Wednesday

வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள்


வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள் பண்டைக்காலம் முதலே தொன்று தொட்டு அனைத்து மக்களாலும் உண்ணப்பட்டு வந்துள்ளது. வாத்து இறைச்சியில் மனிதர்களுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் முக்கியமாக அதிக அளவிலான பன்செறிவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. தற்போது கோழி இறைச்சி பிரபலமடைந்துள்ளது போல் வாத்து இறைச்சி அனைவராலும் விரும்பி உண்ணப்படுவதில்லை.


சாதாரணமாக, வாத்துக்கள் அதிக அளவில் பெரிய முட்டைகளை இடவல்லவை. மேலும் வாத்துக்களை வீட்டுப்புறத்தில் வளர்ப்பதன் மூலம் வீட்டின் அன்றாடத் தேவையான உணவும், வருமானமும், கிடைக்க ஏதுவாக அமையும். அது மட்டுமல்லாமல் வாத்துக்கள் குறைந்த அளவிலான தீவனத்தை உட்கொண்டு நல்ல உடல் எடையை அடைந்து முட்டையிடும் திறனையும் கொண்டுள்ளதால், குறைவான உற்பத்திச் செலவில் வாத்துக்களை வளர்த்து அதிக இலாபம் அடையலாம்.

சாண எரிவாயு தயாரிப்பு

'வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பது போல, தனியார்மயத்தின் விளைவை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா. பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியத் துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு, மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை ஏறுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விண்ணில் பறக்கிறது. 'ஆண்டுக்கு ஒன்பது சிலிண்டர்கள் மட்டுமே மானியத்தில் கொடுப்போம்...’ என கறார் காட்டுகிறது, அரசு. 'இதை எப்படி சமாளிப்பது?’ எனத் தெரியாமல், எரிவாயு இல்லாமலே எரிகிறது, சாமானியனின் வயிறு.

Monday

ஏக்கருக்கு ஒரு லட்சம்... பந்தல் காய்கறி... பக்காவான வருமானம்...


ஏக்கருக்கு ஒரு லட்சம்... பந்தல் காய்கறி... பக்காவான வருமானம்...
குதூகலமூட்டும் குறும்புடலை!
'வேலையாட்கள் குறைவாகத்தான் தேவைப்பட வேண்டும்; அதிக வேலை வைக்கக் கூடாது; நல்ல வருமானமும் கிடைக்க வேண்டும்...'
-நீங்கள், இப்படியெல்லாம் கணக்குப் போட்டு விவசாயம் செய்பவராக இருந்தால், உங்களுக்கான விவசாயம்... பந்தல் காய்கறிகளாகத்தான் இருக்க முடியும். ஆம், இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் விவசாயிகள் பலரும், தொடர்ந்து பந்தல் வகை காய்கறிகளைத்தான் சாகுபடி செய்து வருகிறார்கள்... திருவண்ணாமலை, வேங்கிக்கால், சுரேஷ்குமார்! இவர், குறும்புடலை சாகுபடியில், குதூகல வருமானம் பார்த்துக் கொண்டிருப்பவர்!