இயற்கை வரம்

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? - மாற்கு 8:36

Pages

  • Home
  • விவசாயம்
  • மூலிகை மருத்துவம்
  • கால்நடை வளர்ப்பு

Thursday

இயற்கை வழியில் மலர் சாகுபடி: பெரம்பலூர் விவசாயி ஆறுமுகம் சாதனை

 இயற்கை வழியில் மலர் சாகுபடி: பெரம்பலூர் விவசாயி ஆறுமுகம் சாதனை
 தனது சம்பங்கி தோட்டத்தில் விவசாயி ஆறுமுகம்
தனது சம்பங்கி தோட்டத்தில் விவசாயி ஆறுமுகம்

இயற்கை வேளாண்மை என்றாலே உணவுப் பயிர்கள்தான் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறார் பெரம்பலூர் ஆறுமுகம். அவர் ஈடுபடிருப்பது அங்கக மலர் சாகுபடியில்.
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி இவையற்ற இயற்கை வேளாண்மையில் விளைந்த தானியம், காய் கனிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது கண்கூடு. ஆனால் மலர் சாகு படிக்கு ஆறுமுகம் இயற்கை வேளாண் மையை நாடியதிலிருந்து வேளாண் ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
பெரம்பலூரை அடுத்த எளம் பலூரில் மலர்ச்சியோடு சம்பங்கி வயலில் மலர்களை கொய்து கொண்டிருந்தார் ஆறுமுகம், “உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது என்பதால் இயற்கை வேளாண்மையில் உணவு பயிர்களை சாகுபடி செய்வதில் அர்த்தமுண்டு. ஆனால், மலர் சாகுபடியில் அதுபோன்ற அவசியம் எதுவும் இல்லையே என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள்.
ஆனால் எனது வெற்றிகரமான அனுபவம் சொல்வதெல்லாம் எந்தவொரு சாகுபடி என்றாலும் அது இயற்கை வழிவந்தால் மட்டுமே உழவனுக்கும் நுகர்வோ ருக்கும் உண்மையான பலனைத் தர முடியும் என்பதுதான்.
இதே சம்பங்கி மலர் சாகுபடியில் ஈடுபடும் ரசாயனங்களைப் பயன்படுத்தும் ஒரு விவசாயி ரூ1000 செலவழித்தால் ரூ. 1100 மட்டுமே கிடைக்கும். ஆனால், நான் மாதம் 4 கிலோ வெல்லம், சிறுதானிய மாவு தவிர்த்து, உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாக செலுத்தும் எனக்கு ரூ.500 லாபமாகவே கிடைக்கிறது” என்கிறார் ஆறுமுகம்.
அவர் மேலும் கூறும்போது, “2 சால் உழவோட்டி, சாம்பல் சத்து, தொழு உரம் ஆகியவற்றை ஏக்கருக்கு 8 யூனிட் அடித்தேன். பின்னர் புழுதி உழவோட்டி, கரை பிடித்ததும் மேட்டுப்பாத்தி அமைத்து அதில் சம்பங்கி கிழங்கு நட்டேன். இணை சாகுபடியாக உளுந்து, பாசிப்பயறு, கொத்துக்கடலை நடலாம். ஏனெனில் சம்பங்கி பூ காண 4 மாதமாகும் என்பதால் அதுவரை 3 மாதங்களுக்கு இந்த ஊடு பயிர்கள் கைகொடுக்கும். இவை இருக்கும்போது உயிர் மூடாக்காவும் பயன்படும்.
உளுந்து செடிகளை பிடுங்கி வயலிலேயே போடுவதன் மூலம் சிதைந்த மூடாக்காகவும் பலன் கொடுக்கும். களையை கட்டுப் படுத்த, மண்ணின் ஈரப்பதத்தை தேக்க, நுண்ணுயிர் பெருக்க, மொத்தத்தில் மண் உயிர்ப்போடு இருக்க இந்த மூடாக்குகள் உதவும்.
5 முதல் 12 மாதங்கள் வரை ஏக்கருக்கு தினசரி ஒன்றிரண்டு கிலோவாக மலர் மகசூல் கிடைக்கும். 18 மாதங்களுக்குப் பிறகு 25 கிலோ வரை மகசூல் உயரும். உள்ளூர் மலர் சந்தையில் சராசரியாக கிலோ சம்பங்கிக்கு ரூ. 40 கிடைக்கிறது. மலர் மாலை வியாபாரம் சுத்தமாக படுத்துக்கொண்டாலும் கூட, வாசனை திரவிய தொழிற் சாலைகளுக்கு அப்படியே அனுப்பி விடலாம் என்பதால் சம்பங்கி மலர் சாகுபடியில் வருமான இழப்புக்கு இடமில்லை.
வேர் வழி உணவூட்டமாக சாணம், கோமியம், வெல்லம், சிறுதானிய மாவு உள்ளடக்கிய ஜீவாமிர்த கரைசலை நானே தயாரித்து பாசன நீரில் கலந்து விடுவேன். அதே போல இலைவழி உணவூட்டமாக பஞ்சகவ்யம் தயாரித்து தருகிறேன்.
இதே சம்பங்கி சாகுபடியை ரசாயன வழியில் மேற்கொள்ளும் சக விவசாயிகளின் நிலத்தையும் கவனித்து வருகிறேன். இயற்கை வேளாண்மை வறட்சிக்கு ஈடுகொடுக்கும் என்பதால் அவர்களை போல தாராள பாசன நெருக்கடியில்லை. பூக்களை மார்க்கெட்டில் விற்ற கையோடு அந்த காசுக்கு உரம் பூச்சிக்கொல்லி வாங்கவே அவர்களுக்கு சரியாக இருக்கும்.
என்னுடைய வருமானமோ முழுதாக வீடு திரும்பும். உரம் பூச்சிக்கொல்லி பயன்படுத் தாததால் சம்பங்கி தட்டைகளை கால்நடை வளர்ப்போர் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்” என்று மலர்ச்சியாக பேசும் ஆறுமுகம், இயற்கை வேளாண் ஆர்வலர் களுடன் இணைந்து ஏராளமான இளம் விவசாய ஆர்வலர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
தொடர்புக்கு: 98650 95097
Source:tamilhindu
Posted by நாஞ்சில் நண்பன் at 4:45 AM

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Search This Blog

வயலும் வாழ்வும்

  • அங்கக வேளாண்மை (2)
  • அன்னாசி சாகுபடி (1)
  • இயற்கை உரம் (9)
  • இயற்கை மருந்துகள் (2)
  • இயற்கை விவசாயம் (27)
  • இயற்கை வேளாண்மை (10)
  • இஸ்ரேல் விவசாயம் (4)
  • எலுமிச்சை (2)
  • எலுமிச்சை சாகுபடி (1)
  • ஒருங்கிணைந்தப் பண்ணை (11)
  • கத்திரி (3)
  • கருடன் சம்பா (1)
  • கரும்பு (1)
  • கரும்பு சாகுபடி (1)
  • காய்கறி (4)
  • காய்கறித் தோட்டம் (9)
  • காலா நமக் (1)
  • கால்நடை தீவனம் (2)
  • காளான் வளர்ப்பு (6)
  • கீரை சாகுபடி (2)
  • கொடி அவரை (1)
  • கொத்தமல்லி சாகுபடி (1)
  • கொய்யா (2)
  • கோகோ சாகுபடி (1)
  • சந்தனம் (1)
  • சப்போட்டா சாகுபடி (2)
  • சம்பங்கி சாகுபடி (5)
  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு (1)
  • சாண எரிவாயு (1)
  • சிவப்புக் கவுணி (1)
  • சுரைக்காய் (1)
  • சேனை (1)
  • சொட்டுநீர்ப் பாசனம் (18)
  • சோளம் (1)
  • தட்டைப்பயறு (1)
  • துவரை (1)
  • தென்னை (5)
  • தெளிப்புநீர்ப் பாசனம் (4)
  • நாற்றுப் பண்ணை (2)
  • நாவல் (1)
  • நிலக்கடலை (2)
  • நெல் சாகுபடி (5)
  • நெல்லி (3)
  • நெல்லி சாகுபடி (1)
  • பந்தல் விவசாயம் (2)
  • பப்பாளி (1)
  • பருத்தி (1)
  • பாகற்காய் (1)
  • பாக்கு சாகுபடி (2)
  • பீன்ஸ் (1)
  • புடலை சாகுபடி (3)
  • புதினா சாகுபடி (1)
  • மக்காச்சோளம் சாகுபடி (1)
  • மஞ்சள் (2)
  • மண்புழு இரகங்கள் (2)
  • மண்புழு உரம் (2)
  • மண்புழு உரம் தயாரிப்பு (15)
  • மரங்கள் (1)
  • மரத் தோட்டம் (1)
  • மரபணு மாற்றம் (2)
  • மரம் வளர்ப்பு (6)
  • மரவள்ளி சாகுபடி (1)
  • மலைவேம்பு (1)
  • மல்பெரி (2)
  • மல்லிகை சாகுபடி (5)
  • மா சாகுடி (1)
  • மிளகாய் (3)
  • முருங்கை (3)
  • முள்ளங்கி (1)
  • மூலிகை சாகுபடி (1)
  • மூலிகைத் தோட்டம் (1)
  • மொட்டைமாடி காய்கறித் தோட்டம் (9)
  • ரோஜா (1)
  • வரகு (1)
  • வாடன் சம்பா (1)
  • வாழை (10)
  • வாழை சாகுபடி (2)
  • வீட்டுத்தோட்டம் (14)
  • வெங்காயம் (1)
  • வெண்டை சாகுபடி (1)
  • வெண்தேக்கு (1)
  • வெள்ளரி (2)
  • வேம்பு (2)
  • வேலிப்பருத்தி (1)
  • வேளாண்மை உத்திகள் (3)
  • ஸ்பைருலினா சுருள்பாசி (1)

தொழில் முறைகள்!

  • ஆடு வளர்ப்பு (19)
  • ஒருங்கிணைந்தப் பண்ணை (11)
  • காடை வளர்ப்பு (3)
  • கால்நடை தீவனம் (2)
  • கால்நடை வளர்ப்பு (17)
  • கோழி வளர்ப்பு (3)
  • தேனீ வளர்ப்பு (3)
  • நாட்டுக் கோழி வளர்ப்பு (3)
  • பால் பண்ணை (1)
  • மீன் வளர்ப்பு (16)
  • முயல் வளர்ப்பு (4)
  • வான்கோழி வளர்ப்பு (3)
  • வேளாண்மை உத்திகள் (3)

Blog Archive

  • ►  2015 (28)
    • ►  September (3)
    • ►  April (3)
    • ►  March (11)
    • ►  February (3)
    • ►  January (8)
  • ▼  2014 (101)
    • ►  December (6)
    • ►  November (3)
    • ▼  October (4)
      • இயற்கை முறையில் தென்னை சாகுபடி: லட்சங்களைக் குவிக்...
      • இயற்கை வழியில் மலர் சாகுபடி: பெரம்பலூர் விவசாயி ஆற...
      • ஆரோக்கிய அறுவடைக்கு வழி காட்டும் வீட்டுத் தோட்டம்
      • ஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்: கால் கிலோ ...
    • ►  September (11)
    • ►  August (11)
    • ►  July (11)
    • ►  June (5)
    • ►  May (3)
    • ►  April (10)
    • ►  March (13)
    • ►  February (13)
    • ►  January (11)
  • ►  2013 (58)
    • ►  December (5)
    • ►  November (3)
    • ►  October (5)
    • ►  September (9)
    • ►  August (6)
    • ►  July (2)
    • ►  June (4)
    • ►  May (5)
    • ►  April (4)
    • ►  March (6)
    • ►  February (5)
    • ►  January (4)
  • ►  2012 (47)
    • ►  December (2)
    • ►  November (10)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (3)
    • ►  July (2)
    • ►  June (7)
    • ►  May (1)
    • ►  April (5)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (6)
  • ►  2011 (27)
    • ►  December (4)
    • ►  November (2)
    • ►  October (2)
    • ►  September (2)
    • ►  August (3)
    • ►  July (2)
    • ►  June (2)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (25)
    • ►  December (6)
    • ►  November (4)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  January (3)
  • ►  2009 (4)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  April (1)
    • ►  March (1)
  • ►  2008 (5)
    • ►  November (1)
    • ►  September (1)
    • ►  June (1)
    • ►  April (2)
  • ►  2007 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (1)

ALL POSTS

  • வேம்பு... தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்!
  • காடை வளர்ப்பு
  • கோழி வளர்ப்பு
  • தென்னைக்கு நீர் மேலாண்மை
  • வாழையில் மகசூல் கூட்டும் ஊட்டமேற்றிய தொழுவுரம்
  • தினசரி வருமானத்துக்கு 'நாட்டு’ எலுமிச்சை...
  • ஒருங்கிணைந்த பண்ணைய முறையே வளங்குன்றா வேளாண்மைக்கு உதவும்
  • மண்புழு என்ற ஆத்ம நண்பன்
  • மயிர் கூச்செறியும் புத்திசாலித்தனம் (இஸ்ரேல் விவசாயம்)
  • ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் மொட்டைமாடி காய்கறி தோட்டம்

Popular Posts

  • ஒருங்கிணைந்த பண்ணைய முறையே வளங்குன்றா வேளாண்மைக்கு உதவும்
    தோட்டக்கலைப்பயிர் சாகுபடியுடன் ஒருங்கிணைந்த பண்ணைய உத்தி தான் லாபம் தரும். இதற்கு தோட்டக்கலைப்பயிர் சாகுபடியுடன் உப தொழில்களாக மண்புழு வளர்...
  • தென்னைக்கு நீர் மேலாண்மை
    இன்று தமிழ்நாட்டில் தென்னை மகசூல் குறைந்து வருகிறது. விவசாயிகள் தென்னை மரங்களை சரிவர பராமரிப்பதில்லை. பலர் சரிவர உரம் போடாமல் , மரங்களை ப...
  • வேம்பு... தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்!
    வேம்பு... தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்! யோசனை  பொதுவாக மரம் வளர்ப்புக்கு மாறும் விவசாயிகள்... மரவேலைப்பாடுகளுக்குப்...
  • மண்புழு என்ற ஆத்ம நண்பன்
    "பிரபஞ்ச வரலாறை எழுத வேண்டுமெனில், அதில் பலவற்றின் முக்கிய பங்களிப்பைப் பற்றி எழுத வேண்டும். யாரை எழுத மறந்தாலும் ,மறுத்தாலும், மண்புழ...
  • காடை வளர்ப்பு
      காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்...
  • கோழி வளர்ப்பு
    கோழி வளர்ப்பு பொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன. கூண்டு முறை / கொட்டகை முறை ஆழ்கூள முறை கொட்டகை மு...
  • ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் மொட்டைமாடி காய்கறி தோட்டம்
    ஏக்கர் கணக்கில் நிலம் , பாசனத்துக்குக் கிணறு , கால்நடைகள் ... என இருந்தால் மட்டும்தான் , விவசாயம் சாத்தியம் ’ என்றுதான் பலரும் ...
  • தினசரி வருமானத்துக்கு 'நாட்டு’ எலுமிச்சை...
    தினசரி வருமானத்துக்கு 'நாட்டு’ எலுமிச்சை... புளியங்குடி விவசாயிகளின் பலே பணப்பயிர்! திருநெல்வேலிக்கு அல்வா என்றால், புளியங்குடிக்...
  • அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு
    அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொல்வடை சொல்வார்கள். அதாவது மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால்,...
  • புத்தர் சாப்பிட்ட ‘காலா நமக்’ பாரம்பரிய அரிசி: ராமநாதபுரத்தில் சாகுபடி செய்யும் விவசாயி
    புத்தர் சாப்பிட்ட ‘ காலா நமக் ’ பாரம்பரிய நெல்லை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சாகுபடி செய்து வருகிறார். பாரம்பரிய நெ...

Unordered List

Recent Post

Contact

Definition List

Powered by Blogger.