Thursday

100% மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம்!


100% மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம்!

விவசாயத்தில் உள்ள தலையாய பிரச்னை, தண்ணீர் பற்றாக்குறைதான். இதனால், விவசாயத்தையே மூட்டை கட்டிவிட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகிறார்கள், பல விவசாயிகள். ஆனால், பாசன முறையை மாற்றி, குறைவான தண்ணீரிலேயே நிறைவாக விவசாயம் பார்க்கும் வழிமுறைகளும் பல உள்ளன. இப்படி மாறத் தயாராக உள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு... 100 சதவிகித மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது, தமிழக அரசு.