இந்த வேளாண்மை, இயற்கையின் போக்கில் மரபு வழியாக நடந்தது. இந்த மரபு வேளாண்மை அல்லது பாரம்பரிய வேளாண்மை வேதி உரங்கள் அல்லது ரசாயன உரங்களின் வருகைக்கு முன்பு நடந்தவை.
இன்றைய ‘இயற்கை வழி வேளாண்மை' என்ற சொல்லாடல் கலப்பின விதைகள், வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘பசுமைப் புரட்சி' தொழில்நுட்ப முறைக்கு மாற்றான, அதே போன்றதொரு நுட்பமான வேளாண் தொழில்நுட்ப முறைகளைச் சுட்டும் சொல்லாக உள்ளது.