Wednesday

25 சென்ட்... 180 கிலோ..! வறட்சியிலும் வாரிக்கொடுக்கும் வரகு!

25 சென்ட்... 180 கிலோ..!
வறட்சியிலும் வாரிக்கொடுக்கும் வரகு!
அதிக மழை, கடும்வெயில் இரண்டுக்கும் தாக்குப்பிடித்து வளர்வதுதான் சிறுதானியங்களின் சிறப்பு. அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. உழுதுவிட்டு விதைத்தால், அடுத்தது அறுவடைதான்... என்பதால் இன்றைக்கும் மானாவாரி விவசாயிகளின் விருப்பத் தேர்வாக இருக்கின்றன, சிறுதானியங்கள். தமிழகத்தில் சில பகுதிகளில் சிறுதானியங்கள்தான் முக்கியப் பயிராகவும் இருக்கின்றன. அந்த வரிசையில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் மலைப்பகுதியும் ஒன்று. இப்பகுதியிலுள்ள பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி... சாமை, வரகு, கேழ்வரகு என சிறுதானியங்களையே தொடர்ந்து பயிர் செய்கிறார்.

ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு 5 லட்சம்...

ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு 5 லட்சம்...
ஆற்றங்கரைகளிலும், சாலை ஓரங்களிலும் காய்த்துக் குலுங்கிய நாவல் மரங்களில் ஏறி விளையாடியதும், நாவல் பழங்களைப் பறித்தும், பொறுக்கியும் ருசித்தது... தற்போதைய நடுத்தர வயதினரின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
கால ஓட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் என்ற பெயரில் மரங்களைக் கொலை செய்வதிலும்; மணல் மாஃபியாக்கள் ஆறுகளைக் கொலை செய்வதிலும் நாவல் மரங்கள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்றுவிட்டன.

Tuesday

ஒன்றரை ஏக்கரில் தினமும் 2,500

சாலையோரம் சங்கீதம் பாடும் சோலை... ஒன்றரை ஏக்கரில் தினமும் 2,500...
நிறைவான லாபம் தரும் நேரடி விற்பனை!
சென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில், வழி நெடுக இருக்கும் அழகழகானப் பண்ணை வீடுகள், தங்கும் விடுதிகளுக்கு அடுத்தபடியாக அனைவரையும் கவர்வது, ராதாகிருஷ்ணனின் பண்ணையாகத்தான் இருக்கும். பசுமைக் குடில், விதவிதமானச் செடிகள், காய்கறிகள், பழங்கள் விற்பனையகம், சிற்றுண்டிச்சாலை... என அங்கு நிலவும் பசுமையானச் சூழல்தான் இந்த ஈர்ப்புக்குக் காரணம்.

மானாவாரிக்கேற்ற மகத்தான தானியங்கள்...

மானாவாரிக்கேற்ற மகத்தான தானியங்கள்...
வரகு... கேழ்வரகு... இருங்கு சோளம்...
நகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாசார தாக்குதலால், சத்துமிகுந்த உணவுப் பொருட்களின் பயன்பாடு மிகவும் குறைந்து போனதால், நோய்கள் பெருகி வருகின்றன. அதனால், பண்டைய காலத்து உணவுப் பொருட்களுக்கு ஏங்கித் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில், பாரம்பரியம் மிக்க சிறுதானியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால், இவற்றைப் பயிரிடுவதிலும் கவனம் திரும்பியிருக்கிறது!
இப்படிப்பட்ட பாரம்பரிய உணவு தானியங்களில் சோளம், கேப்பை (கேழ்வரகு) மற்றும் வரகு ஆகியவற்றை மானாவாரியாக சாகுபடி செய்துவரும்

Sunday

பறவை வளர்ப்பு... பணத்துக்குப் பணம்; மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி!

பறவை வளர்ப்பு... பணத்துக்குப் பணம்; மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி!
செ.கார்த்திகேயன்
ஹாபிஸ்
பறவைகள் மனிதர்களுக்குப் பிடித்தமானவை. அதனாலேயே பலரும் தங்கள் வீடுகளில் தனியாக ஒரு குடில் அமைத்து பறவைகளை வளர்த்து வருகிறார்கள். மனத்துக்கு மகிழ்ச்சி தருகிறது என்பதற்காகவே பறவையை வளர்க்க ஆரம்பித்தவர்கள், இன்று அதன்மூலம் நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்கள்!
பண்ணை வைத்து வியாபாரம்!
கடந்த 16 ஆண்டுகளாகப் பறவைகளை வளர்த்து வியாபாரம் செய்வதையே தொழிலாகச் செய்து வருகிறார் ஈரோடு மாவட்டம் சத்திரம் புதூரைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி. அவரைச் சந்தித்துப் பேசினோம்.