Monday

தமிழர்களின் அளவீடுகளும் அதிநுட்ப அறிவாற்றலும்!


நாழி, குருணி, பதக்கு...
தமிழர்களின் அளவீடுகளும் அதிநுட்ப அறிவாற்றலும்!
ஆதிகாலத்திலிருந்தே தங்களுக்கென அளவீட்டு முறையைக் கண்டுபிடித்து, அதைப் பயன்படுத்தி வந்தவர்கள் தமிழர்கள். ஆங்கிலேயர்களின்  ஆக்கிரமிப்பு ஆரம்பமான பிறகு, அவர்களுடைய அளவீட்டு முறைகள் மெள்ள இங்கே புகுத்தப்பட்டதால்... பாரம்பரிய அளவீட்டு முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் இந்திய அரசாங்கமே, ஆங்கில அளவீட்டு முறைக்கு ஒட்டுமொத்தமாக சலாம் போட்டு சரண்டராகிவிட்ட நிலையில்... பாரம்பரிய அளவீட்டு முறைகள், சட்டப்பூர்வ அங்கீகாரத்தை இழந்துவிட்டன. ஆனாலும், கிராமப்புறங்கள் பலவற்றிலும், இன்னமும்கூட அவை புழக்கத்தில் இருக்கின்றன என்பது ஆச்சர்யமே!
ஆழமான அறிவின் அளவீடு !

மாவுப்பூச்சிக்கு மணியான தீர்வு!

 மாவுப்பூச்சிக்கு மணியான தீர்வு!
''நானும், என் போலீஸ்கார நண்பர் ஒருத்தரும், கே.வி.கே. ஏற்பாடு பண்ணுன விவசாயப் பயிற்சிக்குப் போயிருந்தோம். நண்பரோட கொய்யாத் தோப்புல மாவுப்பூச்சி பிரச்னை அதிகம். அவர், கே.வி.கே. விஞ்ஞானிகள்கிட்ட, 'மாவுப்பூச்சியை கண்ட்ரோலே பண்ண முடியல. ஏதாவது வழி சொல்லுங்க’னு கேட்டார்.
அந்த விஞ்ஞானி, 'அப்படியா... மாவுப்பூச்சியை கண்ட்ரோல் பண்ண முடியலையா... ஓ, அது அப்படித்தான். சரி பாப்போம்’னு சொன்னார். நாங்களும் விடாம திரும்பத் திரும்ப கேட்டும், அவரால மாவுப்புச்சிக்குத் தீர்வைச் சொல்ல முடியல. 'அவருக்குத் தெரிஞ்சாத்தான சொல்வாரு’னு விட்டுட்டோம். ஆனா, அதுக்கான தீர்வை இந்தப் பயிற்சியில... போற போக்குல ரொம்ப எளிமையா சொல்லிக் கொடுத்துட்டார், செல்வம்''
- பிப்ரவரி 10-ம் தேதி, திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி, பரமகல்யாணி கல்யாண மண்டபத்தில் 'பசுமை விகடன்', பாபநாசம் குடிசை ஆசிரமம் மற்றும் நெல்லை ஜேசீஸ் கிளப் ஆகியவை சார்பில் இயற்கை விவசாயப் பயிற்சி முகாம் ஏற்பாடாகியிருந்தது. அங்கேதான் இப்படி சிலாகித்தார் மதுரையைச் சேர்ந்த 'பசுமை விகடன்' தீவிர வாசகர், பொன்னையா!
'பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் இயற்கை நெல் சாகுபடி’ என்கிற

ஆயுளைக் கூட்டும் அற்புத அரிசி

 ஆயுளைக் கூட்டும் அற்புத அரிசி
பலகாரத்துக்கேற்ற ரகம், சாதத்துக்கு ஏற்ற ரகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற ரகம்... என்று பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றுக்குமே ஒவ்வொரு சிறப்பு குணமுண்டு. இதற்காகவே, இயற்கை வழி முறையில் விவசாயம் செய்பவர்கள் இப்படிப்பட்ட ரகங்களைத் தேடிப்பிடித்து பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்... போன்ற நோய்களை விரட்டும் மருத்துவ குணமுள்ள 'காலா நமக்’ எனப்படும் பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், பெரிய கொழப்பளூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மணி.  
இவர், 25.1.2012 தேதியிட்ட இதழில், வெளியான 'வறட்சியிலும் வாடாத வரகு... பாடில்லாமல் தருமே வரவு!’ கட்டுரை மூலமாக வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.

இரண்டே ஆண்டுகளில் கொட்டிக் கொடுக்கும் நாட்டு ரகம் !


பெயர் வாங்கித் தந்த, பெயரில்லா எலுமிச்சை... இயற்கை விவசாயியின் எளிய கண்டுபிடிப்பு !
இரண்டே ஆண்டுகளில் கொட்டிக் கொடுக்கும் நாட்டு ரகம் !
விவசாயப் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிலையங்களும் லட்சக்கணக்கில் செலவு செய்து, அவ்வப்போது புதிய ரகப்பயிர்களை அறிமுகப்படுத்தி வருவது வழக்கம். ஆனால், சில விவசாயிகள், தங்களுடைய அனுபவத்தை வைத்தே, பெரிதாக செலவேதும் இல்லாமல், புதுப்புது ரகங்களை சர்வசாதாரணமாக உருவாக்கி விடுவதுண்டு. இத்தகைய ரகங்களுக்கு முன்பாக... விஞ்ஞானிகளின் ரகங்கள் ஈடுகொடுக்க முடியாமல் போய்விடுவதும் உண்டு. அந்தவகையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 'புளியங்குடி’ அந்தோணிசாமி உருவாக்கியுள்ள புதிய ரக எலுமிச்சையை, தென் மாவட்ட விவசாயிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். பின்னே... குறைவான காலத்திலேயே நிறைவான மகசூலைத் தருகிறதே!
இந்த ரக எலுமிச்சையை நடவு செய்து நிறைவான மகசூலை எடுத்து வருபவர்களில் ஒருவராக வெற்றிநடை போடுகிறார்... கடம்பூர் இளைய ஜமீன்தார், மாணிக்கராஜா. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரில் இருந்து, கயத்தாறு போகும் வழியில் மூன்றாவது கிலோ மீட்டரில் வருகிறது, ஜமீன் தோட்டம். தோட்டத்திலிருந்த மாணிக்கராஜாவிடம், நாம் அறிமுகப்படுத்திக்கொள்ள, உற்சாகமாகப் பேச்சைத் துவக்கினார்.

பசுமை நாயகன் - ஒருங்கிணைந்த பண்ணை

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசு தரும் மானியத்தை விடவும், தொலைத்தொடர்பு துறைக்கு அரசு போடும் திட்டங்களை விடவும்விவசாயத் துறைக்கு மானியம் கிடைப்பது மிக மிகக் குறைவு. அப்படி அரசு அரிதாகப்போடும் திட்டங்களும், மானியங்களும் விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்ச்சேருகிறதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அப்படித் தப்பித்தவறி அரசியல்வாதிகளின் கவனக்குறைவால் அவர்களின் பாக்கெட்டுக்குப் போகாமல் விவசாயிகளுக்குப் போகிறது என்றாலும் ஊரில் உள்ள அரசியல் செல்வாக்கு மற்றும் பணம் உள்ள விவசாயிகளுக்குத்தான் போய்ச்சேர்கிறது. இப்படி ஏழை விவசாயிகளுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில், அந்த இடைவெளியைப் பாலம்போல செயல்பட்டு  இணைத்துக்கொண்டிருக்கிறது புதுவையில் இயங்கிவரும் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை அபிவிருத்தி மையம் என்ற தனியார் அமைப்பு. ஏழை விவசாயிகளுக்குக் கடன் வாங்கித்தருவது, புதிய திட்டங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்துவது என முழுமையாக விவசாயிகளுக்கென இயங்கிக்கொண்டு வருகிறது இந்த மையம்.

Sunday

மொட்டைமாடி காய்கறித் தோட்டம்

ஏக்கர் கணக்கில் நிலம், பாசனத்துக்குக் கிணறு, கால்நடைகள் என இருந்தால் மட்டும்தான், விவசாயம் சாத்தியம்’ என்றுதான் பலரும் நினைக்கிறோம். அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே நகரத்தில் வாழ்பவர்கள், கிராமங்களில் இருந்து நகர வாழ்க்கைக்கு நகர்ந்தவர்கள், கிராமத்திலேயே நகரத்தைப் போன்ற வாழ்க்கையைப் பழகிக் கொண்டவர்கள் என்று பலருக்கும் விவசாயம் ஒரு கனவாகவே கடந்து விடுகிறது. ஆனாலும், மொட்டை மாடியையே தோட்டமாக்கி விவசாயக் கனவை நனவாக்கிக் கொள்பவர்களும் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், ஷிஜி. கிராமத்தில்தான் வசிக்கிறார் ஷிஜி. என்றாலும், இவருக்குச் சொந்தமாகவோ, வீட்டைச் சுற்றியோ நிலம் கிடையாது.