Monday

மயிர் கூச்செறியும் புத்திசாலித்தனம் (இஸ்ரேல் விவசாயம்)

மயிர் கூச்செறியும் புத்திசாலித்தனம் (இஸ்ரேல் விவசாயம்)


இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அப்போது உலகத்தின் பல பகுதிகளில் வசித்த யூதர்கள் இஸ்ரேலில் திரண்டனர்.

இஸ்ரேலில் பெரும்பகுதி பாலைவனம்.கோடையில் தீ பொறி பறக்கும். குளிர் காலத்தில் குளிர் பல்லைக்கிட்டும் .ஆனால் அங்கு விவசாயம் பார்க்க வேண்டிய தேவை  இருந்ததுஅன்று அது அவர்களுக்கு பழக்கம் இல்லாத தொழில்.

Thursday

மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க மானியம்


வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

"நீங்களே செய்து பாருங்கள்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் முதல் கட்டமாக சென்னை மற்றும் கோவையில் புதன்கிழமை (டிச.18) தொடங்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழா வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.

Wednesday

மாதம் 15 ஆயிரம்...குறைந்த செலவில்...நிறையும் வருமானம்...

பட்டையைக் கிளப்பும் பட்டுரோஜா..!
மாதம் 15 ஆயிரம்...குறைந்த செலவில்...நிறையும் வருமானம்...
'உணவுப் பயிர்களை மட்டும் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கலாம். உணவாக உட்கொள்ளாத மலர்களுக்கு, எதற்காக இயற்கை உரம்?’
-இப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். இத்துடன் 'மலர் சாகுபடிக்கு ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தவில்லையென்றால், மகசூல் கிடைக்காது’ என்கிற நம்பிக்கையும் விவசாயிகள் பலருடைய மனங்களில் அடர்த்தியாக முளைத்துக் கிடக்கிறது. குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் தயவில்தான் மலர் சாகுபடியே நடக்கிறது. இதற்கு நடுவே, அத்தனைப் பேரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக... பட்டுரோஜாவை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்திக் கொண்டிருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி.

வீட்டுத் தோட்டங்கள்...

'வீட்டுத் தோட்டங்கள்...'
குடும்ப ஆரோக்கியத்துக்கு 100% உத்தரவாதம்!
'ஆர்வமும் உழைப்பும் இருந்தால், அடுக்குமாடி வீடுகளில்கூட அழகாக விவசாயம் செய்ய முடியும்’ என்பதை சமீபகாலமாக நகரவாசிகள் பலரும் நிரூபித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவராக தனது அடுக்குமாடி வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து விவசாயம் செய்கிறார், திண்டுக்கல், சின்னசாமி.
''திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை அலுவலரா வேலை செய்றேன். எனக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வமும் நம்பிக்கையும் அதிகம். அதனாலதான், வீட்டுலயே 1,500 சதுர அடியில தோட்டம் போட்டு இயற்கை முறையில, தக்காளி, கத்திரி, மிளகாய், பொன்னாங்கண்ணி, தண்டுகீரை, சிறுகீரை, ரோஜா, முள்ளங்கி...னு சாகுபடி செய்றேன். மாடியில தோட்டம் அமைக்கறதுங்குறது, இப்போ ரொம்ப சுலபமான விஷயமாகிடுச்சு.

காளான் வளர்ப்பு

காளான்
காளான் என்பது பூசண வகையைச் சேர்ந்த பச்சையில்லாத் தாவரமாகும். காளான்கள் பல்வேறு வடிவங்களிலும் மற்றும் நிறங்களிலும் தோன்றுகின்றன. காளானில் ஒரு தண்டுப்பகுதியும் அதன் மேல் ஒரு தலைப்பகுதியும் காணப்படும். பொதுவாக தலைப்பகுதி குடை மற்றும் சிப்பி போன்ற வடிவங்களில் காணப்படும். தலைப்பகுதியின் அடியில் வரிவரியான செதில் போன்ற அமைப்புகள் இருக்கும். இவற்றுக்கிடையில் லட்சக்கணக்கான காளான் பூசண நுண் வித்துக்கள் நிறைந்திருக்கும். இயற்கையில் இவ்வித்துக்கள் மக்கிய பண்ணைக் கழிவுகள் மற்றும் அங்ககப் பொருட்களில் வளர்ந்து பூசண இழைகளாய் படர்ந்திருக்கும்.

வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள்


வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள் பண்டைக்காலம் முதலே தொன்று தொட்டு அனைத்து மக்களாலும் உண்ணப்பட்டு வந்துள்ளது. வாத்து இறைச்சியில் மனிதர்களுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் முக்கியமாக அதிக அளவிலான பன்செறிவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. தற்போது கோழி இறைச்சி பிரபலமடைந்துள்ளது போல் வாத்து இறைச்சி அனைவராலும் விரும்பி உண்ணப்படுவதில்லை.


சாதாரணமாக, வாத்துக்கள் அதிக அளவில் பெரிய முட்டைகளை இடவல்லவை. மேலும் வாத்துக்களை வீட்டுப்புறத்தில் வளர்ப்பதன் மூலம் வீட்டின் அன்றாடத் தேவையான உணவும், வருமானமும், கிடைக்க ஏதுவாக அமையும். அது மட்டுமல்லாமல் வாத்துக்கள் குறைந்த அளவிலான தீவனத்தை உட்கொண்டு நல்ல உடல் எடையை அடைந்து முட்டையிடும் திறனையும் கொண்டுள்ளதால், குறைவான உற்பத்திச் செலவில் வாத்துக்களை வளர்த்து அதிக இலாபம் அடையலாம்.

சாண எரிவாயு தயாரிப்பு

'வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பது போல, தனியார்மயத்தின் விளைவை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா. பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியத் துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு, மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை ஏறுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விண்ணில் பறக்கிறது. 'ஆண்டுக்கு ஒன்பது சிலிண்டர்கள் மட்டுமே மானியத்தில் கொடுப்போம்...’ என கறார் காட்டுகிறது, அரசு. 'இதை எப்படி சமாளிப்பது?’ எனத் தெரியாமல், எரிவாயு இல்லாமலே எரிகிறது, சாமானியனின் வயிறு.

Monday

ஏக்கருக்கு ஒரு லட்சம்... பந்தல் காய்கறி... பக்காவான வருமானம்...


ஏக்கருக்கு ஒரு லட்சம்... பந்தல் காய்கறி... பக்காவான வருமானம்...
குதூகலமூட்டும் குறும்புடலை!
'வேலையாட்கள் குறைவாகத்தான் தேவைப்பட வேண்டும்; அதிக வேலை வைக்கக் கூடாது; நல்ல வருமானமும் கிடைக்க வேண்டும்...'
-நீங்கள், இப்படியெல்லாம் கணக்குப் போட்டு விவசாயம் செய்பவராக இருந்தால், உங்களுக்கான விவசாயம்... பந்தல் காய்கறிகளாகத்தான் இருக்க முடியும். ஆம், இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் விவசாயிகள் பலரும், தொடர்ந்து பந்தல் வகை காய்கறிகளைத்தான் சாகுபடி செய்து வருகிறார்கள்... திருவண்ணாமலை, வேங்கிக்கால், சுரேஷ்குமார்! இவர், குறும்புடலை சாகுபடியில், குதூகல வருமானம் பார்த்துக் கொண்டிருப்பவர்!

Sunday

கல்வி, விவசாயம், கழிவுநீர் மேம்பாடு உட்பட பல துறைகளில் தமிழகத்திற்கு கைகொடுக்கும் இஸ்ரேல்

சென்னை அருகே நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல் கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி மூலம் வேளாண்மைக¢கு பயன்படுத்துதல் போன்றவற்றில் இஸ்ரேல் & தமிழகம் இடையே தொழில் உறவுகள் மேம்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது  என்று  இந்தியாவுக¢கான இஸ்ரேலிய தூதர் அலான் உஷ்பிஸ் தெரிவித்தார்.

Friday

கொடி பீன்ஸ்....மானாவாரியில் ஒரு மகத்தான சாகுபடி

கொடி பீன்ஸ்....மானாவாரியில் ஒரு மகத்தான சாகுபடி
காய்கறி விவசாயம் எப்போதுமே கைவிடாது’ என்பதை அனைத்து விவசாயிகளுமே நன்கு புரிந்து வைத்திருப்பர். ஆனால், பாசன வசதி இருந்தால் மட்டுமே காய்கறி விவசாயம் சாத்தியப்படும் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்... கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் பகுதி விவசாயிகள் மானாவாரியில் பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ்... என காய்கறிகளை சாகுபடி செய்து கலக்கி வருகிறார்கள். இப்பகுதிகளில் கிடைக்கும் பருவமழை, அதிகளவில் வெயிலும், குளிரும் இல்லாத மிதமானச் சூழல் ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்துவதுதான் இவர்களின் வெற்றிக்கான சூத்திரம்!
கர்நாடக மாநிலம், உடையார்பாளையா பகுதியைச் சேர்ந்தவர், ராபர்ட். இவர், கேழ்வரகு, கொடி பீன்ஸ் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகிறார். விட்டு விட்டுப் பெய்த லேசான மழைத் தூறலில் நனைந்தபடியே அவருடைய வயலுக்குள் நுழைந்தோம்.

தலைச்சேரி... சிரோஹி... போயர்... 4 ஆண்டுகளில் 50 லட்சம்


தலைச்சேரி... சிரோஹி... போயர்... 4 ஆண்டுகளில் 50 லட்சம்...
அள்ளிக் கொடுக்கும் ஆட்டுப்பண்ணை!
ஆசை இருக்கு அரசாள... அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க’ என்று கிண்டலாகச் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு அரசாள்வதைவிட... இது மேல் என்று சொல்லும் அளவுக்கு... மரியாதைக்குரிய மற்றும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது ஆடு மேய்த்தல்!
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அதிகளவில் உருவாகி வரும் ஆட்டுப்பண்ணைகளே அதற்கு சாட்சி! அவர்களில் ஒருவராக... நிறைவான லாபம் பார்த்து வருகிறார்,

Thursday

4 ஏக்கர்... 7 ஆண்டு... 20 லட்சம் - கைகொடுத்த மரம் வளர்ப்பு!

4 ஏக்கர்... 7 ஆண்டு... 20 லட்சம்

விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்வாழ்க்கை முறை, பணிச்சூழல் ஆகிய காரணங்களால், விவசாயத்தைத் தொடர முடியாத பலரும், நிலங்களைப் பராமரிக்க முடியாமல், விற்று விடுவது வழக்கம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட நிலத்தை விற்க மனமில்லாமல், அதில் மரங்களை வளர்த்து, விவசாயத்தைத் தொடர்பவர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர்சென்னை, மாங்காடு, விநாயகமூர்த்தி.

குன்றத்தூர் நால்ரோட்டிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் குறுகிய சாலையில் இரண்டு நிமிடம் பயணித்தால், சிமெண்ட் காம்பவுண்டுக்குள் கம்பீரமாகக் காட்சி தருகிறது

Monday

மீன் வளர்ப்பு பற்றிய சில தகவல்கள்

மீன் வளர்ப்பு பற்றிய சில தகவல்கள்

Fish-Tank
வீட்டில் மீன்கள் வளர்ப்பது பொழுதுபோக்கு அம்சங்களுள் ஒன்று. மீன் வளர்ப்பதிலும் அதற்கென மீன் காட்சியகம் வைப்பதிலும் பலருக்கு அச்சமும் கவலையும் உண்டாகிறது. சொல்லப்போனால் இந்த பொழுதுபோக்கை சுற்றி பல கட்டுக்கதைகள் புனையப்பட்டுள்ளது. அவைகளையெல்லாம் நம்ப ஆரம்பித்தால், இந்த அற்புதமான பொழுதுபோக்கை இழந்துவிடுவீர்கள். அப்படிப்பட்ட சில கட்டுக்கதைகளைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா.

மரபணு மாற்றம் என்ற மாய்மாலம்

மூல விதைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆடும் ஆட்டமே மரபணு மாற்று விதைத் தொழில் நுட்பம் என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்து செயல்படுகிறது. இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்சு, ஜெர்மனி, அயர்லாந்து, ரொமேனியா, போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளின் அனுபவங்கள் கசப்பானவை என்பதால் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அவை தடை விதித்து விட்டன. இவ்வகை பயிர் பொருட்கள் சிறுநீரகக் கோளாறு, தோல் வியாதிகள், ஒவ்வாமை, இதயநோய், புற்றுநோய் என்று 55 வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.பி.டி. கத்திரிக்காயை தொடர்ந்து நெல், பருப்பு, கோதுமை மூலிகைகள், காய்கனிகள் சிறு தானியங்கள் என்று பல பயிர்களின் மரபணு மாற்றப்பட்ட ரகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்பது ஓர் அபாயம்.

Saturday

தரிசு நிலத்தை சோலையாக்கும் இயற்கை விஞ்ஞானி தாத்தா


தனது சோலைவனத்தில் சதாசிவம்500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி செய்து உப்புமா கிண்டலாம். லட்டு செய்யலாம். மாவா அரைச்சு தோசை சுடலாம். இப்படி 240 மர வகைகள் இருக்குன்னு யாருக்காச்சும் தெரியுமா?


"திடீர்னு ஒருநாள் எங்க வீட்டுத் தென்னந்தோப்புல இருந்த மரங்கள் எல்லாம் காய்ஞ்சு விழுறாப்பல கனவு கண்டேன். கனவைச் சொல்லி 'மாற்றுப் பயிரை பத்தி யோசிக்கணும்'னு நான் சொன்னத யாரும் நம்பல. எல்லாரும் சிரிச்சாங்க. ஆனா ஒருநாள், கனவு கண்டமாதிரியே என் கண்ணு முன்னாடியே எல்லா மரங்களும் கழுத்தொடிஞ்சு காய்ஞ்சு விழுந்துருச்சு. பக்கத்து தோட்டத்துலயும் அப்படித்தான்!

என்னை உதாசீனப்படுத்துனவங்க மேல கோபமும் ஆத்திரமும் வந்துச்சு. பக்கத்துல இருக்கிற மலங்காட்டுக்குள்ள போய்ட்டேன். காட்டுக்குள்ள கெடச்ச நெல்லி, புளின்னு மரவகை உணவுகளை உண்டு திரிஞ்சேன். இருபது நாள் கழிச்சு மீண்டும் ஊருக்குள்ள வந்தப்ப, பைத்தியக்காரன பாக்குறாப்புல பாத்தாங்க. அதுக்கப்புறம் ஜனங்க என்னை பரிகாசம் பண்றப்ப எல்லாம் வனவாசம் போக ஆரம்பிச்சேன். காடுகளை சுவாசித்து மரங்களோட பேசிப் பேசி நான் இன்னைக்கி இப்படி இருக்கேன்"

முற்றும் துறந்த முனிவர் போல பேசும் விவசாயி இ.ஆர்.ஆர்.சதாசிவத்துக்கு 73 வயது. கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் 1997ல் இந்திய அரசின் இந்திரா பிரியதர்சினி விருஷ்சமித்ர விருது பெற்றவர். கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றத்தை தடுத்தால், அங்கேயே அவர்களது ஜீவாதாரத்துக்கான வழிவகை களைப் பெற்றுத் தந்தால், காடு வளர்ப்பில் புவி வெப்பமயமாதலை தடுத்தால் பாலைவனத்தில்கூட பலன்தரும் மரங்களை வளர்க்க முடியும் என்பதை நிரூபித்தவர்.

எதற்கும் உதவாது என்று வல்லுநர்களே ஒதுக்கித் தள்ளும் நிலங்களை பொன்விளையும் பூமியாக மாற்றுகிறார் சதாசிவம். திருச்சி டு தஞ்சாவூர் சாலையில் செங்கிப்பட்டி அருகே உள்ள மு.சோலகம்பட்டி கிராமத்தில், தன் நண்பர்கள் துணையோடு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். மண்ணின் தரத்துக்கு ஏற்ப மா, பலா, தேக்கு, ஈட்டி, செஞ்சந்தனம், பேரீச்சை என விதவிதமான மரங்களை நட்டார். மூன்று இடங்களில் தலா பத்து ஏக்கரிலான குளங்களை வெட்டி அதில் மழை நீரை சேமித்தார். சுயதேவைக்கு சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்தார். தரிசாகக் கிடந்த அத்தனை ஏக்கரும் சோலைவனமானது. சதாசிவத்தின் சோலைவனத்துக்கு வெளிமாநிலங்களிலிருந்தும் பலர் வந்து பாடம் படித்துக் கொண்டு போகிறார்கள். அவர்களுக்கு ஆலோசனைகளையும் அள்ளி வழங்குகிறார் சதாசிவம்.

"எனக்கும் மரங்களுக்குமான உரையாடல் ஏழு வயசிலேயே ஆரம்பிச்சிருச்சு.எதுவும் பேசாம நிக்கிறவங்களைப் பார்த்து, 'ஏன் மரம் மாதிரி நிக்கிற?'ன்னு கேப்பாங்க. பலரும் நெனைக்கிற மாதிரி மரம் ஜடமில்லை. அவை ஏதோ ஒன்றை மனிதனுக்கு சொல்ல விரும்புது. இதை நான் சொன்னப்போ ஒருமாதிரியா பார்த்தாங்க. இது சொன்னா புரியாது. அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும். மரங்களை நேசிக்க வேண்டியது நம்ம கடமை. இது புரியாம, மத்தவங்க பரிகாசம் செஞ்சத என்னால தாங்கிக்க முடியல. காட்டுக்குள்ளே போய் மரங்களோட மரங்களா குடியிருக்க ஆரம்பிச்சேன். அப்பா, அம்மா காட்டுக்குள்ளே இருந்து புடிச்சுட்டு வந்து படின்னு அனுப்புவாங்க. அடிக்கடி நான் காட்டுக்குள்ள ஓடுனதால பெத்தவங்களும் ஒரு கட்டத்துல பேசாம இருந்துட்டாங்க.

காட்டுக்குள்ள சுத்தும்போதுதான் ஒவ்வொரு மரத்தோட தன்மை, குணாம்சம், அது நம் உயிர் மண்டலத்துக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்குன்னு தேடித்தேடி படிச்சேன். ஆராய்ச்சியும் பண்ண ஆரம்பிச்சேன். காய்கறிகளில் கத்திரிக்காய், முள்ளங்கி போல, காடுகள்லயும் மரக்கத்திரிக்காய், மரத்தக்காளி எல்லாம் உண்டு. 500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி செய்து உப்புமா கிண்டலாம். லட்டு செய்யலாம். மாவா அரைச்சு தோசை சுடலாம். இப்படி மனிதனுக்கு நேரடியாக உணவளிக்கும் 240 மர வகைகள் இருக்குன்னு யாருக்காச்சும் தெரியுமா?

கோவையில் சிறுவாணி, போளுவாம்பட்டி, தடாகம், மாங்கரை, பல்லடம், சூலூர், உடுமலை, பெருந்துறை சுற்று வட்டார கிராமங்கள்ல உள்ள தரிசு நில விவசாயிகளிடம் பேசி இந்த மரப்பயிர்களை வேளாண்மை செய்ய ஆரம்பித்தேன். அதில் நான் கண்டது நிரூபணமானது. அதை ஒட்டுமொத்தமா ஒரே இடத்துல செய்து காட்டணும். நான் உருவாக்கியதை இந்த உலகுக்கு அர்ப்பணிக்கணும்ற நோக்கத்தோடுதான் இங்கே இந்த காடுகளை உருவாக்கினேன்"என்கிறார் சதாசிவம்.


தேக்கு, செஞ்சந்தனம், ஈட்டி உள்ளிட்ட 200 வகை மரங்கள் வளர்ந்து செழித்து நிற்கும் சதாசிவத்தின் இந்த சோலைவனம் இயற்கை ஆர்வலர்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் தான்!
Source: Tamil.thehindu

Thursday

மாடியில் ஒரு உணவுத் தோட்டம்

மாடியில் ஒரு உணவுத் தோட்டம்


நாங்கள் சைவம். முட்டையைக்கூடத் தொடுவதில்லை. மீன், முட்டை, இறைச்சி எல்லாமே புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் நிரம்பியவை. இவற்றை ஈடு செய்ய பால், மோர், நெய், நல்லெண்ணெய், பருப்பு, காய்கறிகள் போதுமானவை. சைவ உணவு உண்பவர்களுக்கு நோய் குறைவாக வரும். சைவ உணவு உண்பவர்கள் நிறைய எண்ணெய்ப் பலகாரங்கள் மற்றும் வனஸ்பதியில் செய்யப்பட்ட இனிப்பின் காரணமாக நோயுறுவார்கள். அளவோடு உண்டால் அவ்வளவாக நோய் வராது. உணவில் அதிகளவில் காய்கறிகள் சேர்க்க வேண்டும். சென்னையில் வாழ்க்கை ஓடியவரையில் காய்கறிகள் பார்த்துப் பார்த்து வாங்குவதுண்டு. என் மனைவியை எந்தப் பொருளாலும் திருப்தி செய்ய முடியாது. பச்சென்று காய்கறிகளை வாங்கிப் போட்டால் அப்பசுமையைப் பார்த்து அவள் சினமும் தணிந்துவிடும்.

இத்தாலிய தேனீ வளர்த்து லட்சம் வருமானம் ஈட்டும் இல்லத்தரசி...

இத்தாலிய தேனீ வளர்த்து லட்சம் வருமானம் ஈட்டும் இல்லத்தரசி...
தேனீக்கள் மட்டும்தானா?...சுறுசுறுப்பு, அதை வளர்க்கும் இந்த.... இல்லத்தரசியும் படு சுறுசுறுப்புத்தான். இயற்கை எழிலுடன் தென்னை மரங்கள் சூழ்ந்த கோவையை அடுத்த சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் உள்ள மலை மந்திரிபாளையம் கிராமத்து பண்ணை வீட்டில், தேன்பண்ணை தொழிலில் வருமானம் நல்ல தேடும் இல்லத்தரசியாக திகழ்பவர்

Wednesday

மாதம்தோறும் 1,00,000 தெம்பான வருமானம் தரும் இத்தாலியத் தேனீ !

தேன்… இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப்பொருளாக… என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான்… கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

யாருக்கு தேன் தேவைப்பட்டாலும்… ”சுத்தமான (கலப்படமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்?” என்பதாகத்தான் அவர்களுடைய கேள்வி இருக்கிறது. ஆம், அந்தளவுக்கு இதில் கலப்படம் நிறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே… தட்டுப்பாடுதான்!

Tuesday

தினமும் 15 நிமிஷம்... மாதம் 2 ஆயிரம்! மண்ணிலிருந்து ‘பொன்’ எடுக்கும் மகளிர்

தினமும் 15 நிமிஷம்... மாதம் 2 ஆயிரம்! மண்ணிலிருந்து ‘பொன்’ எடுக்கும் மகளிர்





 தினமும் உங்களால 15 நிமிஷம் ஒதுக்க முடிஞ்சா, வீட்டிலிருந்தபடியே மாசம் ரெண்டாயிரம் சம்பாதிக்கலாம். ரெடியா..? மண்புழு உரம் தயாரிக்க களம் இறங்கலாமா..?!''
- திருவள்ளூர் மாவட்ட கிராமப் பெண்களின் குரலில் அத்தனை உற்சாகம்.

Wednesday

இயற்கை உரமிருக்க செயற்கைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை



ஜீவார்மித கரைசல்... அக்னி அஸ்திரம்... என இயற்கை உரமிருக்க... செயற்கைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்கிறார், திண்டுக்கல் காந்திகிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன். காந்திகிராமம் செட்டியபட்டியில் மலையடிவாரத்தை ஒட்டி செழித்திருக்கிறது, இவரது தோட்டம். மதுரையில் ஜவுளி பிசினஸ் செய்தாலும், தினமும் தோட்டத்தைப் பார்க்க தவறுவதில்லை. 21 ஏக்கர் பரந்து விரிந்த பூமியில் பப்பாளி, திராட்சை, சப்போட்டா, மா, கொய்யா ரகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.


தோட்டத்திலேயே கிடைமாடுகளுக்கு நிரந்தர இடம் ஒதுக்கி, அவற்றின் சாணத்தை சேகரிக்கிறேன். மாடுகளுக்காக சிறிய குளம் அமைத்துள்ளேன். மலைப்பகுதியில் மேய்ச்சல் முடிந்து, இரவில் இங்கே இளைப்பாறும். மாட்டுச்சாணம், கோமியம், உளுந்து பயறு, நாட்டு சர்க்கரையுடன் கரைசலை ஊற்றப் போகும் இடத்தின் மண்ணையும் கலந்து 48 மணி நேரம் ஊறவைப்பேன். இதுதான் ஜீவார்மித கரைசல். மண்ணையும், என்னையும் வாழவைக்கிறது.

புளித்த தயிரை தண்ணீரில் கரைத்து தெளித்தால், செடிகளுக்கு நல்ல கிரியாஊக்கியாக செயல்படுகிறது. பூச்சி தாக்குதல் இருந்தால் அக்னி அஸ்திரம் இருக்கவே இருக்கிறது.

Tuesday

5 ஏக்கர்... 200 நாட்கள்... 7,50,000! விறுவிறு லாபம் தரும் மிளகாய்!

5 ஏக்கர்... 200 நாட்கள்... 7,50,000!
விறுவிறு லாபம் தரும் மிளகாய்!

''எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே...''
-கவிஞர் புலமைப்பித்தனின்  இந்த வரிகள், குழந்தைகளுக்கு மட்டுமல்ல... விவசாயத்துக்கும் பொருந்தும். தேவையான தொழில்நுட்பங்கள், முறையான திட்டமிடல் போன்றவை இருந்தால்... விவசாயத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம், என்பதை பல விவசாயிகள் நிரூபித்து வருகிறார்கள். குறிப்பாக, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என அதிக சம்பளம் கிடைக்கும் படிப்பைப் படித்த இளைஞர்கள்கூட... விவசாயத்தின் மீதிருக்கும் பாசம் காரணமாக அதில் கால் பதித்து, அசத்தல் வருமானம் ஈட்டி வருகிறார்கள். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள துவார் கிராமத்தின் தகவல் தொழில்நுட்பப் பட்டதாரி சரவணன், அவர்களில் ஒருவராக ஆச்சர்யம் கூட்டுகிறார்!
கணினி வேண்டாம்... களத்துமேடு போதும்!
செம்மண் பூமியில் 'பச்சைப் பசேல்’ எனப் படர்ந்து விரிந்திருந்த மிளகாய் தோட்டத்தில் சரவணனை சந்தித்தோம். ''தாத்தா காலத்துல விவசாயம்தான் பிரதான தொழில். அப்பா அரசியல்ல இருந்ததால, விவசாயத்தை கவனிக்க முடியாமப் போச்சு. நான் ஐ.டி. (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) முடிச்சு, முழுக்க நகரவாசியா மாறிட்ட நிலையில... ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அப்ப, விவசாயம்தான் கண்முன்னே வந்துச்சு. சொந்த ஊருக்கு வந்து பார்த்தா... புதர் மண்டி, காடு மாதிரி கிடந்துச்சு எங்க நிலம். அதை சுத்தம் செஞ்சு, விவசாயத்துக்கு ஏத்த நிலமா மாத்தினேன். கிணறு இருந்ததால தண்ணி பிரச்னை இல்ல. நிலம் தயாரானதும்... சோளம் விதைச்சேன். அதுல ஓரளவு லாபம் கிடைக்கவே... அடுத்தடுத்து அடி எடுத்து வைக்கிற நம்பிக்கை உள்ளுக்குள்ள துளிர் விட்டுச்சு'' என்று நம்பிக்கையை விதைத்த சரவணன், தொடர்ந்தார்.

25 சென்ட் நிலத்தில், ஒரு ஏக்கர் மகசூல்... வெளிநாடு போகும் வெள்ளரி..!


25 சென்ட் நிலத்தில், ஒரு ஏக்கர் மகசூல்...
வெளிநாடு போகும் வெள்ளரி..!
வியர்வை சிந்தி விளைச்சல் எடுக்கும் விவசாயிக்கு, விலை நிர்ணயம் செய்யும் உரிமை... நாடு அடிமைப்பட்டுக்கிடந்த வெள்ளைக்காரன் காலத்தில் மட்டுமல்ல... இன்றைய சுதந்திர பூமியிலும் இல்லை என்கிற ஆதங்கத்தை, இதைவிட அழகாகச் சொல்ல முடியாது.
என்றாலும், அன்று தொடங்கி... இன்று வரை சிலபல யுக்திகளைக் கையாளும் விவசாயிகள், தங்கள் விளைபொருளுக்கு நிரந்தரமான விலையைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் பசுமைக் குடிலில் வெள்ளரிக்காய் உற்பத்தி செய்து, நேரடி விற்பனை மூலம் நிரந்தர வருமானம் ஈட்டி வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், ஜே. கிருஷ்ணாபுரம், மோகன் செல்லக்குமார்.
கிராமத்துக்கு வெளியே, வளைந்து நெளிந்து செல்லும் தார்சாலையின் இருபுறங்களிலும் வரிசை கட்டி நிற்கின்றன, தென்னைமரங்கள். அவற்றுக்கு இடையே 'பளிச்' என காட்சி தரும் பண்ணை வீடுகளை ரசித்துக் கொண்டே சென்றால்... மோகன் செல்லக்குமாரின் பசுமைக் குடில் வந்துவிடுகிறது.

Wednesday

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயி


மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி, வாடிப்பட்டி அருகே திருவாலவாயநல்லூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இப்பகுதியில் ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இடையில் 8 ஆண்டுகளாக முற்றிலும் இயற்கை வழி விவசாயத்தை மேற்கொண்டுள்ள பார்த்தசாரதி, "ரசாயன உரங்களால் உடல்நலத்துக்கு கேடு விளைகிறது. எனவே இயற்கை உரங்களை பயன்படுத்துகிறேன்,' என்கிறார்.


திருவாலவாயநல்லூரில், 25 ஏக்கரில் இவரது விவசாய நிலம் பரந்து விரிந்துள்ளது. பெரும்பாலும் தென்னை மரங்களே நிறைந்துள்ளன. அவர் தென்னையின் காய்களை மட்டுமே பறிக்கிறார். அடிமுதல் நுனிவரை பயன்படும் தென்னையின் ஓலைகள், மட்டைகள் எதையும் அவர் தொடுவதில்லை. அவை அப்படியே மரங் களினூடே தரையில் கிடந்து, மண்ணோடு மண்ணாக மக்கிப் போகின்றன. இதனால் நுண்ணூட்டச்சத்துக்கள் அப்படியே மண்ணில் தங்குகின்றன.

ஜப்பானியக் காடைவளர்ப்பு


ஜப்பானியக்காடை கோழிகள் சிறிய கூண்டுகளில் வாழக்கூடும் ஒரு திடமான பறவை இனமாகும். கறி மற்றும் முட்டைக் கோழிகளில் காணப்படும் பொதுவான நோய்களுக்கு காடைகள் மட்டும் விதிவிலக்கல்ல.

இனம் குஞ்சுகளைப் பராமரித்தல்: புதிதாக பொறிக்கப்பட்ட காடைக் குஞ்சுகள் மிகவும் சிறியதாக (6-7 கிராம் எடை) காணப்படும். இந்த இனம் குஞ்சுகளுக்கு சரியான அடைகாத்தலுக்குரிய சீதோஷ்ண நிலையை உருவாக்கிக் கொடுப்பது மிக மிக அவசியமானதாகும். இக்குஞ்சுகளுக்குப் பிறந்த நாள் முதல் 3-4 வார வயது வரை கூடுதல் வெப்பம் தேவைப்படுகிறது. ஒரு வர்த்தக வெப்பப் பதனக்கருவி மூலமோ அல்லது மின் விளக்குகள் மூலமோ போதுமான அளவு வெப்பத்தை வெற்றிகரமாக கொடுக்க இயலும்.

Sunday

சத்தான வருமானம் தரும் சம்பங்கி..! 70 சென்ட் நிலத்தில்... ஆண்டுக்கு 3 லட்சம்!


சத்தான வருமானம் தரும் சம்பங்கி..!
70 சென்ட் நிலத்தில்... ஆண்டுக்கு 3 லட்சம்!
'ஒவ்வொரு விவசாயியும் தனது நிலத்தில், வருட வருமானம், மாத வருமானம், வார வருமானம், தினசரி வருமானம் என்று கிடைக்குமாறு கலப்புப் பயிர்களை சாகுபடி செய்தால்... நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்பதுதான் காலகாலமாக விவசாயப் பொருளாதார வல்லுநர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதை நிரூபிக்கும் விவசாயிகளும் இங்கே நிறைய! அந்த வகையில், தினசரி வருமானம் கொடுக்கும் பயிர்களில் முதலிடத்தில் இருப்பது மலர்கள். குறிப்பாக, சம்பங்கி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு தினசரி வருமானத்துக்குப் பஞ்சமே இல்லை. அதனால்தான் பலரும் சம்பங்கி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள ரெங்கப்பநாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயரங்கன்.