இயற்கை வரம்

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? - மாற்கு 8:36

Pages

  • Home
  • விவசாயம்
  • மூலிகை மருத்துவம்
  • கால்நடை வளர்ப்பு

Wednesday

இயற்கை முறையில் தென்னை சாகுபடி: லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்


விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும் இன்றைய சூழலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் இப்போது விவசாயத்துக்குத் திரும்பியுள்ளார்.

அதுவும் இயற்கை வேளாண் முறையின்மூலம் லட்சங்களைக் குவிக்கும் லாபகரமான தொழிலாகவும் விவசாயத்தை மாற்றி மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் மருதமுத்து.
இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்து தென்னை சாகுபடி செய்தால் ஒரு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் என்பதை இவர் நிரூபித்துள்ளார். பட்டதாரி ஆசிரியரான தனது மனைவியுடன் கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயமும் லாபகரமான தொழில்தான் என்பதை நிரூபித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே தவமடையில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் இயற்கை முறையில் தனது மனைவி வாசுகியுடன் இணைந்து தென்னை, ரோஜா, சம்பங்கி மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்.
தனது அனுபவத்தைப் பற்றி அவர் கூறியது: "ஒவ்வொருஇளைஞர்களிடம் விவசாயி என்ற உள்ளுணர்வு தூங்கிக் கொண்டிருக்கிறது. அதைத்தட்டி எழுப்பினால் அவன் விவசாயியாகி விடுவான். சென்னையில் சாஃப்ட் வேர்இன்ஜினியராக லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை.
ஓய்வே இல்லாமல் ஓடிய நகர்ப்புற வாழ்க்கை மீது எனக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டியது. இந்தத் தொழிலை விட்டால் அடுத்து விவசாயம்தான் என்னுடைய தேர்வாக இருந்தது. அன்றாடம் விவசாயிகள் தற்கொலைனு வரும் செய்திகள் என்னை மிரட்டின. விவசாயித்தில் கால் அனாகாசு கூட மிஞ்சாதுப்பா என்று பலர் கூறினர்.
இயற்கை விவசாயம் என்றதும்,அதுவெல்லாம் நம்ம நிலத்தில் சாத்தியமில்லைனு பயமுறுத்தினர். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்தது. சொந்த ஊரில் 9 ஏக்கர் நிலம் வாங்கினேன். விவசாயம் செய்யத் தொடங்கினேன். படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்காமல் விவசாயம் செய்ய வந்துட்டான்னு என்னை ஏளனம் செய்யாதவர்களே கிடையாது.
இன்று அவர்களே என்னிடம், என்ன பயிர் செய்யலாம், என்ன ரகம் பயிரிடலாம் என ஆலோசனை கேட்கின்றனர்.அந்த அளவுக்கு என்னுடைய தோட்டத்தில் இயற்கை முறையில் பயிரிட்ட தென்னை, சம்பங்கி, கால உணவு பயிர்களை ஒவ்வொன்றிலும் கைநிறைய வருமானம்கிடைக்கிறது.
கூலி வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்வதில்லை. நானும்,எனது மனைவியுமே நாற்று நடுவோம். தண்ணீர் பாய்ச்சுவோம். அறுவடை செய்வோம். மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்வோம். பெருமைக்காக சொல்லவில்லை. என்னை பார்த்து 100 இளைஞர்கள் விவசாயத்திற்கு வரனும்னு நினைச்சேன். இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 20, 30 படித்தவர்கள் விவசாயம்செய்கின்றனர். இது என்னுடைய இயற்கை விவசாயத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.
திண்டுக்கல்லில் கடந்த 4 ஆண்டாக மழையே இல்லை. மாவட்டத்தில் 60 சதவீதம்தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. ஆனால், என்னுடைய தோட்டத்தில் ஒரு தென்னமரம் கூட பட்டுப் போகவில்லை. மொத்தம் 250 தென்னை மரங்கள் வைத்துள்ளேன். ஒரு மரத்தில் சாதாரணமாக 40 காய் கிடைக்கிறது. மாதம் 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இவ்வளவுக்கும் தண்ணீரே பாய்ச்சுவதில்லை.
பராமரிப்பு செலவே இல்லை. அதற்குக் காரணம், இயற்கை விவசாயம் முறையில் செய்த நடவுமுறை. 4-க்கு 4 அடி என்ற அளவில் குழி தோண்டி, அதில் கப்பி மணல் கொட்டினேன். மாட்டு சாணம், சிறுநீரை அடி உரமாக போட்டு தென்னை மரக்கன்றுகளை நட்டேன். தென்னை மரம் அதிக தண்ணீரை ஈர்க்கும். கப்பி மணல் போட்டதால் மழைக் காலத்தில் தண்ணீரை ஈர்த்து வைத்துக் கொண்டு 3 முதல் 6 மாதம் வரை மரத்திற்கு தண்ணீர் கொடுக்கிறது. ஒரு தென்னை மரத்தின் வயது 80 ஆண்டு.
மனிதனின் சராசரி ஆயுள் 60 ஆண்டு. இயற்கை விவசாயத்தில் தென்னை மரங்களைப் பயிரிட்டால் ஒரு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். 60 சென்ட் நிலத்தில் சம்பங்கி பயரிட்டுள்ளேன். இதிலும் ஆண்டுக்கு ரூ. 5.50 லட்சம் வருமானம்கிடைக்கிறது. செலவு போக மாதம் 30 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. என்னுடையஅடுத்த இலக்கு ரோஜா. இப்போதுதான் ரோஜாவை இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்துள்ளேன். இதிலும் நிச்சயம் ஜெயிப்போம்'' என்றார் நம்பிக்கையுடன்.
அவருடைய அனுபவங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 9787642613 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Source: tamil.thehindu.com
Posted by நாஞ்சில் நண்பன் at 11:10 PM No comments:

Thursday

இயற்கை வழியில் மலர் சாகுபடி: பெரம்பலூர் விவசாயி ஆறுமுகம் சாதனை

 இயற்கை வழியில் மலர் சாகுபடி: பெரம்பலூர் விவசாயி ஆறுமுகம் சாதனை
 தனது சம்பங்கி தோட்டத்தில் விவசாயி ஆறுமுகம்
தனது சம்பங்கி தோட்டத்தில் விவசாயி ஆறுமுகம்

இயற்கை வேளாண்மை என்றாலே உணவுப் பயிர்கள்தான் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறார் பெரம்பலூர் ஆறுமுகம். அவர் ஈடுபடிருப்பது அங்கக மலர் சாகுபடியில்.
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி இவையற்ற இயற்கை வேளாண்மையில் விளைந்த தானியம், காய் கனிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது கண்கூடு. ஆனால் மலர் சாகு படிக்கு ஆறுமுகம் இயற்கை வேளாண் மையை நாடியதிலிருந்து வேளாண் ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
மேலும் வாசிக்க »
Posted by நாஞ்சில் நண்பன் at 4:45 AM No comments:

Saturday

ஆரோக்கிய அறுவடைக்கு வழி காட்டும் வீட்டுத் தோட்டம்

ஆரோக்கிய அறுவடைக்கு வழி காட்டும் வீட்டுத் தோட்டம்

என்.சுவாமிநாதன்
வீட்டுத் தோட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் 


வீட்டுத் தோட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன்
மக்களின் ஆரோக்கிய உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் வீட்டுத் தோட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.வீட்டு முற்றத்தில், புழக் கடையில், மாடியில் தோட்டம் அமைக்க வழிகாட்டி வருகிறார் ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி ஒய்.ராஜகுமார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ராஜகுமாரை ஒரு காலைப் பொழுதில் சந்தித்தோம்.“தூத்துக்குடி மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநராக பணியாற்றி ஒரு ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றேன். ஓய்வுக்கு பின்பு வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
மேலும் வாசிக்க »
Posted by நாஞ்சில் நண்பன் at 5:04 AM 1 comment:

Wednesday

ஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்: கால் கிலோ விதையில் நடவு நட்ட பெருமாளின் சாதனை

ஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்: கால் கிலோ விதையில் நடவு நட்ட பெருமாளின் சாதனை

வி. தேவதாசன்
ஆர். பெருமாள்

ஆர். பெருமாள்
ஒரு ஏக்கரில் நெல் நடவு செய்ய கால் கிலோ விதை நெல் மட்டும் பயன்படுத்தும் விவசாயி ஆர். பெருமாள் பற்றிய கட்டுரை கடந்த ஜூன் 25-ம் தேதி `நிலமும் வளமும்’ பகுதியில் வெளியானது. `தி இந்து’ தமிழ் நாளேட்டை தொடர்ந்து மேலும் சில பத்திரிகைகளில் கால் கிலோ விதை நெல்லை மட்டும் பயன்படுத்தும் பெருமாளின் சாகுபடி தொழில்நுட்பம் தொடர் பான செய்திகள் வெளிவந்தன.
மேலும் வாசிக்க »
Posted by நாஞ்சில் நண்பன் at 5:09 AM No comments:
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Search This Blog

வயலும் வாழ்வும்

  • அங்கக வேளாண்மை (2)
  • அன்னாசி சாகுபடி (1)
  • இயற்கை உரம் (9)
  • இயற்கை மருந்துகள் (2)
  • இயற்கை விவசாயம் (27)
  • இயற்கை வேளாண்மை (10)
  • இஸ்ரேல் விவசாயம் (4)
  • எலுமிச்சை (2)
  • எலுமிச்சை சாகுபடி (1)
  • ஒருங்கிணைந்தப் பண்ணை (11)
  • கத்திரி (3)
  • கருடன் சம்பா (1)
  • கரும்பு (1)
  • கரும்பு சாகுபடி (1)
  • காய்கறி (4)
  • காய்கறித் தோட்டம் (9)
  • காலா நமக் (1)
  • கால்நடை தீவனம் (2)
  • காளான் வளர்ப்பு (6)
  • கீரை சாகுபடி (2)
  • கொடி அவரை (1)
  • கொத்தமல்லி சாகுபடி (1)
  • கொய்யா (2)
  • கோகோ சாகுபடி (1)
  • சந்தனம் (1)
  • சப்போட்டா சாகுபடி (2)
  • சம்பங்கி சாகுபடி (5)
  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு (1)
  • சாண எரிவாயு (1)
  • சிவப்புக் கவுணி (1)
  • சுரைக்காய் (1)
  • சேனை (1)
  • சொட்டுநீர்ப் பாசனம் (18)
  • சோளம் (1)
  • தட்டைப்பயறு (1)
  • துவரை (1)
  • தென்னை (5)
  • தெளிப்புநீர்ப் பாசனம் (4)
  • நாற்றுப் பண்ணை (2)
  • நாவல் (1)
  • நிலக்கடலை (2)
  • நெல் சாகுபடி (5)
  • நெல்லி (3)
  • நெல்லி சாகுபடி (1)
  • பந்தல் விவசாயம் (2)
  • பப்பாளி (1)
  • பருத்தி (1)
  • பாகற்காய் (1)
  • பாக்கு சாகுபடி (2)
  • பீன்ஸ் (1)
  • புடலை சாகுபடி (3)
  • புதினா சாகுபடி (1)
  • மக்காச்சோளம் சாகுபடி (1)
  • மஞ்சள் (2)
  • மண்புழு இரகங்கள் (2)
  • மண்புழு உரம் (2)
  • மண்புழு உரம் தயாரிப்பு (15)
  • மரங்கள் (1)
  • மரத் தோட்டம் (1)
  • மரபணு மாற்றம் (2)
  • மரம் வளர்ப்பு (6)
  • மரவள்ளி சாகுபடி (1)
  • மலைவேம்பு (1)
  • மல்பெரி (2)
  • மல்லிகை சாகுபடி (5)
  • மா சாகுடி (1)
  • மிளகாய் (3)
  • முருங்கை (3)
  • முள்ளங்கி (1)
  • மூலிகை சாகுபடி (1)
  • மூலிகைத் தோட்டம் (1)
  • மொட்டைமாடி காய்கறித் தோட்டம் (9)
  • ரோஜா (1)
  • வரகு (1)
  • வாடன் சம்பா (1)
  • வாழை (10)
  • வாழை சாகுபடி (2)
  • வீட்டுத்தோட்டம் (14)
  • வெங்காயம் (1)
  • வெண்டை சாகுபடி (1)
  • வெண்தேக்கு (1)
  • வெள்ளரி (2)
  • வேம்பு (2)
  • வேலிப்பருத்தி (1)
  • வேளாண்மை உத்திகள் (3)
  • ஸ்பைருலினா சுருள்பாசி (1)

தொழில் முறைகள்!

  • ஆடு வளர்ப்பு (19)
  • ஒருங்கிணைந்தப் பண்ணை (11)
  • காடை வளர்ப்பு (3)
  • கால்நடை தீவனம் (2)
  • கால்நடை வளர்ப்பு (17)
  • கோழி வளர்ப்பு (3)
  • தேனீ வளர்ப்பு (3)
  • நாட்டுக் கோழி வளர்ப்பு (3)
  • பால் பண்ணை (1)
  • மீன் வளர்ப்பு (16)
  • முயல் வளர்ப்பு (4)
  • வான்கோழி வளர்ப்பு (3)
  • வேளாண்மை உத்திகள் (3)

Blog Archive

  • ►  2015 (28)
    • ►  September (3)
    • ►  April (3)
    • ►  March (11)
    • ►  February (3)
    • ►  January (8)
  • ▼  2014 (101)
    • ►  December (6)
    • ►  November (3)
    • ▼  October (4)
      • இயற்கை முறையில் தென்னை சாகுபடி: லட்சங்களைக் குவிக்...
      • இயற்கை வழியில் மலர் சாகுபடி: பெரம்பலூர் விவசாயி ஆற...
      • ஆரோக்கிய அறுவடைக்கு வழி காட்டும் வீட்டுத் தோட்டம்
      • ஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்: கால் கிலோ ...
    • ►  September (11)
    • ►  August (11)
    • ►  July (11)
    • ►  June (5)
    • ►  May (3)
    • ►  April (10)
    • ►  March (13)
    • ►  February (13)
    • ►  January (11)
  • ►  2013 (58)
    • ►  December (5)
    • ►  November (3)
    • ►  October (5)
    • ►  September (9)
    • ►  August (6)
    • ►  July (2)
    • ►  June (4)
    • ►  May (5)
    • ►  April (4)
    • ►  March (6)
    • ►  February (5)
    • ►  January (4)
  • ►  2012 (47)
    • ►  December (2)
    • ►  November (10)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (3)
    • ►  July (2)
    • ►  June (7)
    • ►  May (1)
    • ►  April (5)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (6)
  • ►  2011 (27)
    • ►  December (4)
    • ►  November (2)
    • ►  October (2)
    • ►  September (2)
    • ►  August (3)
    • ►  July (2)
    • ►  June (2)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (25)
    • ►  December (6)
    • ►  November (4)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  January (3)
  • ►  2009 (4)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  April (1)
    • ►  March (1)
  • ►  2008 (5)
    • ►  November (1)
    • ►  September (1)
    • ►  June (1)
    • ►  April (2)
  • ►  2007 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (1)

ALL POSTS

  • வேம்பு... தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்!
  • காடை வளர்ப்பு
  • கோழி வளர்ப்பு
  • தென்னைக்கு நீர் மேலாண்மை
  • வாழையில் மகசூல் கூட்டும் ஊட்டமேற்றிய தொழுவுரம்
  • தினசரி வருமானத்துக்கு 'நாட்டு’ எலுமிச்சை...
  • ஒருங்கிணைந்த பண்ணைய முறையே வளங்குன்றா வேளாண்மைக்கு உதவும்
  • மண்புழு என்ற ஆத்ம நண்பன்
  • மயிர் கூச்செறியும் புத்திசாலித்தனம் (இஸ்ரேல் விவசாயம்)
  • ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் மொட்டைமாடி காய்கறி தோட்டம்

Popular Posts

  • ஒருங்கிணைந்த பண்ணைய முறையே வளங்குன்றா வேளாண்மைக்கு உதவும்
    தோட்டக்கலைப்பயிர் சாகுபடியுடன் ஒருங்கிணைந்த பண்ணைய உத்தி தான் லாபம் தரும். இதற்கு தோட்டக்கலைப்பயிர் சாகுபடியுடன் உப தொழில்களாக மண்புழு வளர்...
  • தென்னைக்கு நீர் மேலாண்மை
    இன்று தமிழ்நாட்டில் தென்னை மகசூல் குறைந்து வருகிறது. விவசாயிகள் தென்னை மரங்களை சரிவர பராமரிப்பதில்லை. பலர் சரிவர உரம் போடாமல் , மரங்களை ப...
  • வேம்பு... தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்!
    வேம்பு... தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்! யோசனை  பொதுவாக மரம் வளர்ப்புக்கு மாறும் விவசாயிகள்... மரவேலைப்பாடுகளுக்குப்...
  • காடை வளர்ப்பு
      காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்...
  • மண்புழு என்ற ஆத்ம நண்பன்
    "பிரபஞ்ச வரலாறை எழுத வேண்டுமெனில், அதில் பலவற்றின் முக்கிய பங்களிப்பைப் பற்றி எழுத வேண்டும். யாரை எழுத மறந்தாலும் ,மறுத்தாலும், மண்புழ...
  • கோழி வளர்ப்பு
    கோழி வளர்ப்பு பொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன. கூண்டு முறை / கொட்டகை முறை ஆழ்கூள முறை கொட்டகை மு...
  • தினசரி வருமானத்துக்கு 'நாட்டு’ எலுமிச்சை...
    தினசரி வருமானத்துக்கு 'நாட்டு’ எலுமிச்சை... புளியங்குடி விவசாயிகளின் பலே பணப்பயிர்! திருநெல்வேலிக்கு அல்வா என்றால், புளியங்குடிக்...
  • ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் மொட்டைமாடி காய்கறி தோட்டம்
    ஏக்கர் கணக்கில் நிலம் , பாசனத்துக்குக் கிணறு , கால்நடைகள் ... என இருந்தால் மட்டும்தான் , விவசாயம் சாத்தியம் ’ என்றுதான் பலரும் ...
  • புத்தர் சாப்பிட்ட ‘காலா நமக்’ பாரம்பரிய அரிசி: ராமநாதபுரத்தில் சாகுபடி செய்யும் விவசாயி
    புத்தர் சாப்பிட்ட ‘ காலா நமக் ’ பாரம்பரிய நெல்லை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சாகுபடி செய்து வருகிறார். பாரம்பரிய நெ...
  • செடி வளர்ப்பில் செல்வம் கொழிக்குது
    அழகு , பயன் தரும் செடிகளை வளர்க்க அனைவரும் விரும்புகிறார்கள். வீடு , நிறுவனங்களில் இவை முக்கிய இடம் பிடிப்பதால் செடிகளுக்கு நல்ல கிராக்கி ...

Unordered List

Recent Post

Contact

Definition List

Powered by Blogger.