Thursday

தேனாக இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கற்பூரவல்லி !

தேனாக இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கற்பூரவல்லி !

மகசூல்
காசி.வேம்பையன்
தேனாக இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கற்பூரவல்லி!

முட்டுவளிச் செலவில் முடங்கிப் போய்க் கிடந்த பல விவசாயிகளை லாபப் பாதைக்கு மீண்டும் அழைத்துச் சென்று கொண்டிருப்பது 'ஜீரோ பட்ஜெட்' விவசாய முறைதான் என்பது சந்தேகமே இல்லாத உண்மை. இதை, உணர்ந்த தமிழக விவசாயிகள் பலரும் 'ஜீரோ பட்ஜெட்' முறையில் வெற்றிகரமாக பலவிதமானப் பயிர்களை சாகுபடி செய்து நிரூபித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான், திருச்சி மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்த கோவிந்தன்.

இனிக்கும் இயற்கைக் கத்திரி

இனிக்கும் இயற்கைக் கத்திரி

மகசூல்
ஜி.பழனிச்சாமி
இனிக்கும் இயற்கைக் கத்திரி
35 சென்ட்... 15 மாதங்கள்... '1 லட்சம்...

'தாறுமாறாகிக் கிடக்கும் பருவநிலை மாறுபாட்டைச் சீர்படுத்துவதற்கு இயற்கை விவசாயம்தான் தீர்வு' என்பது சூழல் ஆர்வலர்கள் பலரது குரலாக ஒலிக்கிறது.
'இயற்கையைக் காப்பது ஒருபுறம் இருக்கட்டும். விவசாயிகளைப் பொருளாதார ரீதியாகக் காப்பாற்றி வருவதும் இயற்கை விவசாயம்தான்' என்கிறார்கள், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் ஸ்டீபன் மற்றும் விமல்.

Wednesday

இயற்கைப் பருத்தி தரும் இனிய வருமானம்..!

இயற்கைப் பருத்தி தரும் இனிய வருமானம்..!

மகசூல்
ஆர்.குமரேசன்
காய்ப்புழுவை விரட்ட கலப்புப் பயிர்...
இயற்கைப் பருத்தி தரும் இனிய வருமானம்..!


கூட்டமைப்பு வர்த்தகத்தில் கூடுதல் லாபம் !
காய்ப்புழு... பருத்தி விவசாயிகளைக் குலை நடுங்க வைக்கும் வில்லன். இந்தக் காய்ப்புழுக்கள், மகசூல் வரும் நேரத்தில் காயைச் சேதப்படுத்தி மகசூலுக்கு மங்கலம் பாடிவிடும். இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பி.டி. தொழில்நுட்பம் காய்ப்புழுக்களுக்கு எதிராக பருத்தியில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், சமீபத்தில் பி.டி. பருத்தியிலும் தங்களது தாக்குதலைத் தொடுத்திருக்கும் காய்ப்புழுக்களைக் கண்டு விவசாயிகள் மட்டுமல்லாமல் விஞ்ஞானிகளே கதிகலங்கிப் போயுள்ளனர்.

விறு விறு லாபம் தரும் விரால் மீன்

விறு விறு லாபம் தரும் விரால் மீன்

மகசூல்
என்.சுவாமிநாதன்
6 சென்ட் குளம்... 10 மாதம்... 30 ஆயிரம்!

விறு விறு லாபம் தரும் விரால் மீன்

ஏக்கர் கணக்கில் குளமும் செழிப்பான தண்ணீர் வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும்' என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து. இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், "ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும்... விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்'' என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர் ஹனீபா.