Monday

அழகான மீன்களை வளர்ப்பது எப்படி ?

அழகான மீன்களை வளர்ப்பது எப்படி ?


தூய்மை காத்தல்

மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையாதது.

## தொட்டியில் உள்ள தண்ணீர், நீர் தேங்கிய இடங்கள், வடிகட்டிகள், சரளைக்கற்கள், அலங்கார செடி கொடிகள், பாசி படிந்த தொட்டி சுவர்கள் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்வதினால் மீன்கள் ஆரோக்கியத்துடன் வாழும் நிலை உருவாகும். 

## முக்கியமாக மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்கு எண்ணெய், சோப்பு, வேறு விதமான ரசாயன சலவை பொருள் போன்றவற்றை கண்டிப்பாக உபயோகப் படுத்துதல் கூடாது. இதனால் மீன்கள் இறந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. 

## மீன் தொட்டியில் இருந்து நீக்கிய அழுக்கு நீரை கீழே கொட்டி விரயம் ஆக்காதீர்கள். உங்கள் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு இந்த நீர் ஒரு பயனுள்ள உரம் ஆகும்.

அளவான உணவு

## மீன்கள் உணவு உண்பது, ஆற்றல் தேவை என்பதற்காக மட்டுமே. ஆதலால், மீன்களை தேவைக்கு அதிகமாக ஊட்டினால் மந்த நிலை அடைந்து நாளடைவில் இறந்து போகும். 

## அடிக்கடி விளையாட்டாக உணவை தொட்டியில் கொட்டாமல், தினம் ஒரு முறை குறிப்பிட்ட நேரத்தில் உணவளிக்க வேண்டும். 

## நாம் வகை வகையாக விரும்பி உண்ணுவதை போல், மீன்களுக்கும் வெவ்வேறு சுவைகளில் கிடைக்கும் உணவுகளை அளிக்க வேண்டும். வாரத்தில் ஐந்து நாள் உலர்ந்த வகை உணவுகளையும், ஒரு நாள் குளிரேற்றிய (அ) உயிருணவையும் கொடுத்து, மீதம் உள்ள ஒரு நாள் உணவே இல்லாமல் பட்டினி கூட போடலாம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். 

## மீன் தொட்டியில் உணவை இடும் போது மீன்கள் துள்ளி வந்து உற்சாகமாக சாப்பிட்டால், அவை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக பொருள்.     


மீன் இனத்தை தேர்வு செய்தல்

## சரியான மீன் இனத்தை தேர்வு செய்து வளர்ப்பது ஒரு பெரிய சவால் ஆகும். எந்த மீன் இனம் தனித்து வாழும்? எவை கூட்டத்தோடு வாழும்? எந்த இனம் வேறு இனத்தோடு சேரும் என்ற விவரங்களை எல்லாம் சேகரித்து ஆலோசித்து மீன் வாங்கி வளர்த்தால் தான், அவை ஆரோக்கியமாக சந்தோஷமாக நீண்ட நாள் வாழும். 

## இட பற்றாக்குறை ஏற்படாத வகையில் கணிசமான தொகையில் மீன் வளர்க்க வேண்டும். 

## தொட்டியில், மேல்தளம், நடுத்தளம், கீழ்தளம் என்று இடம் பிரித்து அங்கு வாழும் வகை மீன்களை இனம் கண்டு வளர்க்க வேண்டும். 

## நடுத்தளத்தில் வாழும் மீன்கள் கூட்டமாக வாழ விரும்பும். கீழ்த்தளத்தில் வாழும் மீன்கள் பெரும்பாலும் சண்டை மனப்பாங்கு உடையவை. ஆகையால் அவற்றை குறைவான எண்ணிக்கையில் வாங்கி, மற்ற மீன்களை தொந்தரவு செய்யதவாறு கண்காணிக்க வேண்டும். 

செடிகளால் காற்றூட்டம்

## மீன் தொட்டியானது, மீன்கள் வாழ்வதற்கு தேவையான பிராணவாயுவை உருவாக்கும் ஒரு சிறந்த இடமாக அமைய வேண்டும். சிறு செடிகள் மீன்களுக்கு புகலிடம் தருவதோடல்லாமல், மீன் தொட்டியின் அழகை எடுத்து காட்டுவதுடன், மீன்களுக்கு தவணை முறையில் பிராணவாயுவை கொடுக்கிறது. 

## மீன் தொட்டியில் சேரும் அழுக்கை குறைக்க உதவுகிறது. 

## அது மட்டுமல்லாமல், இலைகளில் படியும் சில வகை பாசிகளை மீன்கள் விரும்பி உண்ணும். 

## ஆனால், உயிரோட்டமுள்ள செடி கொடிகளை வைத்து பராமரிப்பது எளிதல்ல. அதற்கு முக்கியமாக பிரகாசமான வெளிச்சமும், நல்ல கரிவளி (Carbon Di-Oxide) மட்டமும் தேவை.

கழிவுகளை அப்புறப்படுதல்

 ## மீன்களுக்கு வழங்கும் நறுக்கிய கீரை, முட்டைகொஸ், வெள்ளரிக்காய் போன்ற உயிருணவுகளின் மிச்சங்களை ஒரு மணி நேரத்திற்குள் அப்புறபடுத்த வேண்டும். 

## உயிரோட்டமுள்ள செடிகள் சில காரணிகளால் அழுகும் தன்மை உடையவை. உதிர்ந்த இலை தழைகளை அழுக விடாமல் உடனடியாக அப்புறபடுத்துவது புத்திசாலித்தனம். 

## பச்சை நிற பாசி ஆரோக்கியமானது. ஆனால் பழுப்பு நிற பாசி சேர்வது, மீன் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை குறிக்கும். 

## முக்கியமாக, நீங்கள் காதலிக்கும் உங்கள் அன்பு மீன் இறந்து விட்டால், சிறுதும் யோசிக்காமல், உடனடியாக தொட்டியை விட்டு நீக்கி விட வேண்டும். இவ்வளவு நாள் உங்கள் நண்பனாக இருந்தமைக்கு ஒரு மனப்பூர்வமான நன்றியை உதிர்த்துவிட்டு, அதை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஏனென்றால், மீன்கள் இறந்த உடனேயே அழுக ஆரம்பிக்கும். இதனால், தொட்டியில் இருக்கும் மற்ற சிறு மீன்கள் பாதிப்படையும்.

posted by yalini.
Source: http://yazhinidhu.blogspot.in/2013/12/tips-on-aquarium-maintenance.html

Saturday

கோழி வளர்ப்பு

கோழி வளர்ப்பு
பொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
  • கூண்டு முறை / கொட்டகை முறை
  • ஆழ்கூள முறை
கொட்டகை முறை
கோழி ஒன்றுக்கு 0.6-0.75 சதுர அஎ அளவு வீதம் இருக்கும்படி கோழிக் கொட்டகை அமைக்கவேண்டும். இம்முறைதான் நன்கு பலன் தரக்கூடிய கோழி வளர்ப்பு முறையாகும். கூரை ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கொண்டு அமைக்கலாம். சிறு சிறு அறைகளாகத்  தடுத்து ஓர் அறைக்கு 300 குஞ்சுகளுக்கு மிகாமல் வளர்க்கலாம்.

Friday

ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு 5 லட்சம்...

ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு 5 லட்சம்...
ஆற்றங்கரைகளிலும், சாலை ஓரங்களிலும் காய்த்துக் குலுங்கிய நாவல் மரங்களில் ஏறி விளையாடியதும், நாவல் பழங்களைப் பறித்தும், பொறுக்கியும் ருசித்தது... தற்போதைய நடுத்தர வயதினரின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
கால ஓட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் என்ற பெயரில் மரங்களைக் கொலை செய்வதிலும்; மணல் மாஃபியாக்கள் ஆறுகளைக் கொலை செய்வதிலும் நாவல் மரங்கள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்றுவிட்டன. தவிர, நாவலை தோட்டத்தில் வைத்தால், பேய், பிசாசு வரும் என்கிற மூடநம்பிக்கையும் பரவலாக இருப்பதால், பெரும்பாலான விவசாயிகளும் இதை சாகுபடி செய்யாமல் தவிர்க்கிறார்கள்.

1 ஏக்கர்...6 மாதம்...ரூ.2,25,000

1 ஏக்கர்...6 மாதம்...ரூ.2,25,000
வறட்சியிலும் வாரிக் கொடுக்கும் வரிப்புடலை !
'ஆறு, குளம், ஏரி... என எந்த ஒரு பாசனவசதியும் கிடையாது. எப்போதாவது கிடைக்கும் பருவமழை மட்டுமே நிலத்தடி நீருக்கான ஆதாரம்' இப்படிப்பட்ட சூழ்நிலையில், 5 போர்வெல்கள் மூலம் கிடைக்கும் தண்ணீரை ஒன்றிணைத்து, ஒருநாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே பாசனம் செய்து, புடலை சாகுபடியில் நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள், திருப்பூர் மாவட்டம், கேத்தனூர் பகுதியில் இருக்கும் செட்டியார்தோட்டம், எம்.வி. செல்வராஜ்-தவமணி தம்பதி.
'விர்விர்' ஓசையுடன் அலுமினியக் காற்றாலைகள் காற்றைக் கடைந்து கொண்டிருக்கும் பொட்டல் காடுகளுக்கு மத்தியில், பாலைவனச் சோலையாக மிளிர்கிறது, இவர்களுடைய தோட்டம். படுதா விரித்தது போன்று விரிந்து கிடக்கிறது, ஆளுயரப் பசும்பந்தல். அதனுள் வெளிர்பச்சை நிறத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் குறும்புடலங்காய்களைப் பறித்து, பிளாஸ்டிக் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தவர்களைச் சந்தித்தோம்.
பாதுகாத்த பந்தல் சாகுபடி!
புடலைப் பெட்டிகளை வரிசையாக வைத்து, ஈரக்கோணியைப் போர்த்தி விட்டுப்பேசிய செல்வராஜ், ''எனக்கு இங்க பத்து ஏக்கர் இருக்கு. தோட்டத்துலயே வீடும் இருக்கு. 20 வருஷத்துக்கு முந்தியெல்லாம் போகம் தவறாம மழை கிடைக்கும். அதனால, கிணத்துலயும் நெறைய தண்ணி இருந்துச்சு. மிளகாய், வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம்னு மனம்குளிர வெள்ளாமை செஞ்சோம். 10 வருஷமா நிலைமை தலைகீழாயிடுச்சு. மழை பொய்த்துப் போனதால கிணறுகளும் வத்திப்போச்சு. ஆயிரக்கணக்குல செலவு செஞ்சு போர்வெல் போட்டும் பலன் இல்லை. நிறைய பேரு காற்றாலை கம்பெனிகளுக்கு நிலத்தை வித்துட்டு வெளியூர் போயிட்டாங்க. நாங்களும் இந்த முடிவுக்குத்தான் வந்திருப்போம். ஆனா, இந்த மண்ணு எங்களை தடுத்து நிறுத்தினதோட... தினம்தோறும் காசும் பார்க்க வெச்சுடுச்சு. காய்கறிப்பந்தல், சொட்டுநீர்ப் பாசனம், இயற்கை விவசாயம்... இந்த மூணும் இல்லேனா, நாங்க எப்பவோ ஊரை காலி பண்ணிட்டு போயிருப்போம்'' சிறிது இடைவெளிவிட்ட செல்வராஜ், தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்தார்.
''குறைஞ்ச தண்ணியை வெச்சு என்ன விவசாயம் செய்யலாம்னு யோசனையில இருந்தப்போதான், பக்கத்துத் தோட்டத்துக்காரர் கேத்தனூர் பழனிச்சாமி அய்யா, 'காய்கறிப் பந்தல் போடு... கவலைய விடு’னு நிறைய ஆலோசனைகள் கொடுத்தார். 2004-ம் வருஷம் ஒரு ஏக்கர்ல பந்தல் போட்டோம். இந்தப் பத்து வருஷமா புடலை, பாகல்னு மாத்தி மாத்தி சாகுபடி செய்றோம். நிரந்தர வருமானம் கிடைக்கிறதால நிம்மதியா இருக்கோம். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான். இப்ப 5 வருஷமா இயற்கை முறையிலதான் சாகுபடி செய்றோம். அந்தப் பாதையில எங்களைத் திருப்பிவிட்டதும் அவர்தான்.
மொத்தம் 5 போர்வெல் இருக்கு. இதுல கிடைக்கிற தண்ணியை மொத்தமா கிணத்துலவிட்டு, பாசனம் செய்றோம். இது, கரிசல் நிலம். செம்மண் கொட்டி வளப்படுத்தி, ஒரு ஏக்கர்ல மட்டும், 'வரிக்குறும்புடலை’ங்கிற நாட்டுரகத்தை சாகுபடி செய்றோம். இதுக்கு பட்டம் கிடையாது. எல்லா போகத்துலயும் வளரும். நாங்க கல்பந்தல் போடுறப்போ
60 ஆயிரம் ரூபாய்தான் செலவாச்சு. இப்போ கல் பந்தலுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும்'' என்ற செல்வராஜ், சாகுபடி செய்யும் விதத்தைச் சொன்னார். அது பாடமாக இங்கே விரிகிறது.
ஏக்கருக்கு 700 கிராம் விதை!
''சாகுபடி நிலத்தில் கட்டிகள் இல்லாமல் மண் பொலபொலப்பாகும் அளவுக்கு உழவு செய்து, இரண்டு வாரம் ஆறப்போட்டு... ஏக்கருக்கு 10 டன் தொழுவுரத்தைக் கொட்டி, ஓர் உழவு செய்யவேண்டும். பிறகு, கல்தூண் பந்தல் அமைத்து, வரிசைக்கு வரிசை 12 அடி இடைவெளிவிட்டு... ஒன்றரையடி அகலத்தில்  நீள்வரப்புகளை அமைத்து, அவற்றின் மத்தியில் சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வரப்புகளின் மத்தியில் ஒரு கன அடி அளவுக்குக் குழியெடுத்து...
2 டன் தொழுவுரம், தலா ஒன்றரை கிலோ அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அனைத்துக் குழிகளிலும் பகிர்ந்து இட்டு, பாசனம் செய்ய வேண்டும். குழி ஈரமாக இருக்கும்போதே, பஞ்சகவ்யாவில் நனைத்து, விதைநேர்த்தி செய்யப்பட்ட வரிப்புடலை விதைகளை குழிக்கு இரண்டு வீதம் நடவேண்டும். ஏக்கருக்கு 700 கிராம் விதை தேவைப்படும்.
நடவு செய்த 10-ம் நாளில் விதைகள் முளைக்கத் தொடங்கும். தொடர்ந்து தினமும் 30 நிமிடம் தண்ணீர் கொடுத்தால் போதும். 20-ம் நாளில் களை எடுக்கவேண்டும். தலா
20 கிலோ கடலைப் பிண்ணாக்கு, பருத்திவிதைப் பிண்ணாக்கு ஆகியவற்றை நான்கு நாட்கள் நீரில் ஊறவைத்து... களையெடுத்த பிறகு, குழிக்கு 300 மில்லி வீதம் நேரடியாக ஊற்ற வேண்டும். இக்கரைசலை அறுவடை வரை ஒரு வார இடைவெளியில் தொடர்ந்து கொடுக்கவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு செடிக்கு முக்கால் லிட்டர் பஞ்சகவ்யா வீதம், வேர்ப்பகுதியில் ஊற்றி வரவேண்டும். வளரும் கொடிகள் ஊக்கமுடன் படர்ந்து செல்ல இது அவசியம்.
பாதிப்பை ஏற்படுத்தும் பக்கக்கிளை!
30-ம் நாளில் கொடிகள் ஓடத்தொடங்கிவிடும். இந்த நேரத்தில் ஒவ்வொரு குழி அருகிலும் கெட்டியான மரக்குச்சியை ஊன்ற வேண்டும். குச்சிகளில், கைத்தறிப் பாவுநூல் கயிறு அல்லது கோணிச்சரடைக் கட்டி, அடுத்த முனையை பந்தல் கம்பியில் இறுக்கமாகக் கட்டி, கொடிகளைக் கயிற்றில் கோத்துவிட வேண்டும். கொடிகளில் உள்ள பக்கக்கிளைகள் அனைத்தையும் அவ்வப்போது விரல் நகங்களைக்கொண்டு கிள்ளிவிட வேண்டும். இது, கொடிகள் பக்கவாட்டில் செல்வதைத் தடுக்கும். சத்துக்கள் தடங்கல் இல்லாமல், பூக்களுக்குப் போய்ச்சேரவும் உதவும். பூ எடுக்கும் சமயத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி அரப்புமோர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும். இது, அதிகமாக பூ வைக்க உதவுவதோடு, பூஞ்சண நோயையும் கட்டுப்படுத்தும்.
குளவிகளுக்கு இனக்கவர்ச்சிப் பொறி!
குறும்புடலைக் காய்களின் மீது முள்தன்மை கொண்ட ஒருவகை சுனை படர்ந்திருக்கும். இது இயற்கை அந்தப் பயிருக்குக் கொடுத்த பாதுகாப்பு. காய்களைச் சுற்றிலும் அந்தச் சுனையானது அரண்போல இருப்பதால், காய்களைச் சேதப்படுத்தும் பெரும்பாலான பூச்சிகளை இதுவே தடுத்துவிடும். இதையும் தாண்டி ஒருவித செங்குளவிகள் பந்தலில் தொங்கும் காய்களைப் பதம்பார்க்க வாய்ப்புகள் உண்டு. ஒரு ஏக்கருக்கு நான்கு இனக்கவர்ச்சிப் பொறி வாளிகளைப் பயன்படுத்தி, இக்குளவிகளைக் கட்டுப்படுத்தலாம்.
60-ம் நாளில் இருந்து அறுவடை செய்யலாம். தொடர்ந்து, 180 நாட்கள் வரை அறுவடை செய்யலாம். அறுவடைத் தொடங்கியவுடன் 2 டன் தொழுவுரம், தலா ஒன்றரை கிலோ அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அனைத்து குழிகளிலும் பகிர்ந்து இட்டு, பாசனம் செய்யவேண்டும். மொத்தமாக ஒரு ஏக்கரில் 15 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும்.'
சாகுபடிப் பாடம் முடித்த செல்வராஜைத் தொடர்ந்த தவமணி, ''பறிச்ச காய்கள்ல ஒரு பகுதியை தினமும் திருப்பூர் உழவர் சந்தையில கொண்டு போய் விற்பனை செய்றோம். மீதிக்காய்களை வெளியூர் வியாபாரிங்க வந்து வாங்கிட்டுப் போறாங்க. ஒரு கிலோ புடலை 12 ரூபாய்ல இருந்து, 20 ரூபாய் வரைக்கும் விலை போகுது. சராசரியா கிலோவுக்கு 15 ரூபாய் விலை கிடைச்சுடும். 15 டன் காய்கள் மூலமா, 2 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். செலவு போக 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்.
'தண்ணி குறைவா இருக்கே’னு நம்பிக்கை இழந்து விவசாயத்தைவிட வேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் மாத்தி யோசிச்சா... எல்லாமே சாத்தியம்தான். அதுக்கு நாங்களே உதாரணம். அரை மணி நேரம் மட்டுமே கிடைக்கிற தண்ணியை வெச்சே இவ்ளோ வருமானம் எடுக்குறோம்'' என்று மனைவி சொன்னதை ஆமோதித்துத் தலையாட்டிய செல்வராஜ்,
விலையில்லா விதை..!
'இது, நாட்டுரகம்கிறதால, அடுத்த போகத்துக்கான விதைகளையும், நாங்களே உற்பத்தி செஞ்சுக்குறோம். பந்தல்ல நல்லா விளைஞ்ச 75 காய்களை மட்டும் பழுக்கவிட்டு, அதைப் பறிச்சு தண்ணி நிரப்பின வாளியில முக்கி பிசைஞ்சா... விதைகள் வந்துடும். இளம்வெயில்ல காய வெச்சு எடுத்து வெச்சுக்கலாம். இப்படி எடுத்த விதைகளை ஒரு வருஷம் வரை வெச்சிருந்து விதைக்கலாம்'' என்று விதைபெறும் நுட்பம் சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
எம்.எஸ். செல்வராஜ், 
செல்போன்: 99655-99969.
ஜி. பழனிச்சாமி படங்கள்: தி.விஜய்
Source: pasumaivikatan

ஏக்கருக்கு... ரூ.4,50,000


ஏக்கருக்கு... ரூ.4,50,000 பஞ்சகவ்யாவில் பளீரிடும் பன்னீர் திராட்சை...!
'இயற்கை வழி வேளாண்மை மேற்கொள்ளப்படும் நிலங்களில் உள்ள பயிர்களுக்கு, தானாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் வந்துவிடும்' என்று இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார்கள். இக்கருத்தை 'உண்மை’ என ஆணித்தரமாகச் சொல்கிறார்கள், கோயம்புத்தூர் மாவட்டம் மாதம்பட்டி அடுத்துள்ள குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயச் சகோதரர்கள் கே.ஆர். சதாசிவம் மற்றும் கே.ஆர். மாறன். இவர்கள், இயற்கை முறை யில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகிறார்கள்

Wednesday

இயற்கை விவசாய முறை


இயற்கை விவசாய முறை

இன்று இயற்கை விவசாயத்துக்கு பலரும் மாறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் ரசாயன உரங்களையும் நுண்ணூட்ட சத்துக்களையும் பயோ என்று வார்த்தை தான் இயற்கை விவசாயம் செய்திடும் உத்தி என்ற தவறான பிரசாரத்தில் ஈடுபடுவது வருத்தம் தரும் நிகழ்வாகும். அந்தந்த நிலத்தில் விளையும் பயிரின் கழிவுகளையும் அதன்மூலம் உற்பத்தி செய்யும் மண்புழு உரம் மற்றும் சான்று பெற்ற நிறுவனங்களில் இருந்து பயன்படுத்த வேண்டிய வேம் சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா முதலியவற்றை பயன்படுத்துவதும் இதில் மிக முக்கியம். திரவ உரங்களை அல்லது நீரில் கரையும் திறன் கொண்ட தழைமணி சாம்பல் சத்துக்களை பயோ என்பது உயிர் உரம் போன்ற தவறான பிரசாரம் தருவதால் இதனை பயன்படுத்துவது இயற்கை விவசாய முறை அல்ல. தழைமணி, சாம்பல் சத்துக்கள் ஒவ்வொரு இயற்கை விவசாய இடுபொருட்களிலும் உள்ள விகிதாச்சாரம் அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.
தொழுஉரம் என்று தமது பண்ணையில் வளர்க்கப்படும் மிருகங்களான கால்நடைகள், பசு, வெள்ளாடு, எருமை, பறவைகள் (கோழி) , செம்மறி ஆடு, குதிரை, பன்றி இவற்றின் சாணம் மற்றும் சிறுநீர் பயன்படுத்துவது முக்கிய உத்தியாகும். இந்தக் கழிவுகளுடன் மண்புழுவை சேர்த்து வளர்த்தால் அற்புத தரம் வாய்ந்த மண்புழு உரம் கிடைக்கும்.
மண்புழு உரத்தையும் மண்புழு உடலில் இருந்து வெளியிடப்படும் மண்புழுக்குளியல் நீர் சத்தான டானிக் தான். இதனை எல்லாப்பயிருக்கும் தெளித்து நல்ல காசு பார்க்கலாம். மண் வகைகள் தன்மையை மாற்றிட குளத்து வண்டல் மாட்டுக் கொட்டத்தில் இருந்து சுரண்டி எடுத்த மண் பட்டி மண் ஆற்று வண்டல் பெரிதும் உதவும். தாவரக்கழிவுகள் குறிப்பாக கம்பு, தட்டை, நெல், வைக்கோல், ராகிதாள், காட்டுப்புல், கரும்பு ஆலை கழிவு, மரத்தூள், நகரக்கழிவு மற்றும் மார்க்கெட் கழிவுகள் முதலியவற்றை மட்கவைத்து கம்போஸ்ட் தயாரித்து பயன்படுத்தலாம்.
சாம்பல் என்று நெல் உமி சாம்பல், பருத்தி மார் சாம்பல், கரும்பு சாம்பல் மற்றும் மர சாம்பல் கூட அதிகமாக மணிசத்து, சாம்பல் சத்து தரும் சாதனமாகும். எண்ணெய் மில்களில் இருந்து கிடைக்கும் கடலை பிண்ணாக்கு, ஆமணக்கு பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு, தேங்காய் பிண்ணாக்கு மற்றும் இலுப்பைப் பிண்ணாக்கும் புரதச்சத்து நிறைய உள்ளவை.
மேலும் இயற்கை விவசாயத்தில் தழைகள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படும். பசுந்தாள் உரமாக சீமை, அகத்தி, சணப்பை துக்கை பூண்டு கொழுஞ்சி மற்றும் அவுரி உதவும். பசுந்தழைகள் தர ஏற்றவை தான். ஆவாரை, ஆடாதோடா, எருக்கு கிளைரி சிடியா, மலைப்பூவரசு, பூவரசு புங்கம் மற்றும் காட்டு மரங்களின் தழைகள் பழமரங்களைக் கவாத்து செய்வது மூலம் பெறும் மாவிலைகள் வேலியில் உள்ள மரங்கள் வாத நாராயணன் இலைகள் எல்லாம் பறித்து குழியில் இட்டு மட்க வைத்து பயன்படுத்தலாம். இப்படி எத்தனையோ இடுபொருட்கள் மற்றும் தயாரித்து பயன்படுத்த உகந்த பஞ்சகவ்யா, பூச்சி விரட்டி வேப்பம் இலைக் கரைசல், வேப்பம் பிண்ணாக்கு கரைசல் முதலிய இயற்கை இடுபொருட்கள் இருப்பதால் அவற்றை பயன்படுத்தியே உயர் லாபம், நீடித்த வருமானம், தரமான விளைபொருள் பெற முடியும். மேலும் விவரம் பெற 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
- டாக்டர் பா.இளங்கோவன்,
கோவை-641 041.
Source:http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21244&ncat=7


Monday

வேதனை போக்கும் வேலிப்பருத்தி..!



வேதனை போக்கும் வேலிப்பருத்தி..!
மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத் துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்...கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே...'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.
இந்த இதழில் வேலிப்பருத்தி...
மனிதனுக்கான மருத்துவத்தை இலைகளில் வைத்திருக்கிறது, இயற்கை... இந்த உண்மையை சித்தர்கள் உணர்ந்து கொண்டதால்தான் சித்த மருத்துவம் உருவானது. ஆங்கில மருந்துகளுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை சித்தர்களின் ஆராய்ச்சிகள்தான். இன்றைக்கும் பல்வேறு ஆங்கில மருந்துகள் தயாரிப்பில் மூலிகைச்சாறுகள் சேர்க்கப்படுகின்றன.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேலியோரங்களில் படர்ந்து கிடக்கும் அற்புதமான மூலிகைதான் வேலிப்பருத்தி... இதய வடிவ இலைகள், இரட்டைக் காய்கள், முட்டை வடிவ விதைகளுக்குள் பட்டு போன்ற பஞ்சுகள் கொண்ட வேலிப்பருத்திக்கு, 'உத்தாமணி’ என்ற பெயரும் இருக்கிறது. சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் உத்தாமணி என்றே குறிப்பிடுகிறார்கள்.
இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்த மனிதன் காற்றைக்கூட விட்டு வைக்கவில்லை. கழிவுகளுக்குக் காற்றை காவு கொடுத்துவிட்டு, ஆக்சிஜன் பார்லர்களில் காசு கொடுத்து சுத்தக் காற்று சுவாசிக்கும் நிலை வந்தே விட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரும் மனிதர்கள், முகத்தை முழுவதும் மூடிக் கொண்டுதான் பயணிக்கிறார்கள். அந்தளவுக்கு மாசடைந்து கிடக்கிறது, காற்று. அதையும் மீறி பலருக்கு ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள்.
மூச்சிரைப்பைப் போக்கும் கற்பக மிளகு!
சுவாசக் கோளாறை சரி செய்வதற்கு, எளிமையான தீர்வு வேலிப்பருத்தி. இதன் இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து, தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... ஆஸ்துமா, அலறியடித்துக் கொண்டு ஓடிவிடும். இச்சாறை லேசாக சூடாக்கி, ஆற வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடித்து வந்தால் சுவாச, காச நோய்கள் காணாமல் போய்விடும். இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், வாயுவால் உண்டாகும் நோய்கள், கைகால் குடைச்சல், இளைப்பு, இருமல், கோழைக்கட்டு நீங்கும். ஒரு குவளையில் கொஞ்சம் மிளகை இட்டு அவை மூழ்கும் அளவுக்கு வேலிப் பருத்தி இலைச்சாறை ஊற்றி, ஊற வைத்து எடுத்து வெயிலில் ஏழு நாட்கள் காய வைத்தால்... அதன் பெயர் 'கற்பக மிளகு’. 'கற்பக மிளகை, தினமும் ஒரு மிளகு வீதம் உட்கொண்டால் மூச்சிரைப்பு நோய் முற்றி லும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம்.
உடல் வலுப்பெற!
ஊட்டச்சத்து பானங்கள் குடிக்கும் குழந்தைகள் வேண்டுமானால், 'நான் வளர்கிறேனே மம்மி’ என விளம்பரங்களில் காட்டப்படுவது போல வேகமாக வளரலாம். ஆனால், உணவுக்கே வழியில்லாத குழந்தை கள் ஊட்டச்சத்துக்கு எங்கு போவார்கள்? ஏழை வீட்டுப் பிள்ளைகள், மார்புக்கூடு முன்தள்ளி நோஞ்சானாகவே வளர்கின்றன. இன்னும் சில குழந்தைகள் என்னதான் ஊட்டச்சத்து கொடுத்தாலும் நோஞ்சானாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் உடல் வலுப்பெற உதவுகிறது, வேலிப்பருத்தி. இதன் இலையை நிழலில் உலர்த்தி, பொடி செய்துகொண்டு அதில் ஒரு தேக்கரண்டி, சீரகப்பொடி, அருகம்புல் பொடி ஆகியவற்றில் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கஷாயம் செய்து... பனங்கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் நோஞ்சான் தன்மை நீங்கி, உடல் வலுப்பெறும்.
ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்!
நாளைய இந்தியாவை வழி நடத்த வேண்டிய இளைஞர்கள், இருபத்தைந்து வயதிலேயே ரத்த அழுத்தம் ஏறிக் கிடக்கிறார்கள். 'பி.பி’ எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் 'பிளட் பிரஷர்’ உள்ளவர் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மாத்திரைகள் உண்டு. ஆனால், காலம் முழுவதும் விழுங்கிக் கொண்டே இருக்கவேண்டும். இடையில் நிறுத்தினால், மீண்டும் ரத்த அழுத்தம் எகிறிவிடும். 'இதற்கு வேறு வழியே இல்லையா?’ என கேட்பவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கிறது வேலிப்பருத்தி.
வேலிப்பருத்தி இலைகள் ஆறினை எடுத்து சுத்தம் செய்து, அப்போது கறந்த ஆடு அல்லது மாட்டுப் பாலில் அரை டம்ளர் எடுத்துக் கொள்ள வேண்டும். கறந்த பால் கிடைக்காத பட்சத்தில் கொதிக்க வைத்த பாலை அரை டம்ளர் எடுத்துக் கொள்ளலாம். பாலில் இலையைப் போட்டு நன்றாக அரைத்து, 'பிரம்ம முகூர்த்த வேளை’ எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் அருந்த வேண்டும். இப்படி, தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால்... ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும். எவ்விதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இந்த மருந்து, உடல் அசதியைப் போக்கி நரம்புகளைப் புத்துணர்வு பெறச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது.
வயதுக்கு வர வைக்கும் வேலிப்பருத்தி!
வேலிப்பருத்தி இலைச்சாறு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்து, காய்ச்சி இளஞ்சூட்டில் பற்று போட்டால்... வாத வலி, வீக்கம் குறையும். யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் விரைவில் குணமாகும். காணாக்கடி, அரிப்பு, தடிப்பு, கீழ்வாதம், முடக்குவாதம், இடுப்புவலி ஆகியவற்றுக்கு வேலிப்பருத்தி இலைச்சாறை வதக்கி, துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும். குறிப்பிட்ட வயது வந்த பிறகும், பெண்கள் ருதுவாகாமல் இருந்தால், ஆறு வேலிப்பருத்தி இலை, மூன்று மிளகு ஆகியவற்றை மை போல அரைத்து, 10 தினங்கள் தொடர்ந்து உண்டு வந்தால் நிச்சயம் பலன் கொடுக்கும். வேலிப்பருத்தி இலைச்சாறு, தேன் இரண்டை யும் கலந்து தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி தீரும் என்கிறார்கள், சித்தர்கள்.
இத்தனை பயன்பாடு மிகுந்த வேலிப் பருத்தியை இனியாவது பயன்படுத்தி, நோயற்ற வாழ்வு வாழ்வோம்...
- வலம் வருவோம்...

வாத நோய்க்கு மருந்து!
வேலிப்பருத்தியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் காளிமுத்து, ''வேலி ஓரங்களில் படர்ந்து, மனிதனின் வலிகளைக் குறைக்கும் அற்புதமான மூலிகை வேலிப்பருத்தி. இது மிகச் சிறந்த வலிநிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன் படுகிறது. வேலிப்பருத்தி இலையைப் பறித்து, அரைத்து, துணியில் கட்டி, சூடாக உள்ள தோசைக்கல்லில் துணியை வைத்து எடுத்து ஒத்தடம் கொடுத்தால் ரத்தகட்டு, முழங்கால் வலி, வாதநோய் குறையும்'' என்றார்.

Source: pasumaivikatan

Thursday

வீட்டுக் கழிவு நீரில் செழிக்கும் செடிகள்!

வீட்டுக் கழிவு நீரில் செழிக்கும் செடிகள்!
2030-ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும், மத்தியக் கிழக்கு நாடுகளைப் போல இந்தியாவும் தண்ணீர் நெருக்கடி நாடாக மாறும்’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம். குளம், குட்டைகள், ஆறுகளை ஆழப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும், தண்ணீர் சிக்கனம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளதால், கழிவு நீரைக் கூட ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அவ்வகையில், வீட்டுக் கழிவு நீர் மூலம் வீட்டுத் தோட்டத்துக்குப் பாசனம் செய்து வருகிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெல்ஜோசப்.  70 வயதான ஜெல்ஜோசப்பை தூத்துக்குடி கிருபைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நீர் மேலாண்மைச் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம்.

70 சென்ட்... 3 மாதம்... 46 ஆயிரம்...

70 சென்ட்... 3 மாதம்... 46 ஆயிரம்...
முத்தான வருமானம் தரும், சத்தான சர்க்கரைவள்ளிக் கிழங்கு..!
தண்ணீர் தட்டுப்பாடு, வேலையாட்கள் தட்டுப்பாடு... எனப் பல பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு ஏற்ற பயிர், சர்க்கரைவள்ளிக் கிழங்குதான். அந்த சூட்சமத்தை அறிந்த பலர், வெயில் கொளுத்தும் கோடையிலும் வளமான வருமானத்தை ஈட்டித்தரும் சர்க்கரைவள்ளியை விடாமல் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருவண்ணாமலை மாவட்டம், சம்மந்தனூர், குப்புசாமி!
நிலத்தில், கிழங்கு அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த குப்புசாமியைச் சந்தித்தபோது, ''எங்க அப்பாவுக்கு நாலு பொண்ணுக, நான் ஒருத்தன்தான் பையன். குடும்ப சூழ்நிலை காரணமா எட்டாவதுக்கு மேல படிக்க வெக்கல. அப்ப இருந்தே அப்பாவுக்கு ஒத்தாசையா விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அப்பறம் தனியா விவசாயம் பாத்தப்போ...

7 ஏக்கர் காய்கறி... மாதம் 81 ஆயிரம் லாபம்...


7 ஏக்கர் காய்கறி... மாதம் 81 ஆயிரம் லாபம்...
கொடிகட்டிப் பறக்கும் இயற்கை சாகுபடி!
அரசாங்க வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் பலருக்கும் 'அடுத்து என்ன செய்யலாம்?’ என்ற கேள்விதான் பெரியவிஷயமாக முன்நிற்கும். பெரும்பான்மையோருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், நடைமுறைச் சிக்கல்கள் தடுத்துவிடும். அதையெல்லாம் தாண்டி, விவசாயத்தில் இறங்கி வெற்றிக்கொடி நாட்டும் மூத்தக் குடிமக்களில் ஒருவ ராக சாதித்துக் கொண்டிருக்கிறார்... காஞ்சிபுரம் மாவட்டம், பவுஞ்சூர் அருகேயுள்ள ஜல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கட ரெட்டி. இவருடைய தோட்டத்துக் காய்கறிகள், சென்னையில் உள்ள இயற்கை அங்காடிகள் பலவற்றின் வழியாக நுகர் வோரைச் சென்றடை கின்றன.

மின்வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி...


மின்வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி... 80% மானியத்தில் சோலார் பம்ப்செட்டுகள் !
'உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்பார்கள். அதேபோல ஆட்கள் பிரச்னையும், மின்சாரப் பிரச்னையும் விவசாயிகளை வாட்டி வதைக்கின்றன. மேற்படி பிரச்னைகளுக்குத் தீர்வு காணும்விதமாக, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. குறிப்பாக, மின் வெட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக... மாநிலம் முழுவதும் 80% மானியத்தில் சோலார் (சூரியசக்தி) பம்ப்செட்களை அமைத்துக் கொடுத்து வருகிறது, அரசு