Saturday

'குறைந்த நாட்களில், அதிக மகசூல்’ என்பதுதான் வீரிய ஒட்டு ரக நெல் விதைகளுக்குச் சொல்லப்படும் தாரக மந்திரம். ஆனால், அதைச் சாகுபடி செய்வதற்குள் மூட்டைக் கணக்கில் ரசாயன உரங்களையும்... லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லிகளையும் அள்ளி இறைக்க வேண்டியிருக்கும். அதேசமயம், இவ்வளவெல்லாம் பாடுபடாமல், இயற்கை முறையிலேயே வீரிய ரகங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், குறைந்த நாட்களிலேயே மகசூல் கொடுக்கக் கூடிய பாரம்பரிய விதைகளும் இருக்கத்தான் செய்கின்றன.


1 ஏக்கர்... 3 மாதம்... 20,000...
குறைவில்லாமல் லாபம் கொடுக்கும் குள்ளங்கார் நெல்...
'குறைந்த நாட்களில், அதிக மகசூல்’ என்பதுதான் வீரிய ஒட்டு ரக நெல் விதைகளுக்குச் சொல்லப்படும் தாரக மந்திரம். ஆனால், அதைச் சாகுபடி செய்வதற்குள் மூட்டைக் கணக்கில் ரசாயன உரங்களையும்... லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லிகளையும் அள்ளி இறைக்க வேண்டியிருக்கும். அதேசமயம், இவ்வளவெல்லாம் பாடுபடாமல், இயற்கை முறையிலேயே வீரிய ரகங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், குறைந்த நாட்களிலேயே மகசூல் கொடுக்கக் கூடிய பாரம்பரிய விதைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

நூறு ஏக்கருக்கு... இரண்டே வேலையாள்..

ஏக்கருக்கு 42 மரங்கள்.

இடுபொருட்களே தேவையில்லை.
களையெடுக்கும் கால்நடைகள்.

காவேரிராஜபுரம்...  அரக்கோணம் அருகே உள்ளடங்கி இருக்கும் திருவள்ளூர் மாவட்ட கிராமம். சில பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லும், கரடுமாக இருந்த ஊரில், இப்போது திரும்பிய பக்கமெல்லாம் மாந்தோப்புகள் விரிந்து கிடக்கின்றன. இந்தப் பருவத்தில் தமிழகத்தில் மாம்பழ விளைச்சல் பெரிய அளவு இல்லை. அதேகதைதான் இங்குள்ள பெரும்பாலான மாந்தோட்டங்களிலும். ஆனால், 'லியோ இயற்கை வேளாண் பண்ணை'யில் மட்டும் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. காரணம்... ''முழுக்க முழுக்க இயற்கை முறையிலேயே நான் பராமரிக்கறதுதாங்க'' என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார், பண்ணைக்குச் சொந்தக்காரர்களில் ஒருவரான பாரதி!