கையும் சேர்த்து சாகுபடி செஞ்சா... அருமையான விளைச்சல் பார்க்கலாம்'' என்று தன்னுடைய  அனுபவத்தை சந்தோஷத்தோடு பகிர்ந்து கொள்கிறார், முன்னாள் ஆசிரியரும்... எந்நாளும் விவசாயியுமான கோதண்டராமன்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், இயற்கை வழி விவசாயத்தில் மானாவாரியாக கடலை விதைத்து, ஊடுபயிராக ஆமணக்கையும் பயிர் செய்திருக்கிறார். நிலக்கடலை அறுவடைப் பணியில் மும்மரமாக இருந்த நேரத்தில்தான் நாம் கோதண்டராமனைச் சந்தித்தோம்.

சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி! 60 சென்ட் நிலத்தில் ஆண்டுக்கு 2,50,000

சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி!
60 சென்ட் நிலத்தில் ஆண்டுக்கு 2,50,000
''பல வருஷமா விவசாயம் பாத்தாலும், நிறையபேரு 'நஷ்டம், நஷ்டம்’னுதான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதுக்கு முக்கியமான காரணமே... வர்ற வருமானத்தையெல்லாம் கொண்டுபோய் உரக்கடையில கொட்டிக் கொடுக்கறதுதான். முறையா திட்டம் போட்டு இயற்கை முறையில விவசாயம் செஞ்சா, விவசாயத்தை மாதிரி வருமானம் கொடுக்கக் கூடிய தொழில் எதுவுமே இல்லீங்க'' என்று சொல்லும் திண்டுக்கல் மாவட்டம், தவசிமடை கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து-வாசுகி தம்பதியர்,