Wednesday

உயிரியக்க ஆற்றல் பண்ணை


1. முகவுரை:
1924-ம் ஆண்டு ஜெர்மனியில், முனைவர் ரூடால்ப் ஸ்டெய்னர் வேளாண்மையைப் பற்றிய புதிய முறையை விவசாயிகளுக்கு பிரசங்கம் செய்யும் போது உயிர் சக்தி வாய்ந்த வேளாண்மை என்பது உலகுக்கு தெரியவந்தது. ரூடால்ப் ஸ்டெய்னர், ஆஸ்டிரிய தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி ஆவார். இவருடைய கருத்துக்கள் கிழக்கத்திய நாடுகளின் தத்துவம் முக்கியமாக புத்த மதம், இந்து மதம் மற்றும் வேதப் புத்தகங்கள் தாக்கத்தால் உருவானது. இந்த தாக்கங்கள் மற்றும் அவருடைய கருத்துக்களால் ஆந்தராபோஸாப்பி அல்லது மனித இனத்தினுடைய அறிவு என்பது உருவானது.

ஆந்திராபோஸாப்பி என்றால் மனித இனம், ஸோபியா என்றால் அறிவு.
ஆந்திராபோஸாப்பி என்பது ஆன்மீக நம்பிக்கையுடைய (புரூசா) மனித இனத்தின் அங்கீகரித்தல் ஆகும். ஐரோப்பாவில், இரசாயனப் பொருள் வேளாண்மையின் போது மண் வளத்தன்மை குறைதல், விளைபொருளின் தரம் குறைதல், விதை முளைப்புத் திறன் குறைதல் போன்றவை ஏற்பட்ட பொழுது, ஸ்டெய்னரின் உயிர் சக்தி வேளாண்மை பற்றிய பேச்சு விவசாயிகளுக்கு உதவியாக இருந்தது. பொதுவாக முக்கியத்துவம் குறைந்ததையும் விவசாயிகளுக்கு கவனித்தனர். பொதுவாக பூமியில் உள்ள எல்லா உயிர் வாழினங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பற்றியும் எடுத்துரைத்தார்.
பயோஸ் = உயிர்  டைனமிக் = சக்தி
புதிய அறிவியலைப் பற்றியும், ஆய்வுக் கூடங்களில் உள்ள உயிரற்ற பொருள்களினுடைய படிப்பு பற்றிய வேதிப் பொருள் வேளாண்மையும், இயற்கையாக உள்ள உயிரினங்கள் மற்றும் அதனிடையே உள்ள நிலையான மாற்றம் பற்றிய தொடர்பையும் விரிவாக விளக்கினார். நகர்ந்து கொண்டிருக்கக் கூடிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தைப் பற்றியும் விளக்கினார். தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனித இனத்தின் அசைவுகளின் விளைவு முற்காலத்தில் எப்படி இருந்தது என்பது பற்றியும் பேசினார். இயற்கையுடன் நமக்கிருக்கும் தொடர்பை அறிந்து கொண்டு எப்படி மனித இனம் இந்த காலத்தில் வாழ வேண்டும் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இது  துல்லியமாக இருக்க வேண்டும்.
பூமியில் உள்ள பிரபஞ்சத்தின் உடைய விளைவுகளை புரிந்து கொண்டு பதிவு செய்தல் பற்றி மக்கள் இன்றைய காலத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஜெர்மனியில் உள்ள மரியா துன், தோட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கான பயிர் சாகுபடி பட்டியலையும் வெளியிட்டது. ரூடால்ட் ஸ்டெய்னர் இயற்கை வழி மருந்துகளைப் பயன்படுத்தி சில தயாரிப்பு முறைகளை அறிமுகப்படுத்தினார். இதனால் பயிர் மற்றும் மண்ணின் மீது நன்மைத் தரக்கூடிய விளைவுகளை அதிகப்படுத்துகிறது மற்றும் சோதனைக்கு மக்களை உற்சாகப்படுத்துவதையும், புதிதாக ஒன்றை கண்டு பிடிப்பது பற்றியும் இதில் உள்ளது. உயிர் சக்தி என்பது அதிக சக்தி பண்பட்ட சக்தி மற்றும் தாவரங்கள், விலங்குகள், மனித இனத்தை எப்படி பாதிக்கிறது பற்றியதாகும்.
இந்த உயிர் சக்தியினுடைய அறிவு மற்றும் பணி மண்ணிற்கு சமநிலையும், குணப்படுத்தலையும் தருகிறது. தாவரங்களை உண்ணக்கூடிய ஒவ்வொரு உயிரியும் மற்றும் மண்ணில் வளரும் அனைத்திற்கும் இந்த உயிர்சக்தி தேவைப்படுகிறது.
உயிரியக்க ஆற்றல் பண்ணையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் முக்கிய விளைவுகள்:
  • உணவினுடைய முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
  • இயற்கை மூலங்களான மண் (மண்ணிலுள்ள அங்ககப்பொருளை தக்க வைப்பதால்), விதைகள் மற்றும் நீரை சீர்ப்படுத்துகிறது.
  • இயற்கைக்கும், உலகுக்கும் இடையேயான தொடர்பை நமக்கு ஏற்படுத்தித் தருகிறது மற்றும் இயற்கையுடன் இயைந்து வாழவும் கற்றுக் கொடுக்கிறது.
  • எங்கெல்லாம் தொடர்ந்த உபயோகத்தினால் பலவீனமாக உள்ளதோ அங்கு இயற்கையினால் பூமியையும் மனித இனத்தையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது.
வரலாறு:
வேளாண்மை என்பது மனித வாழ்வின் அடிப்படை. நாம் தினமும் உண்ணுவதற்கும், நம்முடைய உடம்பு, மனம், ஆவி, ஆத்மாவை நிலை நிறுத்தவும் உணவுப் பயிர்களை வளர்க்கிறோம். மனித இன வரலாறு முழுவதும், இசை, ஓவியம், பாட்டு மற்றும் இதர கலைகளுடன் இணைந்த பணியாகவே இருக்கிறது. ஆனால் கடந்த நூறு வருடங்கள் அல்லது சில நூற்றாண்டுகளில் வாழ்விற்கான ஆதாரத்தை நாம் இழந்து வருகிறோம். உலகப் போர்களின் போது விட்டுப்போன போர்க்கருவிகளுக்கான வேதிப்பொருட்களை பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்லுவதும் உரங்களாகப் பயன்படுத்தியும் வேதிப்பொருள் வேளாண்மை செய்யப்பட்டது. வேளாண் வேதிப் பொருட்களுக்கான ஆதாரங்கள் - பூமியில் இருந்து வரும் படிவ எரி பொருள். இது நிலையற்றது மற்றும் எங்கும் எளிதில் கிடைக்கக்கூடியது அல்ல.
1960 மற்றும் 1970ம் ஆண்டில் வந்த பசுமைப் புரட்சியின் போது அறிடுகப்படுத்தப்பட்ட கலப்பின விதைகள், வளர்ச்சி பருவம் வந்தவுடன் விதைகளை உற்பத்தி செய்ய இயலாமல் போகிறது. இதனால் விவசாயிகள் கலப்பின விதை நிறுவனங்களை சார்ந்து இருக்க நேரிடகிறது. இந்த கலப்பின விதைகள் அதிகளவு பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களின் தேவைகளால் பலவீனமான செடிகளை உற்பத்தி செய்யும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகள் (ஜி.எம்) (குறிப்பிட்ட பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி, மற்றும் உரங்களைப் பயன்படுத்துவது) மனித இனத்துக்கு மட்டுமல்லாமல், பூமியினுடைய ஆரோக்கியமான சரிநிகர் நிலைக்கும் ஊறு விளைவிக்குமாறு உள்ளது. மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகள் நிறைய பொருளாதாரப் பிண்ணனியுடன் பிணைந்துள்ளது. வளரும் நாடுகளில் இந்த விதைகளை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளுவதற்கு துரதிர்ஷ்டவசமாக விவாதங்கள் எழுந்துள்ளன.
இரசாயன உரங்களைப் பயன்படுத்தி வேளாண்மை செய்வதால் நம்முடைய ஆரோக்கியம், விவசாயிகளின் பொருளாதார நிலை, மண்ணின் முக்கியத்துவம் மற்றும் அனைத்து தாவர விலங்குகளின் ஆரோக்கியமான நிலை கெடுவதைப் பற்றிய விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மண் கடினமாகி விதை முளைப்பதற்கு இயலாமல் போகிறது. மேலும் மேலும் இரசாயன உரங்களைப் பயன்படுத்தி பயிரிடுவதால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் கடன் ஏற்படும் நிலை உருவாகிறது. புதிதாகத் தோன்றும் பூச்சி மற்றும் நோய்கள், இரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கு எதிர்ப்புச் சக்தியுடையதாக மாறுகிறது. புதிதாக நோய்கள் தோன்றுவதால் விலங்குகள் மற்றும் மனித இனம் பாதிக்கப்படுகிறது.
உலகம் பேரழிவை நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில் மக்களிடையே விழிப்புணர்வும் வந்து கொண்டிருக்கிறது. கடந்த பல நூறு வருடங்களில், உயிர் சக்தி வேளாண்மை முறை மிக மெதுவாக மக்களிடையே உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. விவசாயிகள் மற்றும் தோட்ட விவசாயிகளினுடைய உயர்சக்தி அமைப்புக்கள் மற்றும் சான்றளிப்பு குழுக்களால் வழங்கப்படும் டிமீட்டர் (Demeter) சான்றால் விளைந்த பொருட்களை விற்பனை செய்வது உத்திரவாதமாகிறது.
டிமீட்டர் = பூமியினுடைய கிரேக்கக் கடவுள்:
உயிர்சக்தி முறைகள் மண்ணிற்கு இயற்கைச் சக்தியுடன் கூடிய புது வாழ்வைத் தருகிறது. இந்தச் செயலால் மனித இனத்துடைய ஒருங்கிணைப்பு மற்றும் அறிவு மேம்படுகிறது. இந்த விழிப்புணர்வு நிலத்துக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு மற்றும் கண்காணிப்பை பொறுத்து இருக்கிறது.



2. அடிப்படை முறை மற்றும் நன்மைகள்:
ஒரு முறையை உருவாக்குவதற்கு தேவையான எல்லாக் காரணிகளும் வாழ்வைப் பேணுவதாக இருக்க வேண்டும். இந்தப் பகுதிகள் பின்வருமாறு:
சாரம் மற்றும் சக்தி:
பொருளுக்கும், சக்திக்கும் இடையேயான தொடர்பைப் பொறுத்துள்ளது. உதாரணமாக தாவரங்களுக்கு ஒளி, வெப்பம், நீர் வளருவதற்கு தேவைப்படுகிறது. சாரம் மற்றும் சக்திக்கும் இடையேயான தொடர்பு சரிசம நிலையை உருவாக்குகிறது. சாரம் மட்டுமல்லாமல் சக்தியை பயன்படுத்தி நாம் உயிர் வாழ்கிறோம். ஆகவே சக்தியை தரக்கூடிய உணவை உண்ணுவதற்கு உயிர் சக்தி நமக்கு தேவைப்படுகிறது. சரிநிலையில் உள்ள மண்ணில் வளரும் செடிகள் சக்தி மற்றும் சாரத்தைத் தருகிறது. (கனிமங்கள், நொதிகள், வளர்ச்சி ஊக்கிகள்).
மண்:
ஆரோக்கியமான திறனுடைய செடிகளை உருவாக்குவதற்கு, மண்ணினுடைய அமைப்பு மற்றும் வளத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்கள், நுண்ஊட்டச்சத்து, நுண்ணுயிரிகள், புழுக்கள் மற்றும் மண்ணில் உள்ள மற்ற உயிரினங்கள். ஆனால் மண் என்பது வாழும் முறையுடன் தொடர்பு மற்றும் உறவு முறையைக் கொண்டது. வாழ்வியல் சக்திகளினால் மண் சமநிலையில் இருந்தால் இதில் வளரக்கூடிய செடிகள் ஆரோக்கியமாகவும், தரமானதாகவும் இருக்கும். இரசாயனப் பொருட்கள் தேவையில்லை. மண் அமைப்பை பொறுத்தவரை மண் பொடியாக, பொறைப்புடன், காற்றோட்டமாக வளமானதாக இருக்க வேண்டும்.
அங்ககப் பொருள்:
சமநிலையில் உள்ள மண்ணை உருவாக்குவதற்கு அங்ககப் பொருளின் உடைய பயன்பாடு திறனுள்ளதாக இருக்க வேண்டும். மட்கிய உரக்குவியல் மூலமும் உயிர்சத்து மக்கிய உர தயாரிப்பு முறைகளின் மூலம் இதைச் செய்யலாம்.
தாவர மக்கு:
தாவர மக்கு செடிகள் வளர்வதற்கு தேவையானவற்றை கடத்துவதற்கும் வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகிறது. மண் வளத்தை நிலையான வழியில் வைத்து, நீரைப் பிடித்து வைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது. கடினமான அங்ககப் பொருளை முழுவதுமாக மட்க செய்வது தாவரமக்கு ஆகும். இது அதிக ஊட்டச்சத்துடன் அடர் நிறத்தில் புதுவித வாசனையுடன் ஈரப்பதமாக இருக்கும். இது தான் மண் உருவாவதற்கான அடிப்படையாக உயிர் சக்தி வேளாண்மையாக மாறும்போது இருக்க வேண்டும்.
சாண எரு:
மாடுகளின் சாணத்தால் வழங்கப்படும் உரம் மண்ணின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. மாட்டின் நீளமான செறித்தல் முறையினால் சேர்க்கப்படும் நுண்ணுயிரிகளால் இந்த மாட்டுச் சாணம் மிகவும் சிறந்தது ஆகும். உரக் குவியலை உருவாக்குவதற்கு கிளப்பியாக பயன்படுத்தப்படுகிறது. தழைச்சத்தின் அளவுக்காகவும் உயிர் சத்து தயாரிப்பு முறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
விண்வெளி சக்திகள்:
இந்த தயாரிப்பு முறையைப் பயன்படுத்துவதால் பயிர் வளர்ச்சியின் மீதான விண்வெளிக் கதிர்கள் விளைவுகள் ஏற்படுத்தும்.
உயிர்சத்து தயாரிப்பு முறைகள்:
இந்த முறை எளிதாக, இயற்கையான, ஹோமியோபதி தயாரிப்பு முறைகளைப் பயன்படுத்துவதால் கிரகங்களுடைய விளைவை அதிகப்படுத்துகிறது. மண் மற்றும் பயிரில் உள்ள சிலிக்கா மற்றும் சுண்ணாம்பினால் ஏற்படும் விளைவை அதிகப்படுத்துகிறது. சிதைக்கும் முறை மற்றும் உரக்குவியலில் உள்ள உயிர்சக்தியை அதிகப்படுத்துவதாலும் இது பயன்படுத்தப்படுகிறது. முனைவர் ஸ்டெய்னர் 2 விதமான தயாரிப்பு முறைகளை மண்ணில் நேரிடையாகவும் அல்லது செடிகளில் (500 மற்றும் 501 எண்ணிட்ட) தெளிப்பதன் மூலமும் மட்கிய உரத்தை செய்யும் போது (502 மற்றும் 507 எண்ணிட்ட) பயன்படுத்தப்பட்ட ஆறு தயாரிப்பு முறைகளை வழங்கியுள்ளார்.
பயிர் சுழற்சி முறை:
பயிர் சுழற்சி, முறையான மண்ணில் சாகுபடி மற்றும் இதர அங்கக வேளாண்மை முறைகள்:
பயிர்களுக்கு அதிகமான ஊட்டச்சத்து அளித்த பின்னர் (உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைக்கோஸ்) மண்ணை எந்த விதத்திற்கும் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருக்க முறையாக திட்டமிடல் வேண்டும். பசுந்தாள் உரம் பயிர்களை விதைப்பதால் (பருப்பு வகைகள், கிராம்பு) நிலப் போர்வை (புல், கிராம்பு செய்வதன் மூலம் தாவர மக்கு மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகப்படுத்தலாம். ஈரப்பாதுகாப்பு செய்வதால் மண் அமைப்பை மேம்படுத்தலாம். மண்ணில் நீர் மற்றும் வெப்ப நிலையை சமநிலைக்குக் கொண்டு வரலாம். களைகளைக் கட்டுப்படுத்தலாம். துணைப் பயிரிடுவதால் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். மூலிகை தேயிலையை தெளிப்பது, பழ மரங்களுக்கு சிறந்த மரப்பூச்சு, உயர்வான படுக்கையை உருவாக்குதல், மண்ணை மேலோட்டமாக தோண்டுதல் / உழுவது மற்றும் ஈரமாக இருக்கும் போது, குறிப்பாக களிமண் நிலத்தில் தேவையில்லாமல் வேலைசெய்வதோ அல்லது உள்ளே போவதைத் தவிர்த்தல்.
சாம்பல் அடித்தல்:
அளவற்ற பூச்சித் தொல்லை, விலங்கு பூச்சிகள், களைப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, முதலில் பூச்சிகள், களை விதைகள், அல்லது இறந்த விலங்குகளின் தோலை சேகரித்து எரிக்க வேண்டும். பின் இந்த சாம்பலை நீரில் கரைத்து மூலிகை மருந்தாக நிலத்தின் மீது தெளிக்க வேண்டும். இது இரசாயன மருந்து தெளிப்புக்கு ஒரு மாற்றமாகும்.
பண்ணை உயிரி:
தன்னிறைவு உள்ள பண்ணையாக இருக்க வேண்டுமானால் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உரம், பூச்சிக்கொல்லியை தெளிப்பதன் மூலம் மண்ணின் ஊட்டச்சத்தின் அளவை சமப்படுத்தலாம். மண் அரிப்பைத் தடுக்க மரங்கள் மற்றும் வேலிப் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் காற்றிலிருந்து ஏற்படும் இழப்பைத் தவிர்க்கலாம். இந்த மாதிரி மண் அமைப்பை சரி செய்வதற்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வேண்டும்.
களைகள், பூச்சிகள் மற்றும் நோய்கள்:
மண்ணில் குறைபாடு உள்ள போது களைகள் வளர்வதும், முறையான சாகுபடி முறையை கடைபிடிக்காததால் பூச்சித் தொல்லை மற்றும் நோய் தொல்லை ஏற்படும். இதற்காக முதலில் நிலத்தை சமநிலையில் அனைத்து ஊட்டச்சத்துடன் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
செயல்முறை அளிப்பு:
  • தினமும் நிலத்தை சுற்றிப் பார்க்க வேண்டும். அப்பொழுது தான் நிலத்தில் உள்ள தாதுக்கள், பாறைகள், மண் வகைகள், களை வகைகள், பூச்சி வகைகள், பகலிலும் இரவிலும் நடமாடும் விலங்குகள், நிலத்தில் உள்ள மின் கம்பிகள், நிலத்தடியில் உள்ள நீரோடைகள், நீர் ஆதாரம், காலநிலை, மக்கள் வாழுமிடம் அல்லது நிலத்தைப் பயன்படுத்துதல் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
  • சுற்றுப்புறச்சூழல் கட்டுப்பாடு: வேலிப்பயிர்கள் மற்றும் மரங்களைப் பயிரிடுவதால் காற்றினால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம். நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும். நீரின் தரத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
  • மண் அரிப்பைக் கட்டுப்படுத்த பயிர் சுழற்சியும், மூடுப்பயிர்களை பயிரிட வேண்டும்.
  • சாகுபடி முறைகளை மேம்படுத்த வேண்டும்.
  • பசுந்தாள் உரத்தை அளிக்க வேண்டும்.
  • ஈரப்பதமாக்குதலை முறையாக செய்ய வேண்டும்.
  • மட்கிய உரக்குவியலை பயன்படுத்த வேண்டும்.
  • உயிர் சக்தி தயாரிப்புகளான 500, 501ஐ தேவையான போது பயன்படுத்த வேண்டும்.
  • மற்ற தயாரிப்புக்களான சாண எரு, பஞ்சகாவ்யா, இயற்கை நீர்மை உரங்களான (தேயிலை, நொதிக்க வைத்த பூனைக் காஞ்சொறி செடி வகையின் உரம்) அளிக்க வேண்டும்.
நன்மைகள்:
  • நல்ல தரமான பழங்கள் மற்றும் காய்கறிகளை நல்ல சுவை அதிகளவிலான ஊட்டச் சத்துக்கள் (புரோட்டீன், விட்டமின்கள்) உடன் உற்பத்தி செய்ய முடியும்.
  • அங்கக வேளாண்மையில் விளைச்சல் எப்பொழுதும் சராசரி அளவை விட அதிகமாக இருக்கும். ஆனால் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் மண் அமிலத் தன்மையுடையதாகவும் பூச்சிகளின் தொல்லையும் அதிகமாகி பிரச்சனையை ஏற்படுத்தும்.
  • கால்நடை மற்றும் பயிர் நோய்களால் குறைந்த அளவுத் தொல்லையே இருக்கும்.
  • உயிர் சக்தி வேளாண்மையால் பூச்சிகளால் சேதமிருக்காது மற்றும் பொருளாதார சேதமும் அதிகளவில் இருக்காது. பூச்சித் தொல்லையைக் கட்டுப்படுத்த மரங்கள் மற்றும் புதர்ச்செடிகளை நிலத்தைச் சுற்றி வளர்க்கலாம்.
பண்ணையை உயிர்ச்சக்தி நிலமாக மாற்றுதல்:
பண்ணையின் வளத்தை தொடர்ந்து பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். முக்கியமான வழிமுறைகள் பின்வருமாறு:
  • தண்ணீரில் கரையக்கூடிய உரங்களை வேகமான வளர்ச்சிக்காக பயன்படுத்தக்கூடாது. இதனால் மண் அமைப்பு பாதிக்காது. ஆனால் பயிர்களில் சமமற்ற ஊட்டச்சத்து இருக்கும்.
  • இரசாயனங்களைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தும் முறைகளை நிறுத்த வேண்டும்.
  • பண்ணையில் வளர்க்கப்படும் தண்டு துண்டுகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பயிறு வகை வளர்ச்சி, மண்புழு மற்ற மண் நுண்ணுயிரிகளின் செயலை ஊக்குவிக்க வேண்டும். இதனால் தாதுப்பொருள்கள் தேவையான அளவு கிடைக்கும் மற்றும் தாவர மக்கு உற்பத்தி ஆவதற்கும் உதவுகிறது
  • போதுமான அளவு மரங்களை வளர்ப்பதால், மண்ணில் ஈரப்பதம், காற்றிலிருந்து பயிருக்கு பாதுகாப்பு, கொன்றுண்ணியாகவும் செயல்படும்.



3. உயிராற்றல் விவசாய பஞ்சாங்கம்:
இந்த நாட்குறிப்பு உயிராற்றல் வேளாண்மை (BIO DYNAMIC FARMING) வழிமுறைகளில் ஒரு குறிப்பிட்டு கூறக் கூடிய அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள விபரங்கள்  ஒவ்வொன்றிலும் அதாவது அந்த குறிப்பிட்டுள்ள நாட்களில் விவசாய வேலைகள் என்ன செய்தால் நமக்கு ஆரோக்கியமான தாவரங்கள் வளர்ந்து அதிக விளைச்சலையும், தரமான மற்றும் சுவை கூடிய விளைச்சலையும் பெறலாம் என அறிந்து கொள்ள உதவும். அவ்வாறு ஒவ்வொரு நாளும் நமது சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள், மற்றும் இராசிகள் அவற்றின் அடிப்படை சுற்றுப்பாதையில், குறிப்பாக சந்திரனின் சுற்றுப்பாதையில், ஏற்படும் நிகழ்வுகளை கணித்து அதனால் தாவரங்களிலும் மற்றும் மண்ணிலும் ஏற்படும் மாறுதல்களை  கணக்கிட்டு அதற்க்கேற்றவாறு நாம் செய்ய வேண்டிய வேலைகளை பிரித்து கூறப்பட்டுள்ளது.
இந்த நாட்குறிப்பால் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் 
1. மேல்நோக்கு நாட்கள்
2. கீழ்நோக்கு நாட்கள்
3. தவிர்க்க வேண்டிய நாள்
4. அபோஜி (தொலைவு நிலா)
5. பெரிஜி (அண்மை நிலா)
6. அமாவாசை
7. பெளர்ணமி
8. சந்திரன் எதிர் சனி
9. இராசி மண்டலத்தில் சந்திரன் பயணம் செய்யும் நாட்கள்

1. மேல் நோக்கு நாட்கள் 
இந்த நாட்களில் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் தொடர்ந்து 13.6 நாட்கள் (சுமாராக) அதிகரித்துக் கொண்டிருக்கும். இந்த நாட்களில் தாவரங்களில் மண்ணிற்கு மேலுள்ள பகுதிகள் வளாச்சிவேகம் அதிகரிக்கின்றது. ஆகவே இந்த நாட்களில் 1.விதைகளை நேரடியாக நடவு செய்தல் மக்காச்சோளம், வெண்டை, பீட்ரூட், பூசணி, நெல்நேரடி விதைப்பு, போன்ற விதை நடவு வேலைகள். 2. நாற்றுகளுக்காக விதைத் தெளிப்பு கத்தரி, தக்காளி, நெல் மற்றும் மரங்களின் விதைகள் தேங்காய் போன்றவை 3. இலை வழி ஊட்டமாக உரங்களை நீரில் கரைத்து தெளித்தல். 4.பஞ்ச கவ்யம் தெளிக்க 5.B.D.501 (கொம்பு சிலிக்கா) தெளித்தல் (காலை 10.00 மணிக்குள்)

2. கீழ் நோக்கு நாட்கள் 
சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 13.6 நாட்கள் (சுமாராக) தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் எனப்படுகின்றது. இந்த நாட்களில் தாவரங்களில் மண்ணிற்குள் உள்ள பகுதிகள் வளா்ச்சி அதிகரிக்கின்றது மண்ணில் நுண்ணுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கின்றது. ஆகவே இந்த நாட்களில்
1. நாற்றுகள் மாற்றி நடவு செய்தல்
2. மரவள்ளி குச்சிகள், கரும்பு கரணைகள் க்ளைரிசிடியா போன்ற குச்சிகளை நடவு செய்தல் பதியன்கள் போடுதல் போன்ற வேலைகள்
3. கம்போஸ்ட் தயாரிப்பு
4. கம்போஸ்ட் மற்றும் திரவ உரங்களை நிலத்தில் இட
5. B.D.500 (கொம்பு சாண உரம் ) + CPP (சாண  மூலிகை உரம்) நீரில் கரைத்து நிலத்தில் தெளிக்க (மாலை 3.00 மணிக்கு மேல்)
6. உழவு செய்தல் போன்ற வேலைகள்.

3. தவிர்க்க வேண்டிய நாட்கள்
(தவிர்க்கவும் நேரத்திலிருந்து 6 மணி நேரம் முன்னும் பின்னும் முக்கிய விவசாய வேலைகளைத் தவிர்க்கவும்)
சந்திரன் பூமியைச் சுற்றி வரும் பாதையில் சுமார் 13.5 நாட்களில் ஒரு முறை சூரியனின் சுற்றுப் பாதையில் குறிப்பிட்ட இடத்தில் கடக்கிறது. இந்த நாள் தவிர்க்க வேண்டிய நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது கிட்டத்தட்ட கிரகணம் என்றே கூறலாம். இந்த நாட்காட்டியில் தவிர்க்கவும் என்று குறிப்பிட்டுள்ள நாளில் அந்த குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு முன்பு ஆறு மணி நேரமும் பின்பு ஆறு மணி நேரமும் விதைத்தல், நாற்று நடுதல், இலைவழி உரத் தெளிப்பு, போன்ற முக்கியமான வேலைகளைத் தவிர்ப்பது நன்மை தரும்.

4. அபோஜி – தொலைவில் உள்ள சந்திரன் 
இந்த நாளில் பூமியில் இருந்து சந்திரன் அதிகபட்ச தொலைவில் இருக்கும். இந்த நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டு்ளள இந்த நாளில் குறிப்பிட்டுள்ள மணியில் முன்பு 6 மணி நேரமும் பின்பு 6 மணி நேரமும் முக்கியமாக விதைப்பது மட்டும் தவிர்க்கவும் ஆனால் உருழைக்கிழங்கு மட்டும் நடவு செய்யலாம். அவ்வாறு உருழைக்கிழங்கு நடவு செய்தால் விளைச்சல் பெரிய அளவில் மாறுதல்கள் இல்லாவிட்டாலும் கிழங்கு சற்று பெரிதாகவும் சுவை கூடுதலாகவும் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

5. பெரிஜி – அண்மை சந்திரன்
இந்த நாளில் சந்திரன் தனது சுற்று வட்டப்பாதையில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி இருக்கும். இந்த நாளில் விதைத்தல், நாற்று நடுதல் போன்றவை தவிர்க்க வேண்டும். அண்மையில் இரண்டு மூன்று வருடங்களில் கிடைத்த தகவல்கள் இந்த நாளில் (நெல், தர்பூசணி, மஞ்சள், தட்டைப்பயிறு, போன்றவை) வெவ்வேறு பகதிகளில் விதைத்த விவசாயிகள் அனுபவித்த உண்மை. ஓரளவிற்கு விளைந்த விளைப் பொருட்கள் கூட அவற்றின் சுவை மாறுபட்டு (சுமார் 75% வரை குறைந்து) காணப்பட்டது.

6. அமாவாசை 
இந்த நாள் அனைவரும் அறிந்த ஒன்று இந்த நாளில்சூரியனுக்கு அருகில் சந்திரன் இருக்கும் இது 29.5 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது இந்த நாளில் சேமித்து வைக்க வேண்டிய விதைகள், வைக்கோல் போன்ற கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தட்டைகள் இவற்றை அறுவடை செய்து பக்குவப்படுத்தி வைக்கலாம் மர வேலைகளுக்கு தேவையான மரங்கள், மூங்கில் போன்றவற்றை அறுவடை செய்யலாம் கம்போஸ்ட் படுக்கையை புரட்டிவிடுதல் உழவு செய்த வயலில் கம்போஸ்ட் படுக்கையை புரட்டிவிடுதல் உழவு செய்த வயலில் கம்போஸ்ட் இடுதல் போன்றவற்றையும் செய்யலாம்.
3. சந்திரன் எதிர் சனி அமையும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு உள்ள 48 மணி நேரத்திற்குள் விதைத்தால் நலம்
4. இந்த நாளில் அனைத்து விவசாய வேலைகளையும் செய்யலாம்.

7. பெளர்ணமி 
1. இந்த நாளில் சந்திரன், சூரியனிலிருந்து தொலைவில் இருக்கும் இந்த நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு 48 மணி நேரம் முன்பு விதைகளை விதைத்தால் செடிகள்  வேகமாக வளர்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியே அந்த செடிகள் தாங்கும் சக்தியை ஓரளவு இழக்க காரணமாகிறது ஆதலால் ஓரளவு நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விதைகள் விரைவில் முளைப்பதால், நாற்றுகள் ஓரளவு முதிர்ச்சி அடையும் வரை பாதுகாப்பு மிகவும் அவசியம்.
2. இந்த நாளில் காலை நேரத்தில் 10.00 மணிக்குள் B.D.501 (கொம்பு சிலிக்கா) தெளித்தால் பூஞ்சாண நோய்கள் தடுக்கப்படுகிறது.
3.பஞ்சகவ்யம் தெளிக்க மிகவும் உகந்த நாள்

8. சந்திரன் எதிர் சனி 
இந்த நாள் சந்திரன், பூமி, சனி கிரகம் மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமைகின்ற நாள்
1. இவ்வாறு அமையப்பெறும் நாளில் காலை நேரத்தில் B.D.501 தெளிப்பு மிகுந்த பலனை அளிக்கிறது.
2. இந்த நாளில் விதைத்த விதைகள் மிக மிக ஆரோகியமான நாற்றுகளாக வளர்கின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்புத் திறனும் பூச்சிகள் தாக்குதல்களைக் கூட எதிர்த்து வளரும் திறனும் அதிகரிக்கிறது.

9. இராசிகளில் சந்திரன் பயணிக்கும் நாட்கள் 
ஒவ்வொரு இராசியும் ஒவ்வொரு மூலக்கூறுகள் அடிப்படையில் சக்திகளை வெளிப்படுத்துகிறது அவை
மேஷம், சிம்மம், தனுசு = நெருப்பு = விதைகள், பழங்கள்
ரிஷபம், கன்னி, மகரம் = மண் = கிழங்குகள், வேர்கள்
மிதுனம், துலாம், கும்பம் = காற்று = பூக்கள்
கடகம், விருச்சிகம், மீனம் = நீர் = இலைகள், தண்டுகள்
இவ்வாறு வெளிப்படும் சக்திகள் சந்திரன் மூலம் பூமியில் உள்ள தாவரங்களில் அந்தந்த குறிப்பிட்ட பாகங்களில் எற்படும் மாறுதல்களிலும், வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடுகளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த ராசிகளில் சந்திரன் பயணிக்கும் நாட்களுக்கு ஏற்றவாறு தாவரங்களை பிரித்து, விதைப்பு, நாற்றுநடவு, அறுவடை போன்ற வேலைகள் செய்வது மிகுந்த பலனை அளிக்கிறது. இவ்வாறு அந்த மூலக்கூறுகளின்  அடிப்படையில் தாவரங்களைப் பரித்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
1. நெருப்பு விதைகள், பழங்கள் நெல், கோதுமை, பயறுவகைகள், தக்காளி, கத்தரி, பீன்ஸ், மா, பலா, நிலக்கடலை, பருத்தி போன்றவை.
2. மண் கிழங்குகள், வேர்கள் நன்னாரி, வெட்டிவேர், மரவள்ளி, உருளைக் கிழங்கு, சேனை, மஞ்சள், இஞ்சி, காரட், பீட்ரூட் போன்றவை.
3. காற்று பூக்கள் காலிபிளவர், ரோஜா, மல்லி, போன்றவை.
4. நீர் இலைகள், தண்டுகள் கறிவேப்பிலை, முட்டைகோசு, வெங்காயம், கீரை வகைகள், இலைக்காக வாழை நடுதல், மர வேலைக்கான மரங்கள் போன்றவை.
இவ்வாறு பிரித்து அந்தந்த மூலக்கூறுளாக குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் குறிப்பிட்ட தாவரங்களுக்குண்டான வேலைகளை செய்வது மிகவும் நன்மைகளைத் தரும்.





4. தயாரிப்பு முறை:
குறிப்பிட்ட உயிர்சக்தி தயாரிப்புகளை இப்பொழுதுப் பயன்படுத்துகிறார்கள். இதனுடைய விளைவுகளை விவசாயிகள் தங்களுடைய அனுபவத்தால் அறிந்து கொள்கின்றனர். இரண்டு வகையான நொதிக்கப்பட்ட பொருட்களின் அளவிடுதலே தயாரிப்பு முறைகள் ஆகும். முதல் வகையில், 6 வேறுபட்ட மூலிகைப் பொருட்கள் உள்ளன. 502 - 507 என்ற எண்ணிட்ட பொருட்களை சிறிய அளவில் இயற்கை உரம் மற்றும் மட்கிய உரத்தில் சேர்க்க வேண்டும். இரண்டாவது வகையில், 500 மற்றும் 501 எண்ணிட்ட பொருட்களைத் தெளிக்க வேண்டும். குதிரைவால் செடியை கொதிக்க வைத்து தயாரிக்கும் ஒன்பதாவது தயாரிப்பான 508ஐ ஈரமான காலங்களில் அளிப்பதால் பூஞ்சான் நோய் தாக்கத்தைத் தவிர்க்கலாம்.
உயிர்சக்தி 500 மாட்டுக் கொம்பு உரம்:
இது சாணத்தை பயன்படுத்தி நொதிக்கப்படுகிறது. மண் வளத்தை மேம்படுத்துவதற்கும், தரமற்ற மண்ணைப் புதுப்பிப்பதற்கும் இந்த உரம் பயன்படுகிறது. மாட்டுக் கொம்புகள் செப்டம்பர் / நவம்பர் மாதத்தில் புதைக்கப்பட்டு, பிப்ரவரி / மார்ச் மாதத்தில் வெளியே எடுக்கப்படுகிறது. நிலம் நல்ல காற்றோட்டமாக இருக்கும் பொழுதும், குளிர் காலத்தில் மண்ணின் சக்திகள் அதிகளவில் இயங்கும் பொழுது இந்த முறையை பின்பற்றுதல் வேண்டும்.
தேவையான பொருட்கள்:
  • மாட்டுக் கொம்புகள்
  • பால் சுரக்கக் கூடிய பசுவின் சாணம். 50 - 150 கிராம் அளவு சாணம் / கொம்பு (கொம்பின் அளவைப் பொறுத்து)
தயாரிப்பு முறைகள்:
  • உயிர்சக்தி 500 தயாரிப்பதற்காக, சாணம் சேகரிக்கும் 2 நாட்களுக்கு முன்னர் மாடுகளுக்கு அதிகத் தரமுள்ள தீவனத்தை அளிக்க வேண்டும். (நல்ல பச்சைத் தீவனம், குறைவான புரோட்டீன் உள்ள செயற்கைத் தீவனம்)
  • புதைக் குழியை 18” ஆழத்துக்கு தோண்ட வேண்டும். நீர் வழிந்தோடாமல், ஆழமான வேர்ப்பகுதி அல்லது மண்புழுக்கள் இல்லாமல் இந்த குழி இருக்க வேண்டும். உயிர்சக்தி எந்த மண்ணில் தயாரிக்கிறோமோ அந்த மண்ணின் இயல்பு இந்த உயிர்சக்திக்கு வரும். இதனால் நல்ல தரமுடைய நிலத்தை குழிக்காக தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • எந்த விதமான பூச்சு இல்லாமல் மாட்டுக் கொம்புகளை சேகரிக்க வேண்டும்.
  • சாணத்தை சேகரிக்க வேண்டும்.
  • மாட்டுக் கொம்புகளை சாணத்துடன் அக்டோபர் / நவம்பர் மாதத்தில் சேர்க்க வேண்டும்.
  • கொம்புகளின் அடிப்பகுதி 1” அளவுக்கு கீழ்நோக்கி, 50 சதவீதம் மட்கிய உரம் மற்றும் மண் சுற்றியும் இருக்குமாறு புதைத்து வைக்க வேண்டும்.
  • மண்ணைக் கொண்டு குழியை மூடி, 4 - 6 மாதத்திற்கு வைக்க வேண்டும். மண் வளமாக இல்லையென்றால், 50 சதவீத மட்கிய உரத்தைச் சேர்ப்பதால் மண் வளத்தை அதிகப்படுத்தலாம்.
  • குழியை ஈரப்பதத்துடன், நிழலுடன், 200 செல்சியஸ் தட்பவெப்ப நிலையில் களை மற்றும் மண்புழுக்கள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும்.
  • 4 மாதத்திற்கு பிறகு சாணம் நொதித்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மாட்டு கொம்பு ஒன்றைத் தோண்ட வேண்டும். பச்சை சாணம் மண் வாசனையுடன் கூடிய, அடர்ந்த நிறத்தில் உள்ள தாவரமக்காக (உயிர்சக்தி 500) மாறியிருந்தால், அது பயன்படுத்துவதற்கு தகுதியாகிறது. உயிர்சக்தி 500ஐ எடுத்து பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், அப்படியே விட்டுவிட வேண்டும்.
அளிக்கும் முறை:
பனிப் பொழியும் போது (அதாவது, மாலை நேரங்களில்) அளிக்க வேண்டும்.
  • 15 லிட்டர் மழை நீர் / சுடுநீரில் (தோராயமாக 15 - 200 செல்சியஸ்) ஒரு ஏக்கருக்கு 25 கிராம் உயிர்சக்தி 500ஐ கலந்து அளிக்க வேண்டும்.
  • தண்ணீரில் கால்சியம், இரும்பு, மற்றத் தாதுக்களின் அளவை சரிபார்க்க வேண்டும்.
  • ஒரு மணி நேரத்திற்கு இடதுப்பக்கம் மற்றும் வலதுபக்கமும் மாற்றி மாற்றி சூழல் போன்று கலக்க வேண்டும்.
  • மாலையில் சூரியன் மறைவதற்கு முன் தெளிக்க வேண்டும்.
  • ஒரு வருடத்திற்கு 4 முறை தெளிக்க வேண்டும். அதாவது பிப்ரவரி, மே, நவம்பர், டிசம்பர் மாதங்களில் .
சேமிப்பு:
  • மண் பானைகளில் வைத்து தளர்வாக மூட வேண்டும்.
  • பானையைச் சுற்றி தென்னை நார் தக்கையை வைப்பதால், ஈரப்பதமாக எப்பொழுதும் வைக்கலாம்.
  • 250 செல்சியஸ் வெப்ப நிலைக்கு மேல் போகாமல், இருட்டறையில் வைக்க வேண்டும்.
  • ஒரு வருடத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும்
விளைவுகள்:
  • வேரின் செயல்களை மேம்படுத்துகிறது.
  • மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் வாழ்வை அதிகப்படுத்துகிறது.
  • அமிலத் தன்மை மற்றும் தழைச்சத்தின் அளவை ஒழுங்குப்படுத்துகிறது.
  • நுண் ஊட்டச்சத்துக்கள் வெளி வருவதற்கு உதவுகிறது.
  • முளைப்புத் திறனை அதிகப்படுத்துகிறது.
உயிர்சக்தி மாட்டுக் கொம்பு சிலிக்கா:
நன்றாக பொடி செய்த குவார்ட்ஸ் துகள்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இந்தத் துகள்கள் நல்ல தரம், வடிவம் மற்றும் சுத்தமாக இருக்க வேண்டும். உயிர்சக்தி 500 ஐ தயாரிப்பு முறை மாதிரியே இதையும் புதைக்க வேண்டும். ஆனால் இந்த முறையை வெயில் காலத்தில் செய்ய வேண்டும். (ஏப்ரல் / மே மாதத்தில் புதைத்து, செப்டம்பரில் வெளியே எடுக்க வேண்டும்). இந்த சமயத்தில் நிலம் நல்ல காற்றோட்டமாகவும், விண்வெளி ஒளிச் சக்தி அதிகச் செயலாக்கத்தில் இருக்கும்
தேவையான பொருட்கள்:
  • மாட்டுக் கொம்புகள்
  • சிலிக்கா குவார்ட்ஸ் துகள்கள், 200 - 300 கிராம் அளவு குவார்ட்ஸ் துகள்கள் / கொம்புகள்
தயாரிக்கும் முறை:
  • சிலிக்கா குவார்ட்ஸை உடைத்துத் தூளாக்க வேண்டும்
  • இரண்டு கண்ணாடித் தட்டுக்களின் இடையே வைத்து அரைத்து நன்றாக பொடி செய்ய வேண்டும்
முதல் கண்ணாடித் தட்டு – 12” சதுரமாக, 9 மி. மீட்டர் தடிமன்னான மரப்பலகையால் ஆனது. இரண்டாவது கண்ணாடித் தட்டு  - 4” சதுர கண்ணாடித்தட்டு கைப்பிடியுடன் கூடிய மரப்பலகையின் மீது வைக்கப்படும்.
  • தயாரிக்கும் போது முகமூடிகள் அணிந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் குவார்ட்ஸ் புகையை சுவாசித்து, சிலிக்காஸிஸ் வியாதி ஏற்படும்.
  • தண்ணீருடன் சேர்த்து திட்டமான புகையை உருவாக்க வேண்டும்.
  • கொம்புகளை சிலிக்கா பூச்சு கொண்டு நிரப்ப வேண்டும்.
  • கொம்புகளை குழிகளில் 1” அளவுக்கு அடிப்பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு புதைக்க வேண்டும். 50 சதவீத மட்கிய உரம் மற்றும் மண் சுற்றியும் இருக்க வேண்டும். மார்ச் / ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இதை வைத்திருக்க வேண்டும்.
அளிப்பு முறைகள்:
BD 500 ஒன்று அல்லது இரண்டு அளிப்புகளுக்குப் பிறகு 501 ஐ அளிக்க வேண்டும். பனிப் பொழியும் வேளையில், அதாவது அதிகாலை 6 – 8 மணிக்கு சூரியன் உதிக்கும் வேளையில் தெளிக்க வேண்டும்.
  • 15 லிட்டர் வெது வெதுப்பான நீரில் 1 கிராம் சிலிக்காவை கரைக்க வேண்டும்.
  • சூரிய உதயத்திற்கு முன், சிலிக்காவை தண்ணீரில் கரைத்து  வலதுப் பக்கம் மற்றும் இடதுப் பக்கம் மாற்றி மாற்றி சுழல் போன்று கலக்க வேண்டும்.
  • பயிர்கள் குறை அழுத்தம் உடைய தெளிப்பான் உதவியுடன் தெளிக்க வேண்டும்.
  • பயிரிடும் காலத்தில் 2 முறை தெளிக்க வேண்டும். அதாவது, பயிரின் ஆரம்ப நிலையிலும், அறுவடைக்கு சற்று முன்னரும் தெளிக்க வேண்டும்.
சேமித்தல்:
திறந்த வெளியில் சூரிய வெளிச்சம் படுமாறு 3 வருடங்களுக்கு தளர்வாக மூடிய கண்ணாடிக் குடுவையில் சேமிக்க வேண்டும்.
பயன்கள்:
  • ஒளி வளர்சிதை மாற்றம், ஒளிச்சேர்க்கை, பச்சையத்தை அதிகரிக்கிறது.
  • நிறம், மணம், சுவை மற்றும் செடிகளுக்கிடையே வைத்திருக்கும் தரத்தை மேம்படுத்துகிறது.
மட்கிய உரத் தயாரிப்புகள்  505 – 507:
பலதரப்பட்ட மூலிகைச் செடிகளிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. இதனால் அதனுடைய உள்ளே இருக்கும் குணங்கள் அதிகப்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் மற்ற கடல் கடந்த நாடுகுளிலும், தாவரமக்கு உருவாவது அதிகப்படுத்தப்படுகிறது மற்றும் மதிப்புள்ள ஊட்டச்சத்துக்கள் இழப்பும் குறைக்கப்படுகிறது.
பிடி 502 யேரோ (அக்கிலியா மில்லிஃபோலியம்):
இது யேரோ பூக்கள் மற்றும் ஆண் விலங்குடைய சிறுநீர் பை தயாரிக்கப்படுகிறது.
தயாரிப்பு முறை:
  • ஆண் மானுடைய சிறுநீர்ப் பை அதனுடைய கொம்புடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் பயிர்களின் ஹார்மோன் விளைவை அதிகப்படுத்துகிறது
  • ஆண் மானுடைய சிறுநீர்ப்பையும், யேரோ பூக்களின் மணமும் ஒரே மாதிரி இருக்கும்.
  • பூக்களுடைய ஹார்மோன் செயலாக்கம் சிறுநீர்ப்பையின் செயலாக்கத்தால் அதிகப்படுத்தப்படுகிறது.
  • ஆண் விலங்குடைய சிறுநீர்ப்பையை சுற்றியுள்ள கிளைகளின் மூலம் ஹார்மோன் அமைப்பிலிருந்து சக்தி பெறப்படுகிறது.
  • சிறுநீர்ப்பையை ஊத வேண்டும்.
  • காற்றில் உலர வைக்க வேண்டும். பின் சிதைந்துவிடும். இந்த சமயத்தில் ஈரமாக வைத்திருப்பதால் மென்மையாக மாற்றப்படும்.
  • சிறுநீர்ப் பையின் மேல்பகுதியை வெட்டி ஒரு புனல் வழியாக யேரோ பூக்களை நிரப்ப வேண்டும்.
  • செடியின் சாறினைக் கொண்டு இந்த பூக்களை ஈரப்பதமாக்க வேண்டும். பின் பஞ்சைக் கொண்டு இந்த திறப்பை அடைக்க வேண்டும்.
  • மூடப்பட்ட கூடைகளில் சேமிக்க வேண்டும். இதனால் எலி மற்றும் இதரப் பூச்சிகளின் தொல்லையிலிருந்து பாதுகாக்கலாம்.
புதைக்கும் மற்றும் வெளியே எடுக்கும் காலம்:
  • மார்ச் மாதத்தில் செய்தால் ஹார்மோன் தாக்கத்தைப் பெறலாம்.
  • செப்டம்பரிலிருந்து மார்ச் வரை மண் பானையில் வைத்து நிலத்தில் புதைக்க வேண்டும்.
பி. டி. 503 சாமேமில்லி (மெட்டிகுரியா சாமோமில்லா):
சாமேமில்லி பூக்களை மாட்டின் குடலுடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது.
தயாரிப்பு முறைகள்:
அறுவடை:
  • இதழ்கள் மட்டமாக இருக்கும்போது (காலை 10 மணி அளவில்) பூக்களைப் பறிக்க வேண்டும்.
  • 2 வரிசை இதழ்களுடன் உள்ள பூக்கள் தான் இந்த தயாரிப்புக்கு ஏற்றது.
  • அறுவடை செய்த பின் உலர வைக்க வேண்டும்.
சேமித்தல்:
காற்றுப் புகாத கொள்கலன்களில் சேமிக்க வேண்டும்.
தயாரிப்பு முறை:
  • மாடு அல்லது எருதுடைய குடலைப் பயன்படுத்தலாம்.
  • குடலை கழுவக் கூடாது.
  • 15 செ.மீ துண்டுகளாக வெட்ட வேண்டும்.
  • பால் கறப்பது போல் கையை வைத்து, குடலின் உள்ளே உள்ள செறிக்காத பொருட்களை அழுத்தி எடுக்க வேண்டும்.
  • துண்டுப் பகுதிகளின் ஓர் ஓரத்தை நூல் கொண்டு கட்டிவிட வேண்டும்.
  • புனலை பயன்படுத்தி பூக்களை இதில் நிரப்ப வேண்டும்.
  • மிகவும் இறுக்கமாக அல்லது மிகவும் தளர்வாகவோ கட்டக்கூடாது.
  • பூக்களால் நிரப்பிய துண்டுகளை கட்டாக கட்டி, மண்பானையில் வைத்து நல்ல வளமான மண் சுற்றியும் இருக்குமாறு வைக்க வேண்டும்.
புதைக்கும் மற்றும் வெளியே எடுக்கும் காலம்:
  • அக்டோபரில் புதைத்து, பிப்ரவரி / மார்ச் மாதம் வரை மண்ணில் வைத்திருக்க வேண்டும்.
பி. டீ. 504 இமாலாயன் ஸ்டிங்கிங் நெட்டில் (அர்டிக்கா பர்விஃப்ளோரா):
தயாரிப்பு முறை:
  • மண்பானைகளில் உலர்ந்த இலைகளைப் போட்டு நிரப்ப வேண்டும்.
  • நன்றாக அழுத்தி நிரப்ப வேண்டும்.
  • பானையின் மூடி திறந்து இருக்க வேண்டும்.
  • பானை நன்றாக வெயில் படும்படி வைக்க வேண்டும்.
(நிரப்புவதற்கு முன் உலர்ந்த இலைகளை இலைகளின் சாறைக் கொண்டு ஈரப்படுத்த வேண்டும்)
புதைக்கும் மற்றும் வெளியே எடுக்கும் காலம்:
  • மே, செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும்.
  • ஒரு வருடம் கழித்து செப்டம்பர் மாதத்தில் இந்த தயாரிப்பை வெளியே எடுக்க வேண்டும்.
பி. டி. 505 இமாலாயன் ஓக் பட்டை (குர்கஸ் க்ளாக்கா):
  • ஓக் மரத்தின் பட்டையை பொடிக்க வேண்டும்.
  • ஏதாவது ஒரு வளர்ப்பு பிராணியின் மண்டை ஓட்டைப் பயன்படுத்த வேண்டும்.
  • கால்சியம் சத்துக்காக மண்டை ஓடு பயன்படுத்தப்படுகிறது.
  • பொடித்த ஓக் மரத்தின் பட்டைகளை மண்டை ஓட்டின் குழியில் வைத்து அனைத்து ஓட்டைகளையும் அடைக்க வேண்டும்.
  • மண்டை ஓட்டை ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் களை மற்றும் தாவர மக்கு உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இதனால் பயிர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
  • இந்த தயாரிப்பை வெளியே எடுக்கும்போது ஒருவித மண் வாசனை வெளிவரும்.
  • பின் இந்த வாசனை மெதுவாகக் குறையும்.
  • பூஞ்சான் வளர்ச்சி கூட தென்படும்.
  • அடிக்கடி கிளறிவிட வேண்டும்.
புதைக்கும் மற்றும் எடுக்கும் காலம்:
  • செப்டம்பர் மாதத்தில் புதைத்து, மார்ச் மாதத்தில் வெளியே எடுக்க வேண்டும்
பி. டி. 506 டான்டிலன் (டாராசிக்கம் அஃபிசினாலிஸ்):
மாடுகளின் வயிற்றைச் சுற்றியுள்ள தோலுடன் டான்டிலன் செடியை சுற்றி வைத்து தயாரிக்கப்படுகிறது.
தயாரிப்பு முறை:
  • மாட்டினுடைய வயிற்றை சுற்றிய தோலை பயன்படுத்த வேண்டும்.
  • டான்டிலன் பூக்கள் ஒளியை எளிதில் கிரகித்துக் கொள்ளும். ஆகவே, இதை மாட்டினுடைய வயிற்றைச் சுற்றிய தோலில் வைக்க வேண்டும்.
  • மாட்டினுடைய வயிற்றுத் தோலை கழுவக் கூடாது.
  • இதில் டான்டிலன் பூக்களை வைத்து நூல் கொண்டு கட்டிவிட வேண்டும்.
  • மண் மற்றும் மக்கிய உரம் கலந்த கலவை உள்ள பானையில் இந்த பையை வைக்க வேண்டும்.
  • இந்த தயாரிப்பை வெளியே எடுக்கும் போது மாட்டினுடைய வயிற்றைச் சுற்றியுள்ள தோல் தெரியும் அல்லது சில சமயங்களில் தெரியாது.
புதைக்கும் மற்றும் எடுக்கும் காலம்:
  • செப்டம்பர் மாதத்தில் புதைத்து, மார்ச் மாதத்தில் வெளியே எடுக்க வேண்டும்
பி. டி. 507 வேலிரியன் (அஃபிசினாலிஸ்):
வேலிரியன் பூக்களின் சாறு இந்த தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு முறை:
  • பறித்த பூக்களை உரல்கல்லில் போட்டு பசைக்குழம்பு போல் செய்ய வேண்டும்.
  • 1 : 4 என்ற விகிதத்தில் தண்ணீருடன் கலந்து பாட்டிலில் வைக்க வேண்டும்.
  • குளிர்ந்த அறையில் சேமிக்க வேண்டும்.
தொகுப்பு:
தயாரிப்பு
செடி அல்லது பொருட்கள்
தயாரிப்புடன் தொடர்புடையவை
கிரகம்
உறுப்பு
விளைவு
502
யோரோ பூ (அக்கிலியா மில்லிஃபோலியம்)
கந்தகம் (S)
சாம்பல் (P)
நுண்ஊட்டச்சத்து
வெள்ளி
சிறுநீரகம்
நுண் ஊட்டச் சத்துக்களை திரவ வடிவில் உறிஞ்சிக் கொள்ளுவதற்கு பயிர்களுக்கு உதவுகிறது
503
சாமேமில்லி (மெட்டிகுரியா சாமோமில்லா)
கால்சியம் (Ca)
கந்தகம் (P)
புதன்
நுரையீரல் சுரப்பிகள்
தழைச்சத்தை மட்கிய உரத்தில் நிலைநிறுத்துகிற மண்ணின் வாழ்வை உயர்த்துகிறது
504
ஸ்டிங்கிங் நெட்டில் (அர்டிக்கா பர்விஃப்ளோரா)
கந்தகம் (S)
சாம்பல்சத்து (K)
கால்சியம் (Ca)
இரும்பு (Fe)
செவ்வாய்
பித்தப்பை
மண் நலத்தை அதிகப்படுத்துகிறது. மண்ணுக்கு தேவையான தனித்தனியான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது
505
ஓக் மரப்பட்டை (குர்கஸ் க்ளாக்கா):
கால்சியம் (Ca)
நிலா
இனப்பெருக்க உறுப்பு
பயிர் நோய்களை குணப்படுத்தக் கூடிய சக்திகளை வழங்குகிறது
506
டான்டிலன் (டாராசிக்கம் அஃபிசினாலிஸ்)
சிலிக்கான் (Si)
அல்லது சிலிசக் அமிலம்
வியாழன்
கல்லீரல்
சிலிக்கான் மற்றும் பொட்டாசியம் இடையேயுள்ள உறவை அதிகப்படுத்துகிறது. இதனால் சிலிக்கான் காஸ்மிக் சக்திகளை மண்ணிற்கு அளிக்கிறது
507
வேலிரியன் பூ (வேலிரியனா அஃபிசினாலிஸ்)
சாம்பல்சத்து (P)
சனி
மண்ணீரல்
மட்கிய உரம் தயார் ஆவதை அதிகப்படுத்துகிறது. இதனால் பாஸ்பரஸ் மண்ணால் முறையாக பயன்படுத்தப்படுகிறது
  • ஒவ்வொரு 5 கன மீட்டர் மட்கிய உரத்துக்கு 1 கிராம் (502 – 506) அளவு மற்றும் 10 மி. லிட்டர் 5072.5 லிட்டர் தண்ணீரில் 5 சதவீதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும். இது திரவ நிலையில் உள்ள உரங்கள் மற்றும் மாட்டு உரக்குழிகளில் சேர்க்க வேண்டும்
புதைக்கும் குழிகள் தயாரிப்பு முறைகள்:
  • அளவு: ஆழம் = 12 – 18” : நீளும் = 2 அடி; அகலம் – 2 அடி
  • இடம் : நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மரங்கள் இல்லாத வளமான மண்
  • பராமரிப்பு: களை இல்லாமல் இருக்க வேண்டும். குழியைச் சுற்றி தோண்ட வேண்டும். தென்னை நார்க் கழிவுகளைக் கொண்டு மூட வேண்டும்.
  • குழியைச் சுற்றி செங்கல் வைத்து கட்ட வேண்டும்
  • புதைத்த தேதி, எடுக்கும் தேதி, வரைபட திட்டம், தயாரிப்பு முறை பற்றிய விவரம் குறிப்பிட வேண்டும்
  • குழியின் வெப்பநிலை 25 - 300 செல்சியஸ் வரை இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
  • தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சேமிப்பு முறைகள்:
  • குளிர்ந்த, ஈரப்பதம், இருட்டான நல்ல காற்றோட்டத்துடன் இருக்குமாறு தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • தயாரிப்புக்கான விவரங்கள் அடங்கிய சீட்டுடன் கண்ணாடி குடுவைகளில் வைக்க வேண்டும்.
  • சேமிப்பு கலங்களில் குறிப்பாக தென்னை நார் தக்கையில் வைத்து சேமிக்க வேண்டும்.
  • 500 மற்ற சி. பி. பி தயாரிப்புக்களை கலங்களில் மட்டமாக சிறிய துவாரத்துடன் வைக்க வேண்டும்.
  • இந்த தயாரிப்புக்களை அடிக்கடி திருப்பி ஈரப்பதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
பி. டி. 508 (ஈக்விசிட்டம் அர்வென்ஸ்):
  • சிலிக்கா அதிக அளவு இருக்கும். தேயிலைப் பயிரின் ஆரம்ப பருவத்தில் பூஞ்சானைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுகிறது.
  • முழு நிலவின் மேலும் (2 – 4 நாட்களுக்கு முன்பு), நிலவு சனிக் கிரகத்திற்கு எதிராக வரும் போதும், B0 50ஐ போன்றே தெளிக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:
  • 1 கிலோ ஈக்கிசிட்டம் அர்வென்ஸ் (குதிரைவால் செடி) அல்லது சவுக்கு
  • 10 லிட்டர் தண்ணீர்
தயாரிப்பு முறை:
  • ஈக்கிசிட்டம் அர்வென்ஸ் அல்லது சவுக்கை சுடுநீரில் 2 மணி நேரத்துக்கு கொதிக்க வைப்பதால் அடர்த்தியான தேயிலை நிறமாக மாறும். இதே மாதிரி 2 நாட்களுக்கு செய்ய வேண்டும்.
தெளிக்கும் முறை:
  • 50 கிராம் தயாரிப்பை 10 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்.
  • வளர்ச்சிப் பருவத்தின் ஆரம்பத்தில் செடிகளின் மீதோ அல்லது மண்ணின் மீதோ தெளிக்க வேண்டும்.
  • பி. டி. 508 மீதமான பூஞ்சான் பிரச்சனைக்கும் பி. டி. 501 அதிகத் தாக்குதலின் போது நல்ல விளைவைத் தரும்.
தகவல்:


செல்வராஜ், என்., பி. அனுஷா, எம். குரு சரஸ்வதி, 2006. அங்கக தோட்டக்கலை நிலைத்திருக்கக் கூடிய வேளாண்மையை உருவாக்குகிறது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதக மண்டலம்.

Source: http://agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_biodynmic_ta.html

No comments: