Sunday

உழவில்லை... உரமில்லை... செலவில்லை... மணியாய் விளளயும் ஜூரோ பட்ஜெட் நெல் !

உழவில்லை... உரமில்லை... செலவில்லை...
மணியாய் விளளயும் ஜூரோ பட்ஜெட் நெல் !
 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை என்றாலே... இடுபொருட்களாக பயன்படுத்தப்படும் ஜீவாமிர்தம் உள்ளிட்ட அமிர்தங்கள்... அக்னி அஸ்திரம் உள்ளிட்ட அஸ்திரங்கள்... ஆகியவை முக்கியமாக கவனத்தில் வந்து நின்றுவிடும். இவையில்லாமல்... ஜீரோ பட்ஜெட் இல்லை.
ஆனால், ''இவை மட்டுமே ஜீரோ பட்ஜெட் இல்லை'' என்கிறார் நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் பகுதியைச் சேர்ந்த சக்திவேலு.
''அமிர்தங்கள் மற்றும் அஸ்திரங்கள் மூலமே சிறந்தப் பலன்கள் கிடைக்கும் என்றாலும், காற்றுத் தடுப்பு வேலிகள், இயந்திரங்கள் பயன்படுத்தாமை, உயிர்மூடாக்கு... என 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர் சொல்லும் அத்தனை வழிமுறைகளையும் கடைபிடித்து, முழுமையாக ஜீரோ பட்ஜெட் வேளாண்மை செய்யும்போது... கூடுதல் பலன் என்பது கண்கூடு'' என்று சொல்லும் சக்திவேலு, பாலேக்கர் சொல்லும் பெரும்பாலான ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்களையும் கடைபிடித்து அரை ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார்.

கரிசலில் காய்த்துக் குலுங்கும் நெல்லி ! 16 ஏக்கரில் ஆண்டுக்கு 10 லட்சம்...

கரிசலில் காய்த்துக் குலுங்கும் நெல்லி !
16 ஏக்கரில் ஆண்டுக்கு 10 லட்சம்...
ஒரு காலத்தில்... 'விவசாயத்துக்கே லாயக்கில்லை’ என பலரும் ஒதுக்கியதால், கரும்போர்வைக்குள் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தது, களி கலந்த கரிசல் பூமி அது. தற்போது காய்த்துக் குலுங்கும் நெல்லி மரங்களுடன் பசுமையாகச் சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பசுமை மாற்றத்தை ஏற்படுத்தியவர், மதுரையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் புகழேந்தி பாண்டியன்.
மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லைகள் தொட்டுக்கொள்ளும் இடத்தில் இருக்கிறது, புளியங்குளம் விலக்கு சாலை. அரை கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது 'பாண்டியன் அக்ரோ ஃபார்ம்ஸ்’. அதிகாலை வேளையில் தோட்டத்தில் இருந்த புகழேந்தி பாண்டியனைச் சந்தித்தோம்.
''வருஷம் முழுக்க பயங்கர பிசியா இருந்தாலும், நமக்கான இளைப்பாறுதல்னு ஒவ்வொரு மனுஷனுக்கும் இருக்கும். அந்த வகையில எனக்கான இளைப்பாறும் இடம்... இந்தத் தோட்டம். விருதுநகர்தான் சொந்த ஊர். எங்க உறவினர்கள்ல பெரும்பாலானவங்க மருத்துவர்கள்தான். ஒரு இன்ஸ்ட்டியூட் அமைக்கணும்னுதான் இந்த இடத்தை வாங்கினேன். ஆனா, அதுக்கான வாய்ப்பு அமையல.

Saturday

ரசாயன விவசாயத்தில் 70 லட்சம்... ஜீரோ பட்ஜெட்டில் 82 லட்சம்...

ரசாயன விவசாயத்தில் 70 லட்சம்... ஜீரோ பட்ஜெட்டில் 82 லட்சம்...
லாபத்தைக் கூட்டும் ஜீவாமிர்தம்..!
 வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கரின் 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் ரசாயன விவசாயத்தில் இருந்து ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறத் தயாராகும் தென்னை விவசாயிகளுக்கு எழும் பெருத்த சந்தேகம், 'ஏற்கெனவே ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அமைத்த தென்னந் தோப்புகளை ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாற்ற முடியுமா?’ என்பதுதான்.
அவர்களுக்கெல்லாம் பாலேக்கர் சொல்லும் பதில்... 'ஜீவாமிர்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து ஜீரோ பட்ஜெட் முறைக்கு எளிதாக மாறி விடலாம்’ என்பதுதான். இதை நடைமுறையிலும் நிரூபித்து வெற்றிபெற்று வருகின்றனர் தென்னை விவசாயிகளில் பலரும்!
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, அருகில் உள்ள சேத்துமடை கிராமத்தைச் சேர்ந்த வி.எஸ். உதயகுமார்... அவர்களில் ஒருவர்!

5 சென்ட் குளம்... 8 மாத காலம்... 1,25,000 லாபம்... வீறுநடை போடும் விரால் வளர்ப்பு !

5 சென்ட் குளம்... 8 மாத காலம்... 1,25,000 லாபம்...
வீறுநடை போடும் விரால் வளர்ப்பு !
 'மீன் வளர்ப்புத் தொழில் செய்ய வேண்டுமென்றால்... ஏக்கர் கணக்கில் குளம் வேண்டும்’ என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ''குறைவான அளவு இடம் இருந்தாலே போதும் என்பதுதான் உண்மை. குறிப்பாக, குறைவான இடத்திலேயே விரால் மீன்களை வளர்த்து, நிறைவான வருமானம் பெறலாம்'’ என்கிறார், வேலூர் மாவட்டம், ஆலங்காயம் அருகேயுள்ள ஓமகுப்பம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை.
'சலசல’வென சாரல் அடித்துக் கொண்டிருந்த காலைப் பொழுதொன்றில்... அண்ணாத்துரையைச் சந்தித்தோம்.
''சின்ன வயசுல இருந்தே நான் விவசாயம் பார்த்துக்கிட்டிருக்கேன். போதுமான வருமானம் இல்லாததால... வேற தொழில் ஏதாவது செய்யலாம்னு பக்கத்து ஊர் ஏரியை குத்தகைக்கு எடுத்து, மீன் வளர்க்க ஆரம்பிச்சேன். 20 ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சேன்.. 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சுது. அதுல இருந்து 15 வருஷமா தொடர்ந்து ஏரி, குளங்களைக் குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்தேன். மூணு வருஷத்துக்கு முன்னதான் சொந்தமா இருந்த நிலத்துல 10 சென்ட் அளவுல குழி எடுத்து, தேளி மீன் வளர்க்க ஆரம்பிச்சேன். வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் லாபம் கிடைச்சுது.