Thursday

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கான கொட்டகையமைப்பு

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கான கொட்டகையமைப்பு

பொது அனுமானங்கள்

Low cost houseOpen type housing with run space
 Sheep in open spaceFodder Cultivation near by shed

 

  • மிதமான உற்பத்தி திறனுக்கு, குறைந்த செலவிலான, கட்டுமான பொருட்களை கொண்டு சாதாரண கொட்டகை அமைத்தல்.
  • அதிக மழை பெய்யும் இடங்களைத் தவிர, நாட்டின் பிற இடங்களில் மண் தரையிலான கொட்டகையே ஏற்றது.

Wednesday

aadu valarppu

paranmel aadu valarppu



  • வெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும். 
  • பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினால் ஆன பரண் போன்ற அமைப்பின் மேல் வளர்க்கப்படுகிறது.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு கொட்டகை தரையிலிருந்து உயரமான இடத்தில் குறைந்த்து 4 - 5 அடி உயரத்தில் இருப்பதால் ஆட்டு சாணி மற்றும் சிறுநீர் போன்றவை கீழே சேகரமாகிறது. ஆதலால் தினமும் சுத்தம் செய்யும் பணி மிகவும் குறைவாக இருக்கிறது.
  • வெள்ளாட்டுப்பண்ணை பதிவேடு பராமரிப்பு

    பதிவேடுகள் என்றால் நாம் நம் பண்ணையில் செய்யக்கூடியவைகளையும் பண்ணைகளில் கவனிக்க வேண்டியவைகளையும் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் குறித்து வைத்துக் கொள்வதுதான். பதிவேடுகள்தான் பண்ணையின் திறனாய்வுக்கு உதவியாய் உள்ளவை.

    பதிவேடுகள் ஒரு பண்ணையில் வரவு செலவுகள், அங்குள்ள ஆடுகளின் திறன் மற்றும் ஆடுகளின் முக்கிய பொருளாதார குணங்களை அறிய உதவுகின்றன. பதிவேடுகள் உபயோகத்திற்குத் தகுந்த முறையில் கையாளப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். பதிவேடுகள் பராமரிக்கப்படாத ஆட்டு மந்தைகளின் மதிப்பு குறைத்தே மதிப்பிடப்படும்.


    உதாரணமாக ஓர் ஆட்டுப்பண்ணையில் ஒவ்வொரு ஆட்டின் பாராம்பரியம், அதன் திறன், வளர்ச்சி போன்ற மற்ற விவரங்கள் பதிவேடுகள் மூலம்தான் அறியப் படுகிறது. எனவே குறைந்தபட்சம் சில முக்கிய தகவல்கள் கிடைப்பதற்காக வேண்டியாவது சில பதிவேடுகள் அவசியம் வைக்க வேண்டும். தற்போது நாம் ஒரு வெள்ளாட்டுப் பண்ணையில் வைக்கப்பட வேண்டிய முக்கியமான பதிவேடுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

    Sunday

    வறண்ட நிலத்திலும் வளமான வருமானம்

    வறண்ட நிலத்திலும் வளமான வருமானம்...
    மரங்களோடு கூட்டணி போடும் கரும்பு!
     ஒருகாலத்தில், பச்சைக் கம்பளம் விரித்தது போல பயிர்கள் காட்சி அளித்த நிலங்களில் எல்லாம்... இன்று விலையின்மை... விளைச்சலின்மை...  என பலவிதமானப் பிரச்னைகள்தான் அதிகமாக முளைத்துக் கிடக்கின்றன. இதிலிருந்து தப்பிக்க நினைப்பவர்களின் ஒரே தேர்வு... மரப்பயிர்கள்! இப்படி மாறிவிட்டால், 'பிரச்னை தீர்ந்தது' என்று நின்றுவிடாமல், அதிலும் சிலபல வித்தைகளைக் கையாண்டு... லாபம் பார்க்கும் விஞ்ஞானி விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்... திருவண்ணாமலை மாவட்டம், சேந்தமங்கலம், ராஜமாணிக்கம் போல. இவர், மரங்களுக்கிடையில் கரும்பை ஊடுபயிராகப் பயிரிட்டு நல்ல வருமானம் பார்த்து வருகிறார்!
    திருவண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில், பதினைந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது பெரியகுளம்

    முத்தான வருமானம் தரும் சத்தான நிலக்கடலை !

    முத்தான வருமானம் தரும் சத்தான நிலக்கடலை !
    ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து, ஆரோக்கியமற்ற விளைபொருட்களை உற்பத்தி செய்வதோடு, நஷ்டப்பட்டுப் புலம்பும் விவசாயிகள் பலர் உண்டு. அதேநேரத்தில், குறைவான செலவில் இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான விளைபொருட்களை உற்பத்தி செய்வதோடு, கூடுதல் மகசூல் மற்றும் லாபத்தையும் பெற்று வருகிறார்கள், பல இயற்கை விவசாயிகள். அத்தகையோரில் ஒருவர்தான், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம்!
    தேவர்குளத்திலிருந்து கயத்தாறு போகும் வழியில், நான்காவது கிலோ மீட்டரில் இருக்கிறது, பன்னீர்ஊத்து கிராமம். இந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் நிலக்கடலை சாகுபடிதான் கொடிகட்டிப் பறக்கிறது. இங்கே... எலுமிச்சை, தென்னைக்கு நடுவே...

    அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - வான்கோழி வளர்ப்பு

    வான்கோழி வளர்க்க அதிக முதலீடோ, இடவசதியோ தேவையில்லை
      



    ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சிகளை அடுத்து, அசைவப் பிரியர்களின் சாய்ஸாக மாறி வருகிறது வான்கோழி. விலை குறைவான அதே நேரத்தில் ஆரோக்கியமான இறைச்சியைத் தேடுவோரின் கவனம் வான்கோழி இறைச்சி பக்கமாகத் திரும்பி வருகிறது என்றே சொல்லலாம். முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் மட்டுமே அசைவ ஓட்டல்களில் கிடைக்கும் வான்கோழி பிரியாணி, இப்போது அனைத்து நாட்களிலும் கிடைக்கிறது.

    Saturday

    முருங்கை மல்லிகை வெண்தேக்கு மணக்குது மகா கூட்டணி...


    முருங்கை மல்லிகை வெண்தேக்கு மணக்குது மகா கூட்டணி...
    ரேபயிரை நம்பி உழுதா... உலை வைக்க முடியாது...’
    -இது, கிராமத்தில் இன்றைக்கும் வழக்கில் இருக்கும் சொலவடை. அந்தளவுக்கு ஊடுபயிர் விவசாயம் நம் முன்னோர்களுக்குள் ஊறிப்போன ஒன்று. பசுமைப் புரட்சி என்ற மாயையால் காணாமல் போனது, இந்த கலப்புப் பயிர் விவசாயம். ஆனாலும், வழக்கத்தை விடாத விவசாயிகள் சிலர், இன்றும் ஊடுபயிர் சாகுபடியை விடாமல் செய்து வருகிறார்கள் இந்த ராஜேந்திரனைப் போல!
    தேனி அருகே உள்ள கண்டமனூர் கிராமத்தைச் சேர்ந்தவரான ராஜேந்திரன், கொஞ்சமாகக் கிடைக்கும் கிணற்று நீரை வைத்தே மல்லிகைப் பூ விவசாயத்தை முதலில் துவங்கி, பிறகு படிப்படியாக முருங்கை, வெண்தேக்கு என அதற்குள்ளேயே நடவு செய்து, நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.

    மாடித் தோட்டம் ஒரு மகத்தான மகசூல்!

    மாடித் தோட்டம்
    ஒரு மகத்தான மகசூல்!
    'ஏக்கர் கணக்கில் நிலம், கூலி ஆட்கள், இடம், தண்ணீர் என சகலமும் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே ஓய்வுநேரத்தில் மொட்டை மாடியில் வீட்டுத் தோட்டம் அமைத்து, முதுமையிலும்கூட சம்பாதிக்க முடியும்’ என்பதை நிரூபித்து வருகிறார், சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.
    ''நான், ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர். இந்த வீட்டுக்குக் குடிவந்தப்ப... இந்த ஏரியாவே... செடி, கொடி இல்லாம பாலைவனம் மாதிரி இருந்துச்சு. மொத்த ஏரியாவை மாத்த முடியாட்டியும்... நம்ம வீட்டையாவது பசுமையாக்குவோம்னு நினைச்சுதான் இந்த வீட்டுத்தோட்டத்தை உருவாக்கினேன்'' என்று பெருமையோடு சொன்னவர், தொடர்ந்தார்.

    மஞ்சள் + வெங்காயம் + மிளகாய் + சேனை... உற்பத்திச் செலவை ஈடுகட்டும் உற்சாகக் கூட்டணி!

    மஞ்சள் + வெங்காயம் + மிளகாய் + சேனை...
    உற்பத்திச் செலவை ஈடுகட்டும் உற்சாகக் கூட்டணி!

    ஆண்டுப் பயிரான மஞ்சள் விதைக்கும் விவசாயிகள், அதன் அறுவடைக் காலத்துக்குள், குறுகிய காலப் பயிர்களான வெங்காயம், மிளகாய், துவரை... போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்து, கூடுதல் வருமானம் பார்ப்பது வழக்கம். அந்தவகையில் நாட்டு மஞ்சளுக்கு இடையில் வெங்காயம், மிளகாய், சேனைக்கிழங்கு மூன்றையும் ஊடுபயிராக சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அடுத்துள்ள கும்பிக்கருக்கு கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ். பாலசுந்தரம்!
    அளவெடுத்து அமைக்கப்பட்ட பாத்திகளுக்குள் அணிவகுத்து நிற்கும் மஞ்சள் செடிகள்; அதனூடே பச்சைக் குடைகள் பிடித்தது போல சேனைச்செடிகள்; வெள்ளை மூக்குத்திகளாய் பூவெடுத்து நிற்கும் மிளகாய் செடிகள்; பயிர்களுக்குப் பதமாகப் பாசனம் செய்யும் சொட்டுநீர்க் கருவிகள்... இத்தகைய கண்கொள்ளாக் காட்சிகளுக்கு நடுவே, பராமரிப்புப் பணிகளில் மூழ்கியிருந்தார் பாலசுந்தரம். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும்... குஷியானவர், கை வேலைகளை முடித்துவிட்டு, நம்முன் வந்தார்.

    8 ஏக்கரில் ரூ.4 லட்சம் ஏற்றம் தந்த ஏழு ரக வாழை..!

    8 ஏக்கரில் ரூ.4 லட்சம் ஏற்றம் தந்த ஏழு ரக வாழை..!
    அசத்தும் ஜீரோ பட்ஜெட் விவசாயி...

    ஊடுபயிர் என்றைக்குமே விவசாயத்தை உயர்த்தும் பயிர் என்பதில் சந்தேகமே இல்லை'' என்று அடித்துச் சொல்கிறார், சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள தார்க்காடு பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி, தெய்வம் வரதராஜன். இவர், தனது தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து வருகிறார்.
    பாதை காட்டிய பசுமை விகடன் !
    ஒரு காலைப் பொழுதில் அவரை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேசத் தொடங்கிய வரதராஜன், ''எனக்குப் பூர்வீகமே கொளத்தூர்தானுங்க. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சு முடிச்ச கையோடு, விவசாயத்துக்கு வந்துட்டேன். இப்போ 30 வருஷமாச்சு. தென்னைக்கு இடையில 18 வருஷமா வாழையை ஊடுபயிரா சாகுபடி செஞ்சுக்கிட்டிருக்கேன். கோடைக் காலங்கள்ல கிணத்துப் பாசனம், மழைக் காலங்கள்ல ஏரிப்பாசனம். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான். சம்பாதிக்கிறதுல முக்கால்வாசியை உரக் கடைக்குத்தான் கொடுக்க வேண்டியிருந்துச்சு. அதில்லாம கட்டுபடியான விலையும் கிடைக்கலை.

    ஏற்றம் தரும் எலுமிச்சை...வாரிக்கொடுக்கும் வாழை ! சுவைமிகு கூட்டணி...

    ஏற்றம் தரும் எலுமிச்சை...வாரிக்கொடுக்கும் வாழை !
    சுவைமிகு கூட்டணி...
    மின்சாரப் பிரச்னை, தண்ணீர் தட்டுப்பாடு... என அனைத்தையும் தாண்டி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் முக்கிய இடத்தில் இருப்பவை, எலுமிச்சை மற்றும் வாழை ஆகியவை. இவை இரண்டையுமே ஒன்றாக இணைத்து சாகுபடி செய்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே இருக்கும் பாப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன்.
    குடை பிடித்து நின்ற எலுமிச்சை மரங்கள், சாமரம் வீசி வரவேற்புக் கொடுத்துக் கொண்டிருந்த வாழை மரங்கள் என, விரிந்து கிடந்த தோட்டத்தில்... பராமரிப்புப் பணியில் இருந்த சந்திரசேகரனை 'பசுமை விகடன்’ ஊடுபயிர்கள் சிறப்பிதழுக்காக ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம்.

    Tuesday

    மரபணு மாற்றப்பட்ட உணவுகளால் உலகில் உயிரின வாழ்வுக்கு ஏற்படும் ஆபத்து

    மரபணு பொறியியல் என்பது மரபணுவை நேரடியாக கையாண்டு உருவாக்கப்படும் விளைவுகளைக் குறிக்கும். கூடிய உற்பத்தி தரும் விதைகள் பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (Genetically modifie organism),  செயற்கை உடல் உறுப்புகள் (Artificial Organ), செயற்கை இன்சுலின் என பல தரப்பட்ட பயன் பாடுகள் மரபணு பொறியியலுக்கு உண்டு.

    இது இன்னும் வளர்ச்சி பெற்றுவரும் ஒரு தொழில்நுட்பம். பல வழிகளில் இது நல்லமுறையில் பயன்பட்டாலும் சில பக்க விளைவுகளும் உண்டு. எடுத்துக்காடாக புதிய வகை உயிரினங் களை உருவாகும் பொழுது அவை சில வேளைகளில் சூழ்நிலை மண்ட லங்களுக்கு ஏற்பு இல்லாமல் போகலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டு. இவ்வாறு மாற்றப்பட்ட சில மரக்கறிகள் நீண்ட நாட்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றின் சுவை சற்று குறைந்துள்ள தாக கூறப்படுகிறது.

    Thursday

    புதர் நிலத்திலும் புதையல் எடுக்கலாம்... கலக்கல் வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்!

    புதர் நிலத்திலும் புதையல் எடுக்கலாம்...
    கலக்கல் வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்!
    ''விவசாயத்துல வெற்றி, தோல்வி சகஜம்தாங்க. ஆனா, குதிரைக்குக் கடிவாளம் போட்டமாதிரி எல்லாரும் செய்றதையே நாமளும் செஞ்சுட்டு 'நஷ்டம், நஷ்டம்’னு புலம்பக் கூடாது. நம்ம மண்ணுக்கு, சூழலுக்கு எது தோதுப்பட்டு வருமோ... அதை ஆர்வத்தோடயும் அர்பணிப்போடயும் செஞ்சா வெற்றி தானா வரும். இது என் அனுபவத்துல பாத்த உண்மை''
    -இப்படி நம்பிக்கைத் தெறிக்கப் பேசுகிறார், சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி அருகேயுள்ள மருதன்குடி கிராமத்தைச் சேர்ந்த நாச்சியப்பன்.
    முழுநேர விவசாயிகளே விழிபிதுங்கி நிற்கும் இக்காலக்கட்டத்தில்... பகுதி நேரத் தொழிலாக விவசாயத்தை வெற்றிகரமாக செய்து வரும் நாச்சியப்பனை, உச்சிவெயில் வேளையில் அவருடைய பண்ணையில் சந்தித்தோம். உற்சாகமாகப் பேசத் தொடங்கினார், அவர்.

    Saturday

    வறண்ட பூமியில் இயற்கை விவசாயம்

    நம்பிக்கை, இயற்கை விவசாயத்தை, துணையாக கொண்டு, வறண்ட நிலத்தில் பசுமை புரட்சி செய்து, சாதித்து காட்டியுள்ளார், பல்லடம் அருகேயுள்ள விவசாயி.

    பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது 70 ஏக்கர் தோட்டத்தை, தினமும் எண்ணற்ற விவசாயிகள், ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வியந்துவருகின்றனர்.
    பல்லடம் அருகே அமைந்துள்ளது, சித்தநாயக்கன்பாளையம் கிராமம். ஆறு, ஓடை, குளம், குட்டை ஏதுமில்லாது வானம் பார்த்த பூமியாக இப்பகுதி உள்ளது. இங்குள்ள பூமி சரளை மண், கரிசல் மண்ணாக இருப்பதால் பெரும்பாலும், பலரும் விவசாயம் செய்ய தயங்குகின்றனர். ஆனால், வறண்ட பூமியிலும் விவசாயம் செய்து சாதிக்க முடியும் என்று, நிரூபித்துள்ளார் விவசாயி சின்னச்சாமி. தனக்குள்ள 70 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது தோட்டத்தை, அருகிலுள்ள விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர்.

    Wednesday

    செலவு குறையுது...வரவு கூடுது... ஜெயிக்க வைக்கும் ஜீவாமிர்தம் !


    செலவு குறையுது...வரவு கூடுது...
    ஜெயிக்க வைக்கும் ஜீவாமிர்தம் !

    'ஜீரோ பட்ஜெட்’ விவசாயத்தின் முக்கிய இடுபொருட்கள்... ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் ஆகிய இரண்டும்தான். விவசாயிகளே எளிதில் தயாரித்துக் கொள்ளக்கூடிய இந்த இடுபொருட்களை, ஜீரோ பட்ஜெட் விவசாயிகள் பயன்படுத்தி, கண்கூடாக பலன்களை உணர்ந்திருக்கிறார்கள். அத்தகையோரில், திருப்பூர் மாவட்டம், முத்தூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த புரவிமுத்து-ஈஸ்வரி தம்பதிக்கும் இடமுண்டு. இவர்கள், மரப்பயிர்களுக்கு இந்த இடுபொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
    பத்து ஏக்கரில் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் இவர்களின் பண்ணையில், காலைவேளையில் கால் வைத்தோம். வாய் நிறைந்த சிரிப்புடன் வரவேற்று உபசரித்தனர் தம்பதியர். வேப்பமர நிழலில் கட்டியிருந்த நாட்டுமாடுகளுக்கு வைக்கோல் போட்டபடியே பேச ஆரம்பித்தார், புரவிமுத்து.

    Tuesday

    வெள்ளாடு வளர்ப்பு


    வெள்ளாடு வளர்ப்பு - velladu valarppu

    வெள்ளாடுஏழைகளின் பசுஎன்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.

    யார் தொடங்கலாம்?
    நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள்.
    மானாவரி மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள்

    Monday

    என்ன மரம்.. எத்தனை வருடம்... எவ்வளவு லாபம்..?

    என்ன மரம்.. எத்தனை வருடம்... எவ்வளவு லாபம்..?

    Friday

    கவுரவத்தை விட்டோம்.... கை நிறைய சம்பாதிக்கிறோம்...

    கலக்கும் மகளிர் சுய உதவிக்குழு உழைக்கவேண்டும் என்ற உறுதியும், சாதிக்கவேண்டும் என்ற உணர்வும் இருந்தால் போதும் எந்த தொழிலாக இருந்தாலும் கை நிறைய சம்பாதிக்க முடியும். கவுரவம் பார்க்காமல் வீடு, வீடாக குப்பை சேகரிப்பதில் தொடங்கி அடுத்த கட்டமாக மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பில் இறங்கி மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இப்போது எங்களில் பலர் கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்துகிறோம் என பெருமை பொங்க கூறுகின்றனர் கோவை பெரியநாயக்கன் பாளையம் கூடலூர் சுயம் சுத்தா ஸ்ரீசெல்வநாயகி மகளிர் சுய உதவிக்குழுவினர்.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கூடலூர் கிராமத்தில் பெரிய அளவிலான தொழில் ஏதும் இல்லை. அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லவேண்டும்; அல்லது நகர்ப்புறங்களில் வேலை தேடி வரவேண்டும். இது தான் 15 ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்தின் எதார்த்த நிலை. குடும்பத்தை நடத்தும் அளவுக்கு வருமானம் ஏதும் பெரிதாக கிடைப்பதில்லை. பல வீடுகளில் மாத தேவைக்கே கடன் வாங்கவேண்டிய நிலை.

    வண்ண மீன் வளர்ப்பு + விற்பனைத்தொழில்

    இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தபடியே வருவாய் ஈட்ட வழிகாட்டுகிறது. வண்ண மீன் வளர்ப்பு + விற்பனைத்தொழில்.
    இந்தியாவில் கடல் மற்றும் குளம், குட்டைகளில் வளரக் கூடிய ஆயிரக்கணக்கான வண்ண மீன்கள் உள்ளன. இவற்றை நம் வீடுகளில் எந்த சீதோஷண நிலையிலும் வளர்க்க முடியும். கண்ணாடி பாட்டில் முதல் பெரிய அளவிலான தொட்டிகள் வரை அமைத்து இவற்றை வளர்க்கலாம்.
    நாள்தோறும் காலை, மாலை நேரத்தில் சில நிமிடங்கள் இவற்றின் பராமரிப்புக்கு ஒதுக்கினால் போதும். இல்லத்தரசிகள் இத்தொழில் மூலம் வருமானம் காணலாம்.
    வண்ண மீண்களுக்கு தற்போது நல்ல விற்பனை சந்தை உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தை நம்புவோர் சைனீஸ் ஃபெங்சூயி முறை வாஸ்து பரிகாரமாக மீன் தொட்டிகளை வீடுகளில் வைப்பதுண்டு. இன்றைக்கு இத்தகைய மீன்தொட்டிகளை வைப்போரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    கொட்டகையில் கவனம்... கொட்டும் லாபம்!


    கொட்டகையில் கவனம்... கொட்டும் லாபம்!

    'ஆடு வளர்ப்புக் கொண்டாட்டம்!’ என்ற தலைப்பில், பசுமை விகடன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் திருப்பூர் மாவட்ட பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தெற்கு ரோட்டரி சங்கம் திருப்பூர் ஆகியவை இணைந்து, கடந்த மே 14-ம் தேதி, ரோட்டரி அரங்கில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி மற்றும் அதில் கற்றுக்கொடுக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றி தொடர்ந்து, நம் இதழில் எழுதி வருகிறோம்.
    கடந்த இதழில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி எழுதியிருந்தோம். 'கால்நடைகளுக்கான காப்பீடு, கடனுதவிகள் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்' என்றும் அதன் முடிவில் குறிப்பிட்டிருந்தோம். இவற்றைப் பற்றி அடுத்து பார்க்கலாம். இந்த இதழில், கொட்டகை மற்றும் தீவனம் போன்ற முக்கியமான விஷயங்கள் இடம் பிடிக்கின்றன.  நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறையின் உதவிப் பேராசிரியர், ராமகிருஷ்ணன், கொட்டகை மற்றும் தீவனம் தொடர்பாக, திருப்பூர் பயிற்சி முகாமில் பேசியவை இங்கே இடம் பிடிக்கின்றன.

    Tuesday

    தவறாமல் தடுப்பூசி... நோய் வந்தால் பராமரிப்பு..!

     தவறாமல் தடுப்பூசி... நோய் வந்தால் பராமரிப்பு..!

    'ஆடு வளர்ப்புக் கொண்டாட்டம்!' என்ற தலைப்பில், பசுமை விகடன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் திருப்பூர் மாவட்ட பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தெற்கு ரோட்டரி சங்கம்- திருப்பூர் ஆகியவை இணைந்து, கடந்த மே 14-ம் தேதி, ரோட்டரி அரங்கில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி மற்றும் அதில் கற்றுக் கொடுக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய செய்தி... கடந்த இரு இதழ்களில் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சி இங்கே இடம் பிடிக்கிறது.
    திருப்பூர் மாவட்ட கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியர் எஸ். சித்ராதேவி, ஆடுகளைத் தாக்கும் நோய்களைப் பற்றியும் அவற்றைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் விளக்கினார்.

    1,500 சதுரடியில் 50 வகை பயிர்கள்

     1,500 சதுரடியில் 50 வகை பயிர்கள்
    மாநகருக்குள்ளே ஓர் அதிசயம் !
    மாநகர வாழ்க்கைக்கே உரிய பிரத்யேக பரபரப்பு... தடதட ஓட்டம்... என துள்ளியோடிச் செல்பவர்கள்கூட, சென்னை, புரசைவாக்கத்தில் இருக்கும் அந்த வீட்டைக் கடக்கும்போது சில வினாடிகள் நிதானிக்கிறார்கள். காரணம்... மலர்கள், காய்கள், பழங்கள், செடிகள், கொடிகள் ஆகிவற்றோடு ஒரு குட்டி காடு போல அந்த வீடு காட்சியளிப்பதுதான்! தெருவிலிருக்கும் அந்த அழகான காட்டுக்குச் சொந்தக்காரர்... அமிர்தகுமாரி!
    ''விவசாயம் செய்யணும்னா... ஏக்கர் கணக்குல எல்லாம் நிலம் தேவையில்லை. ஆர்வமும் முயற்சியும் இருந்தா போதும்'' என்று அழுத்தமாகச் சொல்லியபடி பேச்சைத் துவக்கிய அமிர்தகுமாரி,

    Friday

    மண் புழு உரம் தயாரிப்பு

    மண் புழு உரம் தயாரிப்பு

    கழிவுகள் என்பது நாம் முறையாக பயன்படுத்த தவறிய மூலப்பொருள்கள் ஆகும். பொதுவாக வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் குவித்து வைக்கும் பொழுது கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் இருந்து அதிக அளவிலான இயற்கை எருவை உருவாக்க முடியும். இந்த மதிப்புள்ள மூலப்பொருள்களை முறையாக மட்கவைப்பதின் மூலம் நமக்கு மதிப்பூட்டப்பட்ட எரு கிடைக்கிறது. இவ்வாறு அங்ககக் கழிவுகளை மக்கவைத்து வளம் குன்றிய மண்ணை பேணிக்காப்பதே மண்புழு உரத்தின் முதன்மையான பயனாகும்.

    உள்ளுர் இரக மண்புழுக்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்

    Monday

    அரை ஏக்கரில் 21 மூட்டை... கில்லி அடிக்கும் கிச்சடி சம்பா..!


    அரை ஏக்கரில் 21 மூட்டை...
    கில்லி அடிக்கும் கிச்சடி சம்பா..!
    'ரசாயன முறை விவசாயம் மற்றும் வீரிய ரக விதைகள் ஆகியவை மட்டுமே உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்கக்கூடியவை.
    இவற்றில் மட்டுமே அதிக விளைச்சல் சாத்தியம்’ என்று திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், விவசாய விஞ்ஞானிகள் பலர்.
    அதேசமயம், 'வீரிய ரக மகசூலுக்கு எந்த வகையிலும் சளைத்ததில்லை... பாரம்பரிய ரகங்களின் விளைச்சல்' என்று இன்னொருப் பக்கம் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், விவசாயிகள். இதோ... இந்த அருண்கூட அத்தகையோரில் ஒருவர்தான்!
    தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள ஜங்காலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி அருண். கடந்த கார்த்திகை மாதத்தில் அரை ஏக்கரில் கிச்சடி சம்பா நெல்லை நடவு செய்தார். அப்போதைக்கு, அதைப் பார்த்து சந்தேகத்தோடு பேசிய மற்ற விவசாயிகள், தற்போது அவருக்குக் கிடைத்த மகசூலைப் பார்த்து ஆச்சரியத்தில் வாயடைத்துக் கிடக்கின்றனர். அருண்... 2009-ம் ஆண்டு, அக்டோபர் 25-ம் தேதியிட்ட 'பசுமை விகடன்' இதழில் 'கேழ்வரகிலும் வந்தாச்சு... ஒற்றை நாற்று நடவு!’ என்ற செய்தி மூலமாக ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்!

    வியக்க வைக்கும் வீட்டுத் தோட்டம்...!


    10 சென்ட்... 100 பயிர்...
    வியக்க வைக்கும் வீட்டுத் தோட்டம்...!
    நகரமோ... கிராமமோ... புதிதாக வீடு கட்டுகிறார்கள் என்றால், வீட்டுத் தோட்டத்துக்காகவும் இடம் விடுவது, இப்போதெல்லாம் ஒரு வழக்கமாகவே மாறிக் கொண்டிருக்கிறது. ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி போன்றவற்றைப் பயன்படுத்தாமல், சொந்த உழைப்பில் இயற்கை முறையில் நாமே காய்கறிகளை உற்பத்தி செய்து வீட்டின் ஆரோக்கியத்தைக் காப்பதோடு, மனதின் நிம்மதியையும் கூட்டிக் கொள்ளலாம் என்பதுதான் இதற்குக் காரணம்!
    இதோ... கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையிலிருந்து, அருமனை செல்லும் சாலையில் இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கும் 'வட்டவிளை’ கிராமத்தில் வசிக்கும் ரஞ்சிதஜாய் என்பவரின் வீடு... செடி, கொடிகள் சூழ, பசுமை போர்த்திய வீடாகவே மாறி கிடக்கிறது!

    ஆடு வளர்ப்பு - இனங்கள் மற்றும் இனவிருத்தி முறை

     ஆடு வளர்ப்பு- இனங்கள் மற்றும் இனவிருத்தி முறை
    'ஆடு வளர்ப்புக் கொண்டாட்டம்!' என்ற தலைப்பில், பசுமை விகடன்- திருப்பூர் மாவட்ட கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்- தெற்கு ரோட்டரி சங்கம், திருப்பூர் ஆகியவை இணைந்து, கடந்த மே 14-ம் தேதி, ரோட்டரி அரங்கில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதைப் பற்றிய செய்தி கடந்த இதழில் இடம்பிடித்திருந்தது. பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் இதோ...
    பொட்டனேரியில் உள்ள, 'மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலைய'த்தின் உதவிப் பேராசிரியர் ந. பாரதி, வெள்ளாட்டு இனங்கள் மற்றும் இனவிருத்தி முறைகளைப் பற்றி விளக்கும்போது, ''வெள்ளாடுகளை, 'ஏழைகளோட பசு’னுதான் சொல்லணும். சிறு-குறு விவசாயிக, நிலமில்லாத விவசாயிங்களுக்குப் பொருளாதார ரீதியா கை கொடுக்குறது வெள்ளாடுகதான். குணத்தை வெச்சும், வெளித் தோற்றத்தை வெச்சும் அந்தந்தப் பகுதிகள்ல சுலபமா அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய வகைகளைத்தான் இனம்னு சொல்றோம். ஒவ்வொரு பகுதிகள்லயும் இருக்கற ஆடுகளுக்கு... ஓரொரு இனப்பெயர் இருக்கும். தமிழ்நாட்டுல இருக்கற இனங்களைப் பத்திப் பார்ப்போம்.

    பணம் கொழிக்கும் பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பு

     பணம் கொழிக்கும் பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பு
    நிறைஞ்ச தண்ணி... குறைஞ்ச ஆள்... நல்ல லாபம்
    'தண்ணீர் வளம் இருக்கு, மண் சரியில்ல; மண் நல்லாருக்கு, தண்ணியும் இருக்கு, ஆனா... வேலைக்கு ஆளுங்க கிடைக்கல - விவசாய நிலத்தை சும்மாவே போட்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் இப்படி ஒவ்வொரு காரணம் தயாரா இருப்பது இங்கே கண்கூடு!
    இவர்களுக்கு நடுவே... ''தண்ணி வளமும், குறைஞ்ச ஆள் பலமும் இருந்தாலே போதும், மீன் வளர்ப்புல அருமையான லாபம் சம்பாதிக்க முடியும். இதுக்கு தினமும் அரை மணி நேரம் செலவழிச்சாலே போதும்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார்கள், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள திருஉடையான்பட்டி கணேசன்-சண்முகசுந்தரி தம்பதியர்.

    ஆண்டுக்கு ஒரு தடவை பொலிக் கிடாவை மாத்தணும்

    ஆண்டுக்கு ஒரு தடவை பொலிக் கிடாவை மாத்தணும்

    பொட்டனேரியில் உள்ள, 'மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலைய'த்தின் உதவிப் பேராசிரியர் . பாரதி, வெள்ளாட்டு இனங்கள் மற்றும் இனவிருத்தி முறைகளைப் பற்றி விளக்கும்போது, ''வெள்ளாடுகளை, 'ஏழைகளோட பசுனுதான் சொல்லணும். சிறு-குறு விவசாயிக, நிலமில்லாத விவசாயிங்களுக்குப் பொருளாதார ரீதியா கை கொடுக்குறது வெள்ளாடுகதான். குணத்தை வெச்சும், வெளித் தோற்றத்தை வெச்சும் அந்தந்தப் பகுதிகள்ல சுலபமா அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய வகைகளைத்தான் இனம்னு சொல்றோம். ஒவ்வொரு பகுதிகள்லயும் இருக்கற ஆடுகளுக்கு... ஓரொரு இனப்பெயர் இருக்கும். தமிழ்நாட்டுல இருக்கற இனங்களைப் பத்திப் பார்ப்போம்.

    Wednesday

    சிப்பிக் காளான் வளர்ப்பு

    சிப்பிக் காளான் வளர்ப்பு

    பருவம் மற்றும் இரகங்கள்
    ·          வருடம் முழுவதும் காளான் வளர்க்கலாம்
    ·          காளான் வளர்ப்பை வீட்டிலேயே செய்யலாம் அல்லது காளான் குடில் அமைத்து செய்யலாம்.
    ·          வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை

    Thursday

    100% மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம்!


    100% மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம்!

    விவசாயத்தில் உள்ள தலையாய பிரச்னை, தண்ணீர் பற்றாக்குறைதான். இதனால், விவசாயத்தையே மூட்டை கட்டிவிட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகிறார்கள், பல விவசாயிகள். ஆனால், பாசன முறையை மாற்றி, குறைவான தண்ணீரிலேயே நிறைவாக விவசாயம் பார்க்கும் வழிமுறைகளும் பல உள்ளன. இப்படி மாறத் தயாராக உள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு... 100 சதவிகித மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது, தமிழக அரசு.

    வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு

    மண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபகாலாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம்.
    இத்தகைய சூழலில் மண்புழு உர தயாரிப்பினை பெரிய அளவில் செய்து வருவது வியாபார நோக்கமாகும்.
    இதனால் விவசாயிகள் விலை கொடுத்து வாங்குவதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றனர்.