Monday

மண்ணை வளமாக்கும் அங்கக உரங்கள்

நாம் தொடர்ந்து பயிர் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் இரசாயன உரங்களை மட்டும் இட்டு விவசாயம் செய்து வருகின்றோம். இதனால் மண்ணின் பௌதிக, இரசாயன மற்றும் உயிரியல் பண்புகளில் மாற்றம் ஏற்பட்டு மண்ணின் நலமும் வளமும் சீர்கெட்டு வருகிறது. பொதுவாக மண்ணின் வளம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மண்ணின் தன்மையைப் பொறுத்து மண்வளம் இடத்திற்கு இடம் மாறுபடும். பயிர்கள் எடுத்துக் கொள்ளும் சத்துக்களின் அளவுகளை அறிந்து அதற்கேற்ப அங்கக உரங்களை இரசாயன உரங்களுடன் சேர்த்து நிலத்தில் இட்டால்தான் மண் வளம் குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

Saturday

ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் மொட்டைமாடி காய்கறி தோட்டம்

ஏக்கர் கணக்கில் நிலம், பாசனத்துக்குக் கிணறு, கால்நடைகள்... என இருந்தால் மட்டும்தான், விவசாயம் சாத்தியம்என்றுதான் பலரும் நினைக்கிறோம். 

அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே நகரத்தில் வாழ்பவர்கள்; கிராமங்களில் இருந்து நகர வாழ்க்கைக்கு நகர்ந்தவர்கள்; கிராமத்திலேயே நகரத்தைப் போன்ற வாழ்க்கையைப் பழகிக் கொண்டவர்கள் என்று பலருக்கும் விவசாயம் ஒரு கனவாகவே கடந்து விடுகிறது. ஆனாலும், மொட்டை மாடியையே தோட்டமாக்கி விவசாயக் கனவை நனவாக்கிக் கொள்பவர்களும் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், ஷிஜி.