Monday

தனம் தரும் சந்தனம்

தனம் தரும் சந்தனம்
வேம்பு வளரும் இடங்களில் வளரும்.
ஏக்கருக்கு 200 மரங்கள்.
ஒரு மரம்  50 ஆயிரம்.
 ஒரு ஏக்கரில் இருந்து வருமானம் பார்க்க முடியுமா? என்றால்... நிச்சயம் முடியும். அதற்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.... சந்தன மரங்களை நடவு செய்தாலே போதும்!

கூடுதல் லாபம் + இயற்கை உரம்... ஊடுபயிர் தரும் இனிய வரம்!

கூடுதல் லாபம் + இயற்கை உரம்...
ஊடுபயிர் தரும் இனிய வரம்!
 ''மண்ணையும் வளமாக்கி, மரத்தையும் செழிப்பாக்கும் கோகோவைவிட, தென்னைக்கு சிறந்த ஊடுபயிர் எதுவும் இல்லை. கோகோவுல இருந்து அதிகளவுல இலைகள் உதிர்ந்துகிட்டே இருக்கறதுனால, மண்ணுல தழைச்சத்தும் நுண்ணூட்டமும் அதிகமாகுது'' என்று சான்றிதழ் கொடுக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன். இவர், வழக்கறிஞரும்கூட!

18 மாதம்... ரூ. 3,60,000 ரூபாய்... ''இனிப்பான வருமானம் தரும் இயற்கை இலைவாழை’!

18 மாதம்... ரூ. 3,60,000 ரூபாய்...
''இனிப்பான வருமானம் தரும் இயற்கை இலைவாழை’!
அன்றாடம் தேவைப்படும் தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய விளைபொருட்களில் வாழை இலையும் ஒன்று. கோயில் விழாக்கள், குடும்ப விழாக்கள்... என எந்த விசேஷமாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக அங்கே வாழை இலைக்கு முக்கிய இடமுண்டு. இத்தகைய சந்தை வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இலைக்காகவே வாழை சாகுபடி செய்பவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவராகத் தொடர்ந்து இயற்கை முறையில் இலை வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அடுத்துள்ள பெரியவீரச்சங்கிலி கிராமத்தைச் சேர்ந்த நல்லசிவம்.

Thursday

செடி வளர்ப்பில் செல்வம் கொழிக்குது

அழகு, பயன் தரும் செடிகளை வளர்க்க அனைவரும் விரும்புகிறார்கள். வீடு, நிறுவனங்களில் இவை முக்கிய இடம் பிடிப்பதால் செடிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. செடி வளர்க்கும் முறையை கற்றுக் கொண்டு நாற்றுப்பண்ணை (நர்சரி) நடத்தினால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவையில் ரோஜா ராஜா நர்சரி கார்டன் நடத்தி வரும் விஜயகுமார். அவர் கூறியதாவது: கோவையில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது அழகு செடிகளுக்கான தேவை அதிகம் உள்ளது குறித்து அறிந்துகொண்டேன். 10 ஆண்டுகளுக்கு முன் கோவை அவிநாசி சாலையில் நாற்று பண்ணை தொடங்கினேன். முதலில் குறைந்த விலையுள்ள அழகு, பழ செடிகளை விற்றேன். பின்னர் படிப்படியாக அனைத்து வகை செடிகளையும் விற்க தொடங்கினேன். ஒரு செடியை ரூ.1 லட்சம் வரை கொடுத்து வாங்க பலர் தயாராக இருக்கிறார்கள். ரோஜா உள்ளிட்ட மலர்செடிகள், புல் வகைகள், லில்லி, தாமரை, ஆர்கிட்ஸ், அந்தூரியம், சைக்கஸ் பல்வேறு வகை செடிகளை விற்கிறோம்.