Sunday

மண் புழு உரம் தயாரிப்பு - VERMICULTURE

 மண் புழு உரம் தயாரிப்பு



வ்வொருவர் வீட்டிலும்  காய்கறிகள், பழங்கள், உணவு போன்ற மக்கும் கழிவுகள் நிறையவே கிடைக்கின்றன. தேவை இல்லாததால் தூக்கி எறியப்படும் இந்த கழிவுகளைக் கொண்டு மண் புழு உரம் தயாரிக்க பயன்படுத்தினால், நல்ல லாபம் பார்க்க  முடியும். 'வெர்மி கம்போஸ்ட்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மண் புழு உரம், நிலத்திற்கு மாசு ஏற்படாமல் தடுப்பதோடு, நம் உடலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத காய்கறிகளை அதிக அளவில் விளைவிக்கவும் உதவுகிறது. மண் புழு உரம் தயாரிக்கும் தொழிலில் அனைவரும் இறங்கி ஜெயிக்க முடியும். ஆனால், அதற்கென இருக்கும் தயாரிப்பு முறையை மட்டும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.  

Wednesday

ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம்...ஆர்ப்பரிக்க வைக்கும் ஆற்காடு கிச்சிலி !

 ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம்...
ஆர்ப்பரிக்க வைக்கும் ஆற்காடு கிச்சிலி !
ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்தாலும், நம் முன்னோர்கள் ஒவ்வொரு பகுதியின் மண், தட்பவெப்ப நிலை... ஆகியவற்றுக்கேற்ப பகுதி வாரியாகப் பல ரகங்களை சாகுபடி செய்து வந்தனர். அப்படி ஒரு ரகம்தான் 'ஆற்காடு கிச்சிலி’!
ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தின்போது... காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம் போன்ற பகுதிகளுக்கென்றே பிரத்யேக நெல் ரகமாக இருந்த இந்த 'ஆற்காடு கிச்சிலி’, இப்போது அபூர்வ ரகமாக மாறிவிட்டது. இதைத் தேடிப்பிடித்து சாகுபடி செய்திருக்கிறார், திருவண்ணாமலை மாவட்டம், முக்குரும்பை கிராமத்தைச் சேர்ந்த அச்சுதன் ('அகப்படாத அமெரிக்கா... அபயம் தந்த விவசாயம்...’ என்ற தலைப்பில், 25.7.2011-ம் தேதியிட்ட இதழில் இடம்பெற்ற கட்டுரை மூலமாக, ஏற்கெனவே நமக்கு அறிமுகமானவர்தான் இந்த அச்சுதன்).

அமோக வெற்றி தரும் அசத்தல் கூட்டணி !

ஆடு +தென்னை +மா
அமோக வெற்றி தரும் அசத்தல் கூட்டணி !


பறக்கப் பறக்கத்தான் இறகுகள் பலப்படும். உழைக்க உழைக்கத்தான் உயர்வுகள் உனதாகும்'
அந்த ஆட்டுப் பண்ணையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தன்னம்பிக்கை வாசகம், அங்கே நுழையும் அனைவரையும் ஈர்க்கிறது. பண்ணையின் உரிமையாளர்களான வாசுதேவன்-கவிதா தம்பதி, அந்த வாசகங்களுக்கு உதாரணமாகவும் நின்று கொண்டிருப்பது, அனைவரையும் வியக்க வைக்கிறது!

Friday

வண்ண மீன் வளர்க்கறீங்களா?: மீன் தொட்டியை அலங்கரிப்பது அவசியம்

மீன் வளர்ப்பு என்பது ஒரு கலை. தொட்டிகளில் நீந்தும் மீன்களை பார்த்தாலே மனதில் அமைதி குடியேறும். அழகிற்காக மட்டுமின்றி மன உற்சாகத்திற்காகவும் மீன்களை வளர்க்கின்றனர். வசதி படைத்தவர்கள்தான் மீன் தொட்டி வைத்திருப்பார்கள் என்பது போய், தற்போது நடுத்தர மக்களும் அதிக அளவில் மீன்களை வாங்கி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். வண்ண மீன் வளர்ப்பு குறித்தும் பராமரிப்பு குறித்தும் மீன்வளர்ப்பாளர்கள் கூறியுள்ள டிப்ஸ் உங்களுக்காக.

மீன் தொட்டியின் விலை 100 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. உள் அலங்காரத்துக்கு என்று ஸ்பெஷலாக மர வேலைபாடுகளுடன் கூடிய ஸ்டாண்ட் சேர்ந்த கலைநயமிக்க தொட்டிகள் 10 அயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது போன்ற மீன் தொட்டிகளை பெரிய ஹோட்டல், மருத்துவமனைகளில் வைத்துள்ளனர்.

Tuesday

புறா 20 ஆயிரம்...கோழி 27 ஆயிரம்... ஆடு 90 ஆயிரம்...


புறா 20 ஆயிரம்...கோழி 27 ஆயிரம்... ஆடு 90 ஆயிரம்...

தள்ளாத வயதிலும், தளராத கால்நடை வளர்ப்பு !
மனிதனின் ஆரம்பக்காலப் பொருளாதாரமே... ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள்தான். இவற்றைப் பெருக்கித்தான் காலகாலமாக தங்களின் பொருளாதாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கின்றனர் கிராமப் புற மக்கள்! இதை உணர்ந்தே... 'கால்நடைகள்தான் கிராமப்புறப் பொருளாதாரத்தின் காவலன்' என்று நீண்ட நெடுங்காலமாக விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை சொல்லி வருகின்றனர்.
இது, நூற்றுக்கு நூறு நிஜமே என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள நகரகளந்தை பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி- செல்லம்மாள் தம்பதி!

Friday

ஏழை விவசாயிகளுக்கு ஏற்ற சில்பாலின் முறை மண்புழு உரத்தயாரிப்பு

உழவர்களின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழுக்களை கொண்டு உரம் தயாரிக்கும் முறை பரவலாகி வருகிறது. இது நல்ல தொழிலாகவும் விவசாயிகள் சிலரால் தொடங்கப்பட்டு லாபமுள்ள தொழிலாக சிறப்பு பெற்றுள்ளது.
மண்புழு வாழ உதவும் சூழ்நிலை
மண்புழு உரத்தயாரிப்பில் குழி முறை,குவியல் முறைதொட்டி முறை மற்றும் சில்பாலின் முறை என்ற முறைகளில் மண்புழு உரத்தை தயாரிக்கலாம். ஆனால் மிகக்குறைந்த செலவில் மண்புழு உரத்தை தயாரிக்க சில்பாலின் என்ற முறையை கையாளலாம். இந்த முறையானது ஏழை விவசாயிகளும் மண்புழு உரத்தை சொந்தமாக தயாரிக்க ஏற்ற முறையாக இருக்கிறது.