Sunday

கல்வி, விவசாயம், கழிவுநீர் மேம்பாடு உட்பட பல துறைகளில் தமிழகத்திற்கு கைகொடுக்கும் இஸ்ரேல்

சென்னை அருகே நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல் கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி மூலம் வேளாண்மைக¢கு பயன்படுத்துதல் போன்றவற்றில் இஸ்ரேல் & தமிழகம் இடையே தொழில் உறவுகள் மேம்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது  என்று  இந்தியாவுக¢கான இஸ்ரேலிய தூதர் அலான் உஷ்பிஸ் தெரிவித்தார்.

Friday

கொடி பீன்ஸ்....மானாவாரியில் ஒரு மகத்தான சாகுபடி

கொடி பீன்ஸ்....மானாவாரியில் ஒரு மகத்தான சாகுபடி
காய்கறி விவசாயம் எப்போதுமே கைவிடாது’ என்பதை அனைத்து விவசாயிகளுமே நன்கு புரிந்து வைத்திருப்பர். ஆனால், பாசன வசதி இருந்தால் மட்டுமே காய்கறி விவசாயம் சாத்தியப்படும் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்... கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் பகுதி விவசாயிகள் மானாவாரியில் பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ்... என காய்கறிகளை சாகுபடி செய்து கலக்கி வருகிறார்கள். இப்பகுதிகளில் கிடைக்கும் பருவமழை, அதிகளவில் வெயிலும், குளிரும் இல்லாத மிதமானச் சூழல் ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்துவதுதான் இவர்களின் வெற்றிக்கான சூத்திரம்!
கர்நாடக மாநிலம், உடையார்பாளையா பகுதியைச் சேர்ந்தவர், ராபர்ட். இவர், கேழ்வரகு, கொடி பீன்ஸ் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகிறார். விட்டு விட்டுப் பெய்த லேசான மழைத் தூறலில் நனைந்தபடியே அவருடைய வயலுக்குள் நுழைந்தோம்.

தலைச்சேரி... சிரோஹி... போயர்... 4 ஆண்டுகளில் 50 லட்சம்


தலைச்சேரி... சிரோஹி... போயர்... 4 ஆண்டுகளில் 50 லட்சம்...
அள்ளிக் கொடுக்கும் ஆட்டுப்பண்ணை!
ஆசை இருக்கு அரசாள... அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க’ என்று கிண்டலாகச் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு அரசாள்வதைவிட... இது மேல் என்று சொல்லும் அளவுக்கு... மரியாதைக்குரிய மற்றும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது ஆடு மேய்த்தல்!
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அதிகளவில் உருவாகி வரும் ஆட்டுப்பண்ணைகளே அதற்கு சாட்சி! அவர்களில் ஒருவராக... நிறைவான லாபம் பார்த்து வருகிறார்,

Thursday

4 ஏக்கர்... 7 ஆண்டு... 20 லட்சம் - கைகொடுத்த மரம் வளர்ப்பு!

4 ஏக்கர்... 7 ஆண்டு... 20 லட்சம்

விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்வாழ்க்கை முறை, பணிச்சூழல் ஆகிய காரணங்களால், விவசாயத்தைத் தொடர முடியாத பலரும், நிலங்களைப் பராமரிக்க முடியாமல், விற்று விடுவது வழக்கம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட நிலத்தை விற்க மனமில்லாமல், அதில் மரங்களை வளர்த்து, விவசாயத்தைத் தொடர்பவர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர்சென்னை, மாங்காடு, விநாயகமூர்த்தி.

குன்றத்தூர் நால்ரோட்டிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் குறுகிய சாலையில் இரண்டு நிமிடம் பயணித்தால், சிமெண்ட் காம்பவுண்டுக்குள் கம்பீரமாகக் காட்சி தருகிறது

Monday

மீன் வளர்ப்பு பற்றிய சில தகவல்கள்

மீன் வளர்ப்பு பற்றிய சில தகவல்கள்

Fish-Tank
வீட்டில் மீன்கள் வளர்ப்பது பொழுதுபோக்கு அம்சங்களுள் ஒன்று. மீன் வளர்ப்பதிலும் அதற்கென மீன் காட்சியகம் வைப்பதிலும் பலருக்கு அச்சமும் கவலையும் உண்டாகிறது. சொல்லப்போனால் இந்த பொழுதுபோக்கை சுற்றி பல கட்டுக்கதைகள் புனையப்பட்டுள்ளது. அவைகளையெல்லாம் நம்ப ஆரம்பித்தால், இந்த அற்புதமான பொழுதுபோக்கை இழந்துவிடுவீர்கள். அப்படிப்பட்ட சில கட்டுக்கதைகளைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா.