Thursday

10 மாதங்களில் 1.5 லட்சம் இனிப்பு மரவள்ளியில், இருக்குது... வெகுமானம்!

10 மாதங்களில் 1.5 லட்சம்
இனிப்பு மரவள்ளியில், இருக்குது... வெகுமானம்!
ஜி. பழனிச்சாமி படங்கள்: க. தனசேகரன், ரமேஷ் கந்தசாமி
பாரம்பரிய விவசாயத்தின் ஆணி வேர் நாட்டு ரகங்கள்தான். இதைவிட, முற்காலத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் புவிசார் குறியீடாக விளங்கியவையும் அந்தந்தப் பகுதிக்கான பிரத்யேகமான நாட்டு ரக விளைபொருட்கள்தான். வீரிய ஒட்டு ரகங்களின் வரவால், நாட்டு ரகங்கள் பலவும் காணாமல் போனதால், பல ஊர்களின் அடையாளமே மறைந்து போய் விட்டது. இத்தகையச் சூழ்நிலையிலும் சிலர் மட்டும் விடாமல், நாட்டு ரகங்களைக் காப்பாற்றி பயிர் செய்து வருகிறார்கள்.

மாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்

மாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...!
லோ. இந்து படங்கள்: பா. காளிமுத்து
இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு... அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.

Wednesday

நஞ்சிலிருந்து மீட்கப்படும் அமிர்தம்


உள்படம்: அஹ்மத்அந்தக் குடுவைக்குள் பொன்னிறத் திரவம் நிறைந்திருந்தது. அதன் அடியில் தேங்கி நிற்கும் குருணைப் படலம். சுவை பார்த்த கையில் சில மணி நேரம் நீடிக்கும் நெய்யின் முறுகிய மணம்.

``வட இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நாட்டு பசுக்களின் பாலில் இருந்து உற்பத்தி செய்யட்ட நெய் இது. இதில் செயற்கையான நிறமூட்டிகள் மணமூட்டிகள், பதனப்பொருட்கள் என எதுவும் சேர்க்கப்படவில்லை’’ என்கிறார் அரியா (ARIA) பால் பண்ணையின் நிறுவனரும் மேலாண் இயக்குநருமான அஹ்மத். அப்படி இந்த மாடுகளில் என்ன சிறப்பு உள்ளது எனக் கேட்டதற்கு நீண்ட விளக்கம் அளித்தார்.

பிரபலமாகி வரும் நாட்டுக் கோழி வளர்ப்பு

நம் கிராமங்களில் நடைபெறும் அசைவ விருந்துகளில் நாட்டுக் கோழி கறிக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. பிற அசைவ உணவுகளில் காண முடியாத தனிச் சிறப்பான அதன் ருசியே இதற்கு காரணம். அது மட்டுமின்றி உடல் நலம் குன்றியவர்களை வலுப்பெறச் செய்யும் வகையில் அவர்களுக்கு உணவாக மட்டு மின்றி, மருந்தாகவும் நாட்டுக் கோழி உணவுகள் திகழ்கின்றன.
தற்போது மக்களிடையே பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, சோளம், கேழ்வரகு போன் றவை பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில் நாட்டுக்கோழி இறைச்சியும், நாட்டுக்கோழி முட்டைகளும் பிரபலமடைந்து வருவதாகக் கூறுகிறார்

குலை குலையாய் பணம் தரும் வாழை: புதிய உத்தியால் லாபம் ஈட்டும் திருச்சி விவசாயி


திருச்சி அருகே அடர் நடவில் புதிய உத்தியைக் கையாண்டு ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்தில் 2,676 வாழைக் கன்றுகளை சாகுபடி செய்து பிற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார் 33 வயதே ஆன இளம் விவசாயி ஆர். கிருஷ்ணகுமார்.

திருச்சி அருகிலுள்ள மேலக் கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் இவர். ஆலத்தூரில் இவருக்கு நிலம் உள்ளது. பரம்பரை விவசாயியான இவர், குறைந்த இடத்தில், குறைந்த செலவில் அதிக மகசூல் பெற வேண்டும் என்பதற்காக அடர் நடவு முறையைப் பின்பற்றி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கற்பூரவள்ளி ரகத்தை பயிரிட்ட இவர், தற்போது ஏலரசி என்ற வாழை ரகத்தை பயிரிட்டுள்ளார். இந்த வகை வாழைப் பழத்துக்கு பெங்களூர், மும்பை, சென்னை ஆகிய இடங்களில் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது என்கிறார்.

நாற்றுப் பண்ணை : குறைந்த விலை... நிறைந்த தரம்...

நாற்றுப் பண்ணை : குறைந்த விலை... நிறைந்த தரம்...
அசத்தும் அரசுப் பண்ணை!

விதைப்பைவிட, நடவு முறையைத்தான் பெரும்பாலான பயிர்களுக்கும் விவசாயிகள் தேர்ந்தெடுக்கிறார்கள். விதைப்பு முறையில் அனைத்து விதைகளுமே முளைத்து வந்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதோடு, முளைத்து வருவதற்கும் நாட்கள் பிடிக்கும். இதுபோன்ற காரணங்கள்தான், விவசாயிகளை நடவு முறை நோக்கி ஈர்க்கிறது. குறிப்பாக, மரம் வளர்ப்பில் அனைவருமே நாற்றுகள் அல்லது கன்றுகளைத்தான் நடவு செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காக, குறைந்த விலையில் தரமான கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது, தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை.

வேம்பு... தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்!

வேம்பு... தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்!


யோசனை
 பொதுவாக மரம் வளர்ப்புக்கு மாறும் விவசாயிகள்... மரவேலைப்பாடுகளுக்குப் பயன்படக்கூடிய தேக்கு, குமிழ், தோதகத்தி... என்றுதான் தேர்வு செய்வார்கள். ஆனால், நீண்டகாலத்துக்கு உறுதித் தன்மையுடன் திகழக்கூடிய நாட்டு வேப்ப மரத்தை பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், மிக எளிதாக சாகுபடி செய்யக்கூடிய, எல்லா வகையான மண்ணிலும் சிறப்பாக விளையக்கூடிய மருத்துவ குணமுடைய வேம்புக்கும் நல்ல தேவை உள்ளது என்பதுதான் உண்மை!

தினசரி வருமானத்துக்கு 'நாட்டு’ எலுமிச்சை...

தினசரி வருமானத்துக்கு 'நாட்டு’ எலுமிச்சை...
புளியங்குடி விவசாயிகளின் பலே பணப்பயிர்!

திருநெல்வேலிக்கு அல்வா என்றால், புளியங்குடிக்கு 'எலுமிச்சை’தான் அடையாளம். அந்தளவுக்கு இந்த ஊரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இப்பகுதிகளில் உள்ள மண் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை எலுமிச்சை சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. கரும்பு, நெல் ஆகியவையும் இப்பகுதிகளில் விளைந்தாலும், தினசரி வருமானம் தரும் எலுமிச்சையையே இங்கு பணப்பயிராகக் கருதுகிறார்கள். எலுமிச்சைக் கன்றுகளை குழந்தைகளைப் போல பராமரிக்கும் இப்பகுதி விவசாயிகள், எலுமிச்சைத் தோப்புக்குள் செருப்புகூட அணிந்து செல்வதில்லை. அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய விரத நாட்களில் எலுமிச்சைத் தோப்புக்கு சாம்பிராணி காட்டும் அளவுக்கு, தெய்வமாகவும் போற்றுகிறார்கள்!

தென்னை, பனை மரங்களில் ஏற உதவும் கருவி

தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் காய்களைப் பறிப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மரம் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததே இதற்குக் காரணம்.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண தென்னை, பனை, பாக்கு உள்பட கிளையில்லாத அனைத்து உயரமான மரங்களிலும் ஏறுவதற்கான கருவி தற்போது சந்தைகளில் விலைக்குக் கிடைக்கிறது. கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த டி.என். வெங்கட் (என்கிற) ரெங்கநாதன் வடிவமைத்த கருவி உயரமான மரங்களில் ஏறுவதை மிகவும் எளிதாக்கியுள்ளது.
இந்தக் கருவியை வடிவமைத்த தனது அனுபவம் குறித்து வெங்கட் கூறியதாவது:
25 ஆண்டுகள் ஜவுளி ஆலையில் நான் தொழிலாளியாகப் பணியாற்றினேன். 1999-ம் ஆண்டு ஆலையை மூடி விட்டார்கள். அப்போதுதான் தென்னை மரம் ஏறும் கருவியை வடிவமைப்பதற்கான எண்ணம் என்னிடம் ஏற்பட்டது.தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் தேங்காயின் தேவை அதிகமாக இருக்கும். அப்போது தென்னந் தோப்புகளை வைத்திருப்பவர்கள் காய்களை வெட்டி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் மரம் ஏறி காய் வெட்ட ஆள் கிடைக்காமல் பல விவசாயிகள் அல்லல்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கில் கருவியை வடிவமைக்கத் தொடங்கினேன். என் சித்தப்பா குருசாமி வைத்திருந்த பட்டறை என்ஜினீயரிங் கண்ணோ ட்டத்தோடு கருவியை வடிவமைப்பதற்கான பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது.
2005-ம் ஆண்டில் நான் உருவாக்கியதுதான் தென்னை மரம் ஏறும் கருவி. தென்னை மரத்துக்கு மட்டுமின்றி, பனை மரம் ஏறும் கருவி, பாக்கு மரம் ஏறும் கருவி ஆகியவற்றையும் உருவாக்கினேன். எனது கண்டுபிடிப்பு பற்றி அறிந்த புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான தேசிய நிறுவனம் (National Innovation Foundation), மதுரை சேவா மற்றும் நபார்டு போன்ற நிறுவனங்கள் எனது கருவியை பிரபலப்படுத்த பல உதவிகளை செய்தன. NIF நிறுவனத்தின் உதவியால் எனது கண்டுபிடிப்புக்கு நான் காப்புரிமை பெற்றேன்.
பாரம்பரிய அறிவைப் பயன்ப டுத்தி அரிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்துவோருக்காக மத்திய அரசின் தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை வழங்கும் தேசிய விருது 2012-ம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது. எனது கண்டுபிடிப்புக்காக மேலும் பல விருதுகள் கிடைத்துள்ளன. குஜராத் மாநில அரசு எனது கண்டுபிடிப்பை பெரிதும் ஊக்கப்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகம் என்னிடமிருந்து 150 கருவிகளை விலைக்கு வாங்கியது. தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் நான் வடிவமைத்த கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இலங்கை, ஆஸ்திரேலியா, மாலத்தீவு, மொரீசியஸ் உள்பட உலகின் பல நாடுகளில் எனது கருவி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
தென்னை, பனை மற்றும் பாக்கு மரங்களில் ஏற தனித்தனி கருவிகளை வடிவமைத்த நான், ஒரே கருவியின் மூலம் கிளை கள் இல்லாத அனைத்து வகை உயரமான மரங்களிலும் ஏறு வதற்கான புதிய கருவியை தற்போது வடிவமைத்துள்ளேன். பெண்கள், சிறுவர்கள் என எல்லோரும் இந்தக் கருவியைப் பயன்படுத்தி பாதுகாப்பாக மரத்தின் உச்சிக்கு சென்று காய்களைப் பறிக்க முடியும். 60 அடி உயரமுள்ள மரத்தில் 5 நிமிட நேரத்துக்குள் ஏறி, இறங்கலாம்” என்றார் வெங்கட். எல்லா வகை உயரமான மரங்களிலும் ஏறுவதற்கு ஏற்ற புதிய கருவியை வெங்கட் விற்பனை செய்கிறார்.
மேலும் விவரங்களுக்கு 99442 84440 என்ற செல்போன் எண்ணில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.

Source: tamil.thehindu.com

Monday

50 சென்ட்... 45 நாள்... 42 ஆயிரம்... மல்லி கொடுக்கும் மகத்தான வருமானம்!

50 சென்ட்... 45 நாள்... 42 ஆயிரம்...
கொத்தமல்லி கொடுக்கும் மகத்தான வருமானம்!

வேலை ஆட்கள் பற்றாக்குறை காரணமாக... தென்னை, பாக்கு, மூங்கில் உள்ளிட்ட மரப்பயிர்கள் என தங்களுடைய விவசாயத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர் பலரும். இவர்களுக்கு நடுவே... தினசரி வருமானம் கொடுக்கும் காய்கறிகளை, விடாமல் பயிர் செய்யும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், செஞ்சேரிமலை அருகேயுள்ள சாளைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ், அவர்களில் ஒருவராக, ஆண்டு முழுவதும் கொத்தமல்லியை சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகிறார்!

பலே வருமானத்துக்கு பட்டு வளர்ப்பு... ஒரு ஏக்கர்... ஒரு மாதம்...30,000

பலே வருமானத்துக்கு பட்டு வளர்ப்பு...
ஒரு ஏக்கர்... ஒரு மாதம்...30,000
விவசாயத்தோடு... அதுசார்ந்த உபதொழில்களையும் சேர்த்து செய்தால், நிச்சயமாகப் பொருளாதார ரீதியில் பெருவெற்றிதான்'' என்பது விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்து! இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும் ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு... என வளர்த்து கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள். ''நானும் அவர்களின் ஒருவன்'' என்று இங்கே சந்தோஷம் பகிர்கிறார்...